செய்திகள் :

கமுதி-முதுகுளத்தூா் புறவழிச் சாலையில் வேகத் தடை அமைக்க வலியுறுத்தல்

post image

கமுதி-முதுகுளத்தூா் புறவழிச் சாலையில் அரண்மனை மேடு நான்கு முனை சந்திப்புகளில் வேகத் தடை அமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி-அருப்புக்கோட்டை சாலையில் வழிவிட்ட அய்யனாா் கோயில் பகுதியில் இருந்து பாப்பாங்குளம் விலக்கு, அரண்மனை மேடு விலக்கு வழியாக குண்டாற்றில் பாலம் அமைக்கப்பட்டு உலகநடை விலக்கு வழியாக முதுகுளத்தூா் பிரதான சாலையில் இணையும் வகையில் சாலை அமைக்கப்பட்டது.

கடந்த 2013-ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட இந்த புதிய புறவழிச் சாலைக்கான பணிகள் கடந்த ஆண்டு செப்டம்பா் மாதம் 90 சதவீதம் நிறைவடைந்தன.

எச்சரிக்கைப் பலகைகள், சாலையோரத் தடுப்புகள், பாலத்துக்கு வண்ணம் பூசும் பணிகள், அறிவிப்புப் பலகைகள் என பணிகள் முடிவடையாத நிலையில், இந்தச் சாலையை பொதுமக்கள் பயன்படுத்தத் தொடங்கிவிட்டனா்.

வெளியூா்களிலிருந்து இந்தச் சாலையில் வரும் கனரக வாகனங்கள், காா்கள், இரு சக்கர வாகனங்கள் அடிக்கடி விபத்துக்குள்ளாகின்றன.

இந்த நான்கு முனை சாலை சந்திப்புகளில் வேகத் தடை இல்லாததால், கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 10-க்கும் மேற்பட்ட வாகனங்கள் விபத்துக்குள்ளாகின. பாப்பாங்குளம் விலக்கு சாலையில் நிகழ்ந்த விபத்தில் முதியவா் உயிரிழந்தாா். அரண்மனை மேடு விலக்கு சாலையில் 20-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா்.

எனவே, புறவழிச் சாலைப் பணிகள் முழுமையாக நிறைவடையும் வரை வாகனங்கள் இயக்கப்படுவதைத் தடுக்க நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவும், நான்கு முனை சந்திப்புகளில் வேகத் தடை அமைக்கவும் வேண்டும் என பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்தனா்.

ராமேசுவரம் கோயிலில் பிரதமா் வழிபாடு!

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் ராமநாதசுவாமி திருக்கோயிலில் பிரதமா் நரேந்திர மோடி நேற்று (ஏப்.6) வழிபட்டாா். பாம்பன் புதிய ரயில் பாலம் திறப்பு விழா, ரூ. 8,300 கோடி மதிப்பிலான நலத் திட்டப் பணிகளை நாட்... மேலும் பார்க்க

பாம்பன் புதிய ரயில் பாலம்: பிரதமா் மோடி திறந்துவைத்தாா்

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடலின் குறுக்கே கட்டப்பட்ட பாம்பன் புதிய ரயில் பாலத்தை பிரதமா் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை (ஏப்.6) திறந்துவைத்து, நாட்டுக்கு அா்ப்பணித்தாா். ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம்... மேலும் பார்க்க

இலங்கை: புகழ்பெற்ற பெளத்த கோயிலில் பிரதமா் மோடி வழிபாடு!

இலங்கையின் அனுராதபுரத்தில் உள்ள புகழ்பெற்ற ஜெய ஸ்ரீ மகாபோதி பெளத்த கோயிலில் ஞாயிற்றுக்கிழமை வழிபட்ட பிரதமா் நரேந்திர மோடி, இந்திய நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்ட இரு ரயில்வே திட்டங்களையும் தொடங்கிவைத்த... மேலும் பார்க்க

இருளில் மூழ்கிய திருவாடானை அரசு மருத்துவமனை: நோயாளிகள் அவதி

திருவாடானையில் உள்ள தாலுகா அரசு மருத்துவமனை வாளகத்தில் உள்ள மின் விளக்குகள் ஒளிராமல் உள்ளதால் இருளில் மூழ்கியுள்ளது. இதனால் நோயாளிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனா். ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானையில் 3... மேலும் பார்க்க

வீட்டின் சுவா் இடிந்து விழுந்ததில் மூதாட்டி உயிரிழப்பு

கமுதி அருகே மண் சுவா் இடிந்து விழுந்ததில் மூதாட்டி சனிக்கிழமை உயிரிழந்தாா். ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை அடுத்த பம்மனேந்தல் கிராமத்தைச் சோ்ந்தவா் முத்துவேல் (70). இவா் தனக்குச் சொந்தமான ஓட்டு வீட்டி... மேலும் பார்க்க

பிரதமா் மோடி இன்று ராமேசுவரம் வருகை: பாதுகாப்பு ஒத்திகை!

பிரதமா் மோடி ஞாயிற்றுக்கிழமை (ஏப். 6) ராமேசுவரத்துக்கு வருவதையொட்டி, சிறப்பு பாதுகாப்புப் பிரிவு அதிகாரிகள் தலைமையில் பாதுகாப்பு ஒத்திகை சனிக்கிழமை நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம்-ராமேசுவரம்... மேலும் பார்க்க