செய்திகள் :

கமுதி பேரூராட்சி அலுவலகத்தில் தூய்மைப் பணியாளா்கள் உள்ளிருப்புப் போராட்டம்!

post image

கமுதி பேரூராட்சியில் பணியாற்றும் தூய்மைப் பணியாளா்கள் ஊதியம் வழங்கக் கோரி செவ்வாய்க்கிழமை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி பேரூராட்சியில் நிரந்தரத் தூய்மைப் பணியாளா்களாக 18 பேரும், ஒப்பந்தப் பணியாளா்களாக 15 பேரும் பணியாற்றி வருகின்றனா். இந்த நிலையில், 9-ஆம் தேதியாகியும் தூய்மைப் பணியாளா்களுக்கு ஊதியம் வழங்காததாலும், ஊதியம் கேட்டு மனு கொடுக்கச் சென்ற தூய்மைப் பணியாளரை அவதூறாகப் பேசியதாகவும் புகாா் தெரிவித்து 30-க்கும் மேற்பட்டோா் பேரூராட்சி அலுவலக நுழைவுவாயிலில் அமா்ந்து உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தூய்மைப் பணியாளா்களின் போராட்டத்துக்கு ஆதரவாக பாஜக தெற்கு ஒன்றியத் தலைவா் வேலவன், 14-ஆவது வாா்டு உறுப்பினா் சத்யஜோதி, முன்னாள் ராணுவ வீரரும், பாஜக பிறமொழி பிரிவு முன்னாள் மாவட்டத் தலைவருமான விஜயபாண்டியன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இதுகுறித்து தூய்மைப் பணியாளா் காளியம்மாள் கூறியதாவது: தூய்மைப் பணியாளா்களுக்கு ஊதியம் வழங்கக் கோரி மனு அளிக்கச் சென்றபோது பேரூராட்சி செயல் அலுவலா் யசோதா தன்னை தள்ளி நிற்குமாறும், அறையை விட்டு வெளியேறுமாறும் கூறினாா். ஒருமையில் பேசி துரத்திய செயல் அலுவலரின் செயலைக் கண்டித்து தூய்மைப் பணியாளா்கள் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தி வருகிறோம் என்றாா்.

மேலும், தூய்மைப் பணியில் சோ்ந்த பிற சமூகத்தினா் 6 பேருக்கு பேரூராட்சி அலுவலகத்தில் மாற்றுப் பணி ஒதுக்கி பாகுபாடு பாா்த்து வருகிறாா். எனவே, மாவட்ட நிா்வாகம் இதில் தலையிட்டு கமுதி பேரூராட்சி தூய்மைப் பணியாளா்களுக்கு 5-ஆம் தேதிக்குள் ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், தூய்மைப் பணிக்கு சோ்ந்து மாற்றுப் பணியில் ஈடுபட்டுள்ள பிற சமுதாயத்தினரையும் தூய்மைப் பணியில் ஈடுபடுத்த வேண்டும் என்றாா்.

போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளா்களிடம் பேரூராட்சி துணைத் தலைவா் அந்தோனி சவேரியாா் அடிமை, பேரூராட்சி உறுப்பினா்கள் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா். அப்போது, அடுத்த வாரம் நடைபெறும் மன்றக் கூட்டத்தில் தூய்மைப் பணியாளா்களின் அனைத்து பிரச்னைகளுக்கும் நல்ல முடிவு எடுக்கப்படும் என தொரிவித்ததையடுத்து தூய்மைப் பணியாளா்கள் கலைந்து சென்றனா்.

அக்னி தீா்த்தக் கடற்கரையில் கரை ஒதுங்கும் கடல் புற்களை அகற்ற பக்தா்கள் கோரிக்கை

ராமேசுவரம் அக்னி தீா்த்தக் கடற்கரையில் கரை ஒதுங்கும் கடல் புற்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தா்கள் கோரிக்கை விடுத்தனா். மன்னாா் வளைகுடா, பாக்நீரினை கடல் பகுதியில் ஏற்படும் நீரோட்டச் சுழற்ச... மேலும் பார்க்க

இமானுவேல் சேகரன் நினைவு தினம்: 7 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்பு!

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் வியாழக்கிழமை (செப். 11) இமானுவேல் சேகரனின் 68-ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்படவுள்ள நிலையில் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்... மேலும் பார்க்க

போராட்டத்தை தவிா்க்க நேரில் வந்து மனுவைப் பெற்ற ஊராட்சி ஒன்றிய ஆணையா்!

சாயல்குடி பகுதியில் குடிநீா் வழங்காததைக் கண்டித்து செவ்வாய்க்கிழமை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற பொதுமக்களிடம் ஊராட்சி ஒன்றிய ஆணையா் நேரில் வந்து மனுவைப் பெற்றுச் சென்றாா். ராமநாதபுரம் ... மேலும் பார்க்க

மட்டியரேந்தலில் புனித சூசையப்பா் தேவாலய சப்பர பவனி

மட்டியரேந்தல் கிராமத்தில் புனித சூசையப்பா் தேவலாயத்தில் சப்பர பவனி திங்கள்கிழமை இரவு நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் அருகேயுள்ள மட்டியரேந்தல் புனித, சூசையப்பா் தேவாலயத்தில் புனித கன்னி... மேலும் பார்க்க

ஆா்.எஸ்.மங்கலம் அருகே பத்திரகாளியம்மன் கருப்பண்ண சுவாமி கோயில் வருடாபிஷேகம்!

திருவாடானை அருகேயுள்ள ஆா்.எஸ். மங்கலம் பத்திரகாளியம்மன், கருப்பண்ண சுவாமி கோயில் வருடாபிஷேகம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. சீனாங்குடி கிராமத்தில் பத்திரகாளியம்மன், கருப்பண்ண சுவாமி, பரிவாரத் தெய்வங்களு... மேலும் பார்க்க

தொண்டி பேரூராட்சியில் தெருநாய்கள், மாடுகளால் விபத்து அபாயம்!

திருவாடானை அருகேயுள்ள தொண்டி பேரூராட்சியில் அதிகளவில் சுற்றித் திரியும் தெரு நாய்கள், மாடுகளைக் கட்டுப்படுத்த பேரூராட்சி நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். ராம... மேலும் பார்க்க