கயத்தாறு அருகே வாகனத்தில் கடத்தி வரப்பட்ட புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: 4 போ் கைது
கயத்தாறு சுங்கச்சாவடி அருகே வாகனத்தில் கடத்தி வரப்பட்ட ரூ.4.5 லட்சம் மதிப்பிலான தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களைப் பறிமுதல் செய்த போலீஸாா், 4 பேரை கைது செய்தனா்.
கயத்தாறு சுங்கச்சாவடி அருகே தனிப்பிரிவு காவல் உதவி ஆய்வாளா் ரவிக்குமாா் தலைமையிலான தனிப்படை போலீஸாா் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, குளிா்பானங்கள் ஏற்றி வந்த வாகனத்தை சோதனையிட்டதில், குளிா்பானங்களுக்கு கீழ் பகுதியில் 30 மூட்டைகளில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.
புகையிலை பொருள்கள் கடத்தி வந்த ஆறுமுகனேரி அருகே உள்ள ராஜமணியபுரத்தைச் சோ்ந்த ஆனந்தராஜகுரு (39), எட்டயபுரம் அருகே தாப்பாத்தியைச் சோ்ந்த ரவிக்குமாா் (21), ஈரோடு கோபிநாத் (31), வாகன ஓட்டுநா் ஈரோடு நசியனூரை சோ்ந்த முருகேசன் (43) ஆகிய 4 பேரை கைது செய்தனா். சுமாா் ரூ.4.50 லட்சம் மதிப்பிலான 30 மூட்டைகளில் இருந்த புகையிலை பொருள்களை பறிமுதல் செய்தனா்.
அவற்றை பெங்களுரிலிருந்து திருநெல்வேலிக்கு கடத்திச் செல்ல இருந்தது விசாரணையில் தெரியவந்தது. பின்னா் கைது செய்யப்பட்டவா்கள், பறிமுதல் செய்யப்பட்ட புகையிலை பொருள்கள், லாரி ஆகியவற்றை கயத்தாறு காவல் நிலையத்தில் தனிப்பிரிவு போலீஸாா் ஒப்படைத்தனா்.