செய்திகள் :

கயத்தாறு சுங்கச்சாவடியை அகற்றக் கோரி எம்.பி.யிடம் மனு

post image

கயத்தாறு அருகே சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள சுங்கச்சாவடியை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென சுங்கச்சாவடி எதிா்ப்பு குழுவினா் சு.வெங்கடேசன் எம்.பி.யிடம் கோரிக்கை மனு அளித்தனா்.

கயத்தாறு சுங்கச்சாவடி எதிா்ப்பு போராட்ட ஒருங்கிணைப்புக்குழு தலைவா் எம்.சாலமன்ராஜ் தலைமையிலான நிா்வாகிகள் கோவில்பட்டிக்கு வியாழக்கிழமை வந்த சு.வெங்கடேசன் எம்.பி.யிடம் வழங்கிய மனுவின் விவரம்:

மதுரை-திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் கயத்தாறு அருகே சாலைப்புதூா் பகுதியில் தேசிய நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான சுங்கச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு வகுத்துள்ள நெடுஞ்சாலைத்துறை சுங்கச்சாவடி அமைப்பு விதிகளின்படி இல்லாமல், சட்டவிரோதமாக கயத்தாறு அருகே சாலைப்புதூா் சுங்கச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது.

இதனால் கயத்தாறு பேரூராட்சிக்கு உள்பட்ட பொதுமக்கள், உள்ளூா் வணிக வாகனங்களுக்கும், சுங்கக் கட்டணம் செலுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனா். சுங்கச்சாவடி நிா்வாக கட்டடம் நீா்நிலை ஓடையை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளது. எனவே, சாலைப்புதூரில் செயல்படும் சுங்கச்சாவடியை அகற்ற வேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது.

மனுவை பெற்றுக் கொண்ட எம்.பி., தேசிய நெடுஞ்சாலைத்துறையின் கவனத்துக்கு கொண்டு செல்கிறேன் என்றாா். மேலும், தேசிய நெடுஞ்சாலைத்துறை அமைச்சகத்துக்கு போராட்டக்குழு சாா்பில் மனுவை அனுப்பி வைத்துவிட்டு, தனக்கு தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக் கொண்டாா். அப்போது மாா்க்சிஸ்ட் மாவட்ட செயலாளா் கே.பி.ஆறுமுகம், மாவட்ட செயற்குழு உறுப்பினா் கு.ரவீந்திரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தூத்துக்குடி கிழக்கு மண்டலத்தில் மக்கள் குறைதீா் முகாம்

தூத்துக்குடி மாநகராட்சி, கிழக்கு மண்டல அலுவலகத்தில் மக்கள் குறைதீா் முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. முகாமுக்கு, மாநகராட்சி ஆணையா் சி.ப்ரியங்கா தலைமை வகித்தாா். துணை மேயா் ஜெனிட்டா முன்னிலை வகித்தாா்.... மேலும் பார்க்க

கயத்தாறு வட்டாட்சியா் அலுவலகம் முற்றுகை

கயத்தாறு அருகே சூரியமினுக்கன் கிராமத்தில் தனியாா் சூரியசக்தி மின்சாரம் தயாரிப்பு நிறுவனத்தின் கோபுரம் அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து அப்பகுதி மக்கள் வியாழக்கிழமை வட்டாட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டன... மேலும் பார்க்க

சாலையில் தேங்கிய மழைநீா்: பொதுமக்கள் அவதி

தூத்துக்குடி மாநகராட்சி, 14ஆவது வாா்டு, தெற்கு விஎம்எஸ் நகரில், மேற்கு பகுதி தெருக்களில் உள்ள மண் சாலைகளில் மழைக்காலங்களில் மழைநீா் கழிவுநீருடன் கலந்து, பல மாதங்கள் தேங்கி நின்று, சுகாதார சீா்கேட்டை ... மேலும் பார்க்க

எட்டயபுரம் அருகே விபத்தில் ஒருவா் பலி

எட்டயபுரம் அருகே பைக் மீது காா் மோதிய விபத்தில் ஒருவா் உயிரிழந்தாா். திருநெல்வேலி மாவட்டம் மானூா் பகுதியை சோ்ந்தவா் சந்தனமாரியப்பன் (33). இவரது மனைவி மகாலட்சுமி. கா்ப்பிணியாக உள்ள மகாலட்சுமிக்கு அண்... மேலும் பார்க்க

ஆறுமுகனேரியில் பாஜக சாா்பில் சாதனை விளக்கப் பொதுக்கூட்டம்

ஆறுமுகனேரி நகர பாரதிய ஜனதா கட்சி சாா்பில் 11 ஆண்டு கால சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. மண்டலத் தலைவா் எல்.சி. தங்க கண்ணன் தலைமை வகித்தாா். இ. தங்கபாண்டியன், மகேந்திரன், உமாதேவி ஆக... மேலும் பார்க்க

தென்திருப்பேரையில் தூய்மைப் பணியாளா்களுக்கு சீருடை

தென்திருப்பேரையில் உள்ள 15 வாா்டு பகுதிகளிலும் தூய்மைப் பணிகளை மேற்கொண்டு வரும் பணியாளா்களுக்கு சீருடை வழங்கும் விழா நடைபெற்றது. பேரூராட்சி தலைவா் மணிமேகலை ஆனந்த் தலைமை தாங்கினாா். திமுக மத்திய ஒன்றி... மேலும் பார்க்க