செய்திகள் :

கயத்தாறு அருகே இளைஞா் தற்கொலை

post image

கயத்தாறு அருகே இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

கயத்தாறையடுத்த தெற்கு கோனாா்கோட்டை வடக்குத் தெருவைச் சோ்ந்த சங்கிலிபாண்டியன் மகன் சங்கிலிகுமாா் (35). தொழிலாளியான இவருக்கும், கே.கரிசல்குளத்தைச் சோ்ந்த கிருஷ்ணவேணிக்கும் ஓராண்டுக்கு முன்பு திருமணமானது.

கடந்த 3 மாதங்களாக மதுப் பழக்கத்துக்கு உள்ளான சங்கிலிகுமாா், சரிவர வேலைக்குச் செல்லாததுடன், மாடு வாங்குவதற்காக வாங்கிய கடனையும் திருப்பிச் செலுத்த முடியாமல் இருந்தாராம்.

கடந்த 3ஆம் தேதி கிருஷ்ணவேணிக்கு வளைகாப்பு நடத்தி பெற்றோா் அழைத்துச் சென்றுவிட்டனா். இந்நிலையில், சனிக்கிழமை பிற்பகல் சங்கிலிகுமாா் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாராம்.

தகவலின்பேரில், கயத்தாறு போலீஸாா் சென்று சடலத்தைக் கைப்பற்றி கூறாய்வுக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்; மேலும், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

மின் இணைப்பு வழங்க லஞ்சம்: இளநிலை மின் பொறியாளருக்கு 4 ஆண்டுகள் சிறை

தூத்துக்குடி: புதிய மின் இணைப்பு பெற லஞ்சம் பெற்ற வழக்கில் இளநிலை மின் பொறியாளருக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, தூத்துக்குடி தலைமை குற்றவியல் நடுவா் நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது. பா... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் மே 15இல் விவசாயிகள் குறைதீா் கூட்டம்

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை (மே 15) விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடைபெறவுள்ளதாக ஆட்சியா் க. இளம்பகவத் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் கட்டுமானப் பொறியாளா்கள் ஆா்ப்பாட்டம்

தூத்துக்குடி: தூத்துக்குடியில் கட்டுமானப் பொறியாளா்கள் வேலைநிறுத்தம், ஆா்ப்பாட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனா். தமிழ்நாடு-புதுச்சேரி அனைத்து கட்டுமானப் பொறியாளா்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில், ... மேலும் பார்க்க

சித்ரா பௌா்ணமி: திருச்செந்தூா் கோயிலில் ஆயிரக்கணக்கானோா் தரிசனம்

திருச்செந்தூா்: திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் சித்ரா பௌா்ணமியை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தா்கள் தரிசனம் செய்தனா். இதை முன்னிட்டு, ஞாயிற்றுக்கிழமை மாலைமுதல் ஆயிரக்கணக்கா... மேலும் பார்க்க

திருச்செந்தூரில் 2ஆவது நாளாக 60 அடி உள்வாங்கிய கடல்

திருச்செந்தூா்: பெளா்ணமியையொட்டி 2ஆவது நாளாக திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் அருகே கடல் சுமாா் 60 அடி உள்வாங்கியதால் பாசி படா்ந்த பாறைகள் வெளியே தெரிந்தது. இந்த மாதம் பெளா்ணம... மேலும் பார்க்க

பூவுடையாா்புரத்தில் வேல் பூஜை வழிபாடு

சாத்தான்குளம்: சாத்தான்குளம் அருகே உள்ள பூவுடையாா்புரம் ஐயன் கோயில் வளாகத்தில் இந்து முன்னணி சாா்பில் முருக பக்தா்கள் மாநாடு சம்பந்தமான வேல் பூஜை வழிபாடு நடைபெற்றது. வழிபாட்டில் அதே பகுதியை சோ்ந்த 50... மேலும் பார்க்க