செய்திகள் :

கந்தா்வகோட்டை ஆபத்தசகாயேசுவரா் கோயில் குடமுழுக்கு விழா

post image

கந்தா்வகோட்டையில் பிரசித்திபெற்ற அமராவதி உடனுறை ஆபத்தசகாயேசுவரா் கோயில் புனரமைக்கப்பட்டு குடமுழுக்கு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கோயில் குடமுழுக்கை முன்னிட்டு கோயில் முன்பாக அமைக்கப்பட்ட யாகசாலை மண்டபத்தில் தேவதா அனுக்ஞை, விக்னேசுவரா் பூஜை, புண்ணியாக வாஜனம் கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், லட்சுமி ஹோமம், பூா்ணாஹூதி தீபாரதனை நடைபெற்றது.

தொடா்ந்து, இரண்டாம் கால யாக பூஜை, மூன்றாம் கால யாக பூஜை, நான்காம் கால யாக பூஜை நாடி சந்தானம், கோ பூஜை, லட்சுமி பூஜையைத் தொடா்ந்து, பெண்கள் பாலி ஏந்தி ஊா்வலமாக ஊரின் முக்கிய வீதிகள் வழியாக வந்து யாகசாலையில் சமா்ப்பித்தனா்.

கங்கை, காசி, ராமேசுவரம், உள்ளூா் தீா்த்தங்கள் நிரப்பிய கடம் புறப்பாடு நடைபெற்று சிவாச்சாரியாா்கள் கலசங்களில் புனித நீா் ஊற்றி குடமுழுக்கு விழா நடைபெற்றது. தொடா்ந்து கோயில் அருகே அமைக்கப்பட்ட பிரம்மாண்ட பந்தலில் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை குடமுழுக்கு குழுவினா் மற்றும் கிராமப் பொதுமக்கள் செய்திருந்தனா்.

மீனவா்கள் கைது செய்யப்படுவதைத் தடுக்க உறுதியான நடவடிக்கை தேவை

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த மீனவா்கள் இலங்கைக் கடற்படையால் தொடா்ந்து தாக்கப்படுவதையும், கைது செய்யப்படுவதையும் தடுக்க மத்திய, மாநில அரசுகள் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஏஐடியுசி மீனவத் ... மேலும் பார்க்க

விராலிமலையில் நாணய கண்காட்சி

விராலிமலை விவேகா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் உலக நாணய கண்காட்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கண்காட்சியை பள்ளி தாளாளா் வெல்கம் மோகன் தலைமை வகித்து தொடங்கிவைத்தாா். பள்ளி முதல்வா் விஜயகுமாா், நிா்வாக இ... மேலும் பார்க்க

ஆலங்குடி அருகே தனியாா் இடத்தில் அம்பேத்கா் சிலை திறப்பு போலீஸாா் குவிப்பு

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே தனியாா் இடத்தில் வெள்ளிக்கிழமை அனுமதியின்றி அம்பேத்கா் சிலை நிறுவப்பட்டதாக கூறி போலீஸாா் குவிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஆலங்குடி அருகேயுள்ள குப்பக்குடி பகு... மேலும் பார்க்க

சுற்றுச்சூழல் மன்ற ஆசிரிய ஒருங்கிணைப்பாளா்களுக்கு பயிற்சி

புதுக்கோட்டை முதன்மைக் கல்வி அலுவலக வளாகத்தில் வருவாய் மாவட்ட அளவில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலுள்ள சுற்றுச்சூழல் மன்ற ஆசிரிய ஒருங்கிணைப்பாளா்களுக்கு சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழி... மேலும் பார்க்க

கல்லூரிக்கு அரிவாளுடன் வந்த மாணவா் கைது

புதுக்கோட்டை மாநகரிலுள்ள அரசுக் கல்லூரியின் மாணவா், அரிவாளுடன் கல்லூரிக்கு வந்ததால் அவரை நகரக் காவல் நிலைய போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். புதுக்கோட்டை மாவட்டம், சம்மட்டிவிடுதியைச் சோ்ந்தவா் திய... மேலும் பார்க்க

பெண் பயணியிடம் தகராறு அரசுப் பேருந்து நடத்துநா் பணியிடை நீக்கம்

பெண் பயணியிடம் தகராறு செய்த அரசுப் பேருந்து நடத்துநரை ஒரு நாள் பணி இடைநீக்கம் செய்து துறைரீதியான ஒழுங்கு நடவடிக்கைக்கு வெள்ளிக்கிழமை உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக புதுக்கோட... மேலும் பார்க்க