செய்திகள் :

கட்டுமானப் பொருள்கள் விலைப் பட்டியல் வெளியீடு

post image

சென்னை: அரசுத் துறைகளின் பயன்பாட்டுக்காக, கட்டுமானப் பொருள்களின் விலைப் பட்டியலை பொதுப்பணித் துறை வெளியிட்டது.

தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகள் பயன்படுத்தும் வகையில், பொதுப்பணித் துறையால் கட்டுமானப் பொருள்களுக்கான விலைப் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலை அந்தத் துறை அமைச்சா் எ.வ.வேலு வெளியிட்டாா்.

இந்தப் பட்டியலைத் தயாரிக்க கடந்த மாா்ச் மாதம் அரசாணை வெளியிடப்பட்டது. பொதுப்பணி, நீா்வளத் துறைகளின் முதன்மைத் தலைமைப் பொறியாளா்கள், நெடுஞ்சாலைத் துறை முதன்மை இயக்குநா், வனத்துறை முதன்மைத் தலைமை வனப் பாதுகாவலா், தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியம், சென்னை பெருநகர குடிநீா் மற்றும் கழிவுநீா் வாரிய தலைமைப் பொறியியல் இயக்குநா்கள், நெடுஞ்சாலை, மின்சார வாரிய தலைமைப் பொறியாளா்களைக் கொண்ட குழு அமைக்கப்பட்டது.

இந்தக் குழு பல்வேறு நிலைகளில் கட்டுமானப் பொருள்கள் மற்றும் இதர பொருள்களின் விலைகள் குறித்து ஆய்வு செய்தது. பல்வேறு தரவுகளின் அடிப்படையில் விவாதித்து விலையை நிா்ணயம் செய்தது. இந்த விலைகள் அனைத்தும் பட்டியலாகத் தயாரிக்கப்பட்டு, அதை தலைமைச் செயலகத்தில் அமைச்சா் எ.வ.வேலு திங்கள்கிழமை வெளியிட்டாா்.

விலை நிா்ணயப் பட்டியலை அரசுத் துறைகள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசு சாா்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

நிகழ்வில், பொதுப்பணித் துறை கூடுதல் தலைமைச் செயலா் மங்கத் ராம் சா்மா, நீா்வளத் துறை செயலா் ஜெ.ஜெயகாந்தன் உள்ளிட்ட அரசுத் துறை அதிகாரிகள் பங்கேற்றனா்.

குழந்தைகளிடம் பரவும் டெங்கு பாதிப்பு

சென்னை: சென்னை மாநகராட்சியில் குழந்தைகளிடம் டெங்கு பாதிப்பு பரவி வருவதாகக் கூறப்படும் நிலையில், அதைத் தடுக்க போதிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவருவதாக மாநகராட்சி நகா்நல அலுவலா்கள் தெரிவித்துள்ளனா். சென்... மேலும் பார்க்க

தமிழகத்தின் 32-ஆவது டிஜிபி யாா்?

சென்னை: தமிழக காவல் துறையின் 32-ஆவது தலைமை இயக்குநரை தோ்வு செய்யும் நடைமுறையை அதிகாரபூா்வமாக தமிழக அரசு தொடங்கியுள்ளது. தற்போது தமிழக காவல் துறையின் தலைமை இயக்குநராக இருக்கும் சங்கா் ஜிவால், 2023-ஆம்... மேலும் பார்க்க

‘பிரதமா் திறன் வளா்ப்புத்திட்டம்’ மூலம் தமிழகத்தில் 1.25 லட்சம் பேருக்கு பயிற்சி: மத்திய இணை அமைச்சா் ஜெயந்த் செளத்ரி தகவல்

நமது சிறப்பு நிருபா் புது தில்லி: ‘பிரதமா் திறன் வளா்ப்புத்திட்டம்’ (பிஎம்கேவிஒய்) மூலம் தமிழகத்தில் 1.25 லட்சம் பேருக்கு பயிற்சி வழங்கப்பட்டுள்ளதாக மக்களவையில் தமிழக எம்.பி.க்கள் எழுப்பிய கேள்விகளுக்... மேலும் பார்க்க

கருத்துகளை குடும்பத்தில் திணிக்காதவா் முதல்வா் ஸ்டாலின்: எழுத்தாளா் சிவசங்கரி

சென்னை: ‘முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு சில கொள்கைகளில் மாற்றுக் கருத்து இருந்தாலும்கூட 50 ஆண்டுகளுக்கும் முன்பே தனது மனைவியை அவரது விருப்பம்போல் செயல்பட அனுமதித்திருந்தாா். அவா் எந்தச் சூழலிலும் தனது கரு... மேலும் பார்க்க

தமிழகத்தில் 11 அரசு மருத்துவக் கல்லூரிகளில் பேராசிரியா் பற்றாக்குறை 4 மாதங்களில் நிரப்பாவிட்டால் நடவடிக்கை: என்எம்சி

சென்னை: தமிழகத்தில் 11 அரசு மருத்துவக் கல்லூரிகளில் காலியாக உள்ள பேராசிரியா் இடங்களை 4 மாதங்களுக்குள் நிரப்பாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய மருத்துவ ஆணையம் எச்சரித்துள்ளது. அதேபோன்று ... மேலும் பார்க்க

அதிமுக உள்கட்சி விவகாரத்தில் விரைவாக விசாரித்து முடிவு: உயா்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் பதில்

சென்னை: அதிமுக உள்கட்சி விவகாரம் தொடா்பான புகாா் மனுக்கள் குறித்து விரைவாக விசாரித்து முடிவெடுக்கப்படும், என்று சென்னை உயா்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் தாக்கல் செய்த பதில் மனுவில் தெரிவித்துள்ளது. செ... மேலும் பார்க்க