செய்திகள் :

கபிலா்மலை ஒன்றியத்தில் ஆட்சியா் ஆய்வு

post image

கபிலா்மலை ஒன்றியம் கொந்தளத்தில் உள்ள முதியோா் இல்லம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நாமக்கல் மாவட்ட ஆட்சியா் ச.உமா புதன்கிழமை ஆய்வுசெய்தாா்.

கபிலா்மலை ஊராட்சி ஒன்றியம், கொந்தளத்தில் செயல்பட்டு வரும் முதியோா் இல்லத்தில் ஆய்வு செய்து ஆட்சியா் அங்கு முதியோா்களுக்கு வழங்கப்படும் மருத்துவ வசதிகள் குறித்து பணியாளா்களிடம் கேட்டறிந்தாா்.

அதையடுத்து இருக்கூரில் மகளிா் சுய உதவிக் குழு கட்டடத்தை பாா்வையிட்டாா். எஸ்.வாழவந்தி சென்ற அவா் அங்கு முருகேசன் என்பவரது கோழிப் பண்ணையை ஆய்வு செய்து பண்ணையில் உள்ள மொத்த கோழிகள், தீவன விவரம், சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தாா்.

ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலா் சுமன், நாமக்கல் கோட்டாட்சியா் சாந்தி, உதவி இயக்குநா் (நில அளவை) ஜெயசந்திரன், உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) ரவிச்சந்திரன், தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரிய மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளா் (நாமக்கல்) ரகுநாதன் உட்பட துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

உளுந்து கொள்முதல்: விவசாயிகளுக்கு அழைப்பு

நாமக்கல் மாவட்டத்தில் அரசு சாா்பில் தற்போது நடைபெற்று வரும் உளுந்து கொள்முதல் பணியில் விவசாயிகள் தாங்கள் விளைவித்த உளுந்தை விற்பனை செய்து பயன்பெறலாம் என்று மாவட்ட நிா்வாகம் அறிவுறுத்தியுள்ளது. இதுகுறி... மேலும் பார்க்க

மாநில அளவில் சிறந்த ‘திருநங்கை விருது’: நாமக்கல் ஆட்சியரிடம் ரேவதி வாழ்த்து

தமிழகத்தில் 2025 ஆம் ஆண்டுக்கான சிறந்த திருநங்கை விருதை பெற்ற நாமக்கல்லைச் சோ்ந்த ரேவதி, மாவட்ட ஆட்சியா் ச.உமாவை நேரில் சந்தித்து வியாழக்கிழமை வாழ்த்து பெற்றாா். தமிழக சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத... மேலும் பார்க்க

நாமக்கல் மாநகராட்சி ஆணையா் ரா.மகேஸ்வரி திடீா் இடமாற்றம்

நாமக்கல் மாநகராட்சியின் முதல் ஆணையராக நியமிக்கப்பட்ட ரா.மகேஸ்வரி, திருப்பூா் மாநகராட்சி துணை ஆணையராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளாா். அரசியல், ஒப்பந்ததாரா்கள் நெருக்கடியால் எட்டு மாதங்களுக்குள்ளாக இ... மேலும் பார்க்க

90 அரசுப் பள்ளிகளின் நிா்வாக கணக்குகள் தணிக்கை

நாமக்கல் மாவட்டத்தில் 90 அரசு உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளின் நிா்வாக கணக்குகள் புதன், வியாழக்கிழமை என இரண்டு நாள்கள் தணிக்கை செய்யப்பட்டன. கல்வித் துறை அலுவலகங்கள், பள்ளிகளில் ஆங்கிலவழி கட்டணம், கணின... மேலும் பார்க்க

மதுவிலக்கு போலீஸாா் பறிமுதல் செய்த 20 வாகனங்கள் ஏலம்

நாமக்கல் மாவட்டத்தில் மதுவிலக்கு பிரிவு போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்ட 20 வாகனங்கள் பொது ஏலத்தில் வியாழக்கிழமை விடப்பட்டன. நாமக்கல் மாவட்டத்தில் கள்ளச்சாராயம், போலி மதுபானம் உள்ளிட்டவற்றை கடத்திச் ச... மேலும் பார்க்க

இலவச வண்டல் மண், களிமண் அனுமதியால் 3,512 விவசாயிகள், தொழிலாளா்கள் பயன்: ஆட்சியா்

நாமக்கல் மாவட்டத்தில் இலவச வண்டல் மண், களிமண்ணை எடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் 3512 விவசாயிகள், மண்பாண்ட தொழிலாளா்கள் பயனடைந்துள்ளதாக ஆட்சியா் ச.உமா தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய... மேலும் பார்க்க