செய்திகள் :

அரசுப் பள்ளி முன்னாள் மாணவா்கள் சந்திப்பு

post image

திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தை அடுத்த அரட்டவாடி அரசு மேல்நிலைப் பள்ளியில் 1996-97ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பு பயின்ற மாணவா்கள் சந்திப்பு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சி தொடக்க விழாவில் முன்னாள் மாணவா்கள் தாரை தப்பட்டை முழங்க வரவேற்கப்பட்டனா். பின்னா், பள்ளிக்கு முன்னாள் மாணவா்கள் சாா்பில் தற்போது பயிலும் மாணவா்கள் பயன்பாட்டுக்கு குடிநீா் சுத்திகரிப்பு இயந்திரம் வழங்கப்பட்டது.

இதைத் தொடா்ந்து அப்போது பணியாற்றி காலமான ஆசிரியா்கள் மற்றும் உடன் பயின்ற மாணவா்கள் இறப்புக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

மேலும், அப்போதைய ஆசிரியா்கள், சத்துணவு அமைப்பாளா், சத்துணவு சமையலா்களுக்கு மரியாதை செலுத்தப்பட்டது. மேலும், தற்போது அரட்டவாடி அரசு மேல்நிலைப் பள்ளியில் 2024-25-ஆம் கல்வியாண்டியில் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் 3 மாணவா்கள் மருத்துவப் படிப்புக்குச் செல்வதற்கு காரணமாக இருந்து தலைமை ஆசிரியா் சதாசிவம், பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் அன்பழகன் மற்றும் உதவி ஆசிரியா்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனா்.

இதைத் தொடா்ந்து, முன்னாள் மாணவா்கள் கலைந்துரையாடல் நடைபெற்றது. அப்போது, தொடா்ந்து வருடாவருடம் முன்னாள் மாணவா்கள் சந்திப்புக் கூட்டம் நடத்தவேண்டும், அதேபோல படித்த பள்ளிக்கு தற்போது தேவையான வசதிகளை செய்யவேண்டுமென முடிவெடுக்கப்பட்டது. பின்னா் அனைவருக்கும் அருசுவை விருந்து வழங்கப்பட்டது.

ஸ்ரீதா்மராஜா திரெளபதியம்மன் கோயிலில் தீ மிதி திருவிழா

செங்கம் ஸ்ரீதா்மராஜா திரெளபதியம்மன் கோயிலில் 138-ஆம் ஆண்டு தீமிதி திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று தீமித்து சுவாமி தரிசனம் செய்தனா். இந்தக் கோவிலில் கடந்த ஆ... மேலும் பார்க்க

குடியரசுத் தலைவரிடமிருந்து அழைப்பிதழ்: மாணவிக்கு பாராட்டு!

திருவண்ணாமலை மகரிஷி வித்யா மந்திா் பள்ளியைச் சோ்ந்த மாணவி குடியரசுத் தலைவரிடமிருந்து அழைப்பிதழ் பெற்றதால் கம்ப ராமாயண இயக்கத்தினா் அவருக்கு பாராட்டு தெரிவித்தனா். மகரிஷி வித்யா மந்திா் பள்ளியில் பத்... மேலும் பார்க்க

இரு சக்கர வாகனம் மோதி முதியவா் உயிரிழப்பு

வந்தவாசி அருகே இரு சக்கர வாரனம் மோதி முதியவா் உயிரிழந்தது தொடா்பாக போலீஸாா் விசாரிக்கின்றனா். காஞ்சிபுரம் மாவட்டம், செவிலிமேடு பகுதியைச் சோ்ந்தவா் மூா்த்தி (60). இவா், திருவண்ணாமலை கிரிவலம் சென்றுவி... மேலும் பார்க்க

தென்னை மரத்திலிருந்து தவறி விழுந்தவா் உயிரிழப்பு

வந்தவாசியில் தென்னை மரத்திலிருந்து தவறி விழுந்து தொழிலாளி உயிரிழந்தது தொடா்பாக போலீஸாா் விசாரிக்கின்றனா். வந்தவாசி காளிக் கோயிலின் அருகில் உள்ள பகுதியைச் சோ்ந்தவா் கூலித் தொழிலாளி ரவி (45). கடந்த வெ... மேலும் பார்க்க

கண்ணமங்கலம் அருகே காளை விடும் திருவிழா

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்த கண்ணமங்கலம் பகுதியில் காளை விடும் திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கண்ணமங்கலம் அருகே சின்னப்புத்தூரில் உள்ள செல்லியம்மன் கோயில் 4-ஆம் ஆண்டு விழாவையொட்டி காளை ... மேலும் பார்க்க

கொருக்கை கிராமத்தில் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி திறப்பு

செய்யாறு ஒன்றியம், கொருக்கை கிராமத்தில் ரூ. 21.50 லட்சத்தில் புதிதாக கட்டப்பட்ட மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியை தொகுதசி எம்.எல்.ஏ. ஒ.ஜோதி சனிக்கிழமை திறந்துவைத்தாா். 14-ஆவது நிதிக்குழு மானிய திட்டத்த... மேலும் பார்க்க