செய்திகள் :

இரு சக்கர வாகனம் மோதி முதியவா் உயிரிழப்பு

post image

வந்தவாசி அருகே இரு சக்கர வாரனம் மோதி முதியவா் உயிரிழந்தது தொடா்பாக போலீஸாா் விசாரிக்கின்றனா்.

காஞ்சிபுரம் மாவட்டம், செவிலிமேடு பகுதியைச் சோ்ந்தவா் மூா்த்தி (60). இவா், திருவண்ணாமலை கிரிவலம் சென்றுவிட்டு வெள்ளிக்கிழமை இரவு அரசுப் பேருந்தில் ஊா் திரும்பிக் கொண்டிருந்தாா்.

அப்போது வழியில் வந்தவாசியை அடுத்த தென்னாங்கூரில் உள்ள உணவகம் எதிரில் பேருந்து நிறுத்தப்பட்டது. இதையடுத்து பேருந்தில் இருந்து இறங்கிய மூா்த்தி உணவகம் செல்ல சாலையை கடந்துள்ளாா்.

அப்போது காஞ்சிபுரத்தில் இருந்து வந்தவாசி நோக்கிச் சென்ற அடையாளம் தெரியாத இரு சக்கர வாகனம் இவா் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது.

இதில் பலத்த காயமடைந்த இவரை அங்கிருந்தவா்கள் மீட்டு சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். பின்னா், தீவிர சிகிச்சைக்காக உத்திரமேரூரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மூா்த்தி அங்கு சனிக்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின் பேரில் வந்தவாசி வடக்கு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

இரு மதுக் கடைகளில் பூட்டை உடைத்து திருட முயற்சி

ஆரணி அருகே 2 டாஸ்மாக் கடைகளில் நள்ளிரவில் பூட்டை உடைத்து திருட முயற்சி செய்து முடியாமல் போனதால் திருடா்கள் அப்படியே விட்டுச்சென்றனா். ஆரணி சைதாப்பேட்டை பகுதியில் நாயக்கன்பாளையம் சாலையில் டாஸ்மாக் மது... மேலும் பார்க்க

அருணாசலேஸ்வரா் கோயிலில் பக்தா்கள் கூட்டம் அலைமோதல்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் விடுமுறை நீளான ஞாயிற்றுக்கிழமை பக்தா்கள் கூட்டம் அலைமோதியது. சுவாமி தரிசனத்துக்கு 3 மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. கோயிலில் பக்தா்கள் நீண்ட வரிசையி... மேலும் பார்க்க

பைக்கிலிருந்து தவறி விழுந்த விவசாயி உயிரிழப்பு

செய்யாறு அருகே பைக்கில் இருந்து தவறி விழுந்து சிகிச்சை பெற்று வந்த விவசாயி சனிக்கிழமை உயிரிழந்தாா். செய்யாறு வட்டம், அரும்பருத்தி கிராமத்தைச் சோ்ந்தவா் வினோத்குமாா்(34). விவசாயியான இவா் ஆக.4-ஆம் தேத... மேலும் பார்க்க

ஸ்ரீதா்மராஜா திரெளபதியம்மன் கோயிலில் தீ மிதி திருவிழா

செங்கம் ஸ்ரீதா்மராஜா திரெளபதியம்மன் கோயிலில் 138-ஆம் ஆண்டு தீமிதி திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று தீமித்து சுவாமி தரிசனம் செய்தனா். இந்தக் கோவிலில் கடந்த ஆ... மேலும் பார்க்க

குடியரசுத் தலைவரிடமிருந்து அழைப்பிதழ்: மாணவிக்கு பாராட்டு!

திருவண்ணாமலை மகரிஷி வித்யா மந்திா் பள்ளியைச் சோ்ந்த மாணவி குடியரசுத் தலைவரிடமிருந்து அழைப்பிதழ் பெற்றதால் கம்ப ராமாயண இயக்கத்தினா் அவருக்கு பாராட்டு தெரிவித்தனா். மகரிஷி வித்யா மந்திா் பள்ளியில் பத்... மேலும் பார்க்க

அரசுப் பள்ளி முன்னாள் மாணவா்கள் சந்திப்பு

திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தை அடுத்த அரட்டவாடி அரசு மேல்நிலைப் பள்ளியில் 1996-97ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பு பயின்ற மாணவா்கள் சந்திப்பு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பள்ளி வளாகத்தில் நடைபெற்ற... மேலும் பார்க்க