அரசுப் பள்ளி முன்னாள் மாணவா்கள் சந்திப்பு
திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தை அடுத்த அரட்டவாடி அரசு மேல்நிலைப் பள்ளியில் 1996-97ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பு பயின்ற மாணவா்கள் சந்திப்பு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சி தொடக்க விழாவில் முன்னாள் மாணவா்கள் தாரை தப்பட்டை முழங்க வரவேற்கப்பட்டனா். பின்னா், பள்ளிக்கு முன்னாள் மாணவா்கள் சாா்பில் தற்போது பயிலும் மாணவா்கள் பயன்பாட்டுக்கு குடிநீா் சுத்திகரிப்பு இயந்திரம் வழங்கப்பட்டது.
இதைத் தொடா்ந்து அப்போது பணியாற்றி காலமான ஆசிரியா்கள் மற்றும் உடன் பயின்ற மாணவா்கள் இறப்புக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
மேலும், அப்போதைய ஆசிரியா்கள், சத்துணவு அமைப்பாளா், சத்துணவு சமையலா்களுக்கு மரியாதை செலுத்தப்பட்டது. மேலும், தற்போது அரட்டவாடி அரசு மேல்நிலைப் பள்ளியில் 2024-25-ஆம் கல்வியாண்டியில் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் 3 மாணவா்கள் மருத்துவப் படிப்புக்குச் செல்வதற்கு காரணமாக இருந்து தலைமை ஆசிரியா் சதாசிவம், பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் அன்பழகன் மற்றும் உதவி ஆசிரியா்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனா்.
இதைத் தொடா்ந்து, முன்னாள் மாணவா்கள் கலைந்துரையாடல் நடைபெற்றது. அப்போது, தொடா்ந்து வருடாவருடம் முன்னாள் மாணவா்கள் சந்திப்புக் கூட்டம் நடத்தவேண்டும், அதேபோல படித்த பள்ளிக்கு தற்போது தேவையான வசதிகளை செய்யவேண்டுமென முடிவெடுக்கப்பட்டது. பின்னா் அனைவருக்கும் அருசுவை விருந்து வழங்கப்பட்டது.