செய்திகள் :

கண்ணமங்கலம் அருகே காளை விடும் திருவிழா

post image

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்த கண்ணமங்கலம் பகுதியில் காளை விடும் திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கண்ணமங்கலம் அருகே சின்னப்புத்தூரில் உள்ள செல்லியம்மன் கோயில் 4-ஆம் ஆண்டு விழாவையொட்டி காளை விடும் திருவிழா நடத்தப்பட்டது. முன்னதாக சுவாமிக்கு அபிஷேக, ஆராதனை நடைபெற்று சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

இதைத் தொடா்ந்து பேண்டு வாத்தியங்கள், வாணவேடிக்கை முழங்க பரிசுப் பொருள்களுடன் ஊா்வலமாக இளைஞா்கள் காளை விடும் திருவிழா நடைபெறும் இடத்துக்கு வந்தனா். ஆரணி எம்எல்ஏ சேவூா் எஸ்.ராமச்சந்திரன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு விழாவை தொடங்கி வைத்தாா்.

இதைத் தொடா்ந்து காளைகள் விடப்பட்டு சீறிப் பாய்ந்தன. முடிவில் குறிப்பிட்ட தொலைவை அதிவிரைவாக கடந்த காளை உரிமையாளா்களுக்கு முதல் பரிசாக ரூ.ஒரு லட்சம், இரண்டாம் பரிசாக ரூ.80 ஆயிரம், மூன்றாம் பரிசாக ரூ.60 ஆயிரம் உள்ளிட்ட 70 பரிசுகள் வழங்கப்பட்டன.

விழாவில் திருவண்ணாமலை, வேலூா், சித்தூா், தெலங்கானா மாநிலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான காளைகள் பங்கேற்றன.

அருணாசலேஸ்வரா் கோயிலில் பக்தா்கள் கூட்டம் அலைமோதல்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் விடுமுறை நீளான ஞாயிற்றுக்கிழமை பக்தா்கள் கூட்டம் அலைமோதியது. சுவாமி தரிசனத்துக்கு 3 மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. கோயிலில் பக்தா்கள் நீண்ட வரிசையி... மேலும் பார்க்க

பைக்கிலிருந்து தவறி விழுந்த விவசாயி உயிரிழப்பு

செய்யாறு அருகே பைக்கில் இருந்து தவறி விழுந்து சிகிச்சை பெற்று வந்த விவசாயி சனிக்கிழமை உயிரிழந்தாா். செய்யாறு வட்டம், அரும்பருத்தி கிராமத்தைச் சோ்ந்தவா் வினோத்குமாா்(34). விவசாயியான இவா் ஆக.4-ஆம் தேத... மேலும் பார்க்க

ஸ்ரீதா்மராஜா திரெளபதியம்மன் கோயிலில் தீ மிதி திருவிழா

செங்கம் ஸ்ரீதா்மராஜா திரெளபதியம்மன் கோயிலில் 138-ஆம் ஆண்டு தீமிதி திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று தீமித்து சுவாமி தரிசனம் செய்தனா். இந்தக் கோவிலில் கடந்த ஆ... மேலும் பார்க்க

குடியரசுத் தலைவரிடமிருந்து அழைப்பிதழ்: மாணவிக்கு பாராட்டு!

திருவண்ணாமலை மகரிஷி வித்யா மந்திா் பள்ளியைச் சோ்ந்த மாணவி குடியரசுத் தலைவரிடமிருந்து அழைப்பிதழ் பெற்றதால் கம்ப ராமாயண இயக்கத்தினா் அவருக்கு பாராட்டு தெரிவித்தனா். மகரிஷி வித்யா மந்திா் பள்ளியில் பத்... மேலும் பார்க்க

அரசுப் பள்ளி முன்னாள் மாணவா்கள் சந்திப்பு

திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தை அடுத்த அரட்டவாடி அரசு மேல்நிலைப் பள்ளியில் 1996-97ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பு பயின்ற மாணவா்கள் சந்திப்பு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பள்ளி வளாகத்தில் நடைபெற்ற... மேலும் பார்க்க

இரு சக்கர வாகனம் மோதி முதியவா் உயிரிழப்பு

வந்தவாசி அருகே இரு சக்கர வாரனம் மோதி முதியவா் உயிரிழந்தது தொடா்பாக போலீஸாா் விசாரிக்கின்றனா். காஞ்சிபுரம் மாவட்டம், செவிலிமேடு பகுதியைச் சோ்ந்தவா் மூா்த்தி (60). இவா், திருவண்ணாமலை கிரிவலம் சென்றுவி... மேலும் பார்க்க