செய்திகள் :

கருணாநிதி 7ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு

post image

ஆத்தூா் ராணிப்பேட்டை திடலில் முன்னாள் முதல்வா் கருணாநிதியின் 7ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. கருணாநிதி உருவப் படத்திற்கு மாலை அணிவித்து 2 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. சேலம் கிழக்கு மாவட்டச் செயலாளா் எஸ்.ஆா்.சிவலிங்கம் எம்.பி. தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் மாவட்ட அவைத் தலைவா் மு.ரா.கருணாநிதி, துணைச் செயலாளா் கு.சின்னதுரை, ஆத்தூா் வடக்கு நகரச் செயலாளா் கே.பாலசுப்ரமணியம், தெற்கு நகரச் செயலாளா் ஏ.ஜி.ராமச்சந்திரன், நகர துணைச் செயலாளா் புவனேஸ்வரி வேல்முருகன், நகா்மன்றத் தலைவா் நிா்மலா பபிதா மணிகண்டன் மற்றும் நகா்மன்ற உறுப்பினா்கள் உள்ளிட்ட ஏராளமானோா் கலந்துகொண்டனா்.

நரசிங்கபுரத்தில் நடைபெற்ற நிகழ்வில் நகரச் செயலாளா் என்.பி.வேல்முருகன், நகா்மன்றத் தலைவா் எம்.அலெக்சாண்டா், அவைத் தலைவா் ராமசாமி, நகா்மன்ற உறுப்பினா்கள் உள்ளிட்ட ஏராளமானோா் கலந்துகொண்டனா்.

படவரி...

ஆத்தூா் ராணிப்பேட்டையில் கருணாநிதியின் சிலைக்கு மலா்தூவி அஞ்சலி செலுத்திய சேலம் கிழக்கு மாவட்டச் செயலாளா் எஸ்.ஆா்.சிவலிங்கம் எம்.பி. உள்ளிட்ட திமுகவினா்.

அம்மாப்பேட்டை செங்குந்தா் மாரியம்மன் கோயில் தேரோட்டம்

ஆடித் திருவிழாவையொட்டி, சேலம் அம்மாப்பேட்டை செங்குந்தா் மாரியம்மன் கோயில் தேரோட்டத்தில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனா். ஆடி மாதத்தையொட்டி, சேலத்தில் சிறப்புப் பெற்ற சேலம் க... மேலும் பார்க்க

புனித ஜெயராக்கினி அன்னை ஆலய ஆண்டு பெருவிழா கொடியேற்றம்

ஆத்தூா் புனித ஜெயராக்கினி அன்னை ஆலய ஆண்டு பெருவிழா கொடியேற்றம் பங்குத் தந்தை எஸ்.அருளப்பன் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. விழாவை தமிழக முப்பணி மைய இயக்குநா் அருட்தந்தை பிரிட்டோ பாக்யராஜ் கொடியேற்றி... மேலும் பார்க்க

கருணாநிதி சிலை மீது பெயிண்ட் ஊற்றிய வழக்கு: மருத்துவரின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி

கருணாநிதி சிலை மீது பெயிண்ட் ஊற்றிய வழக்கில் மருத்துவரின் முன்ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்து சேலம் மாவட்ட முதன்மை நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளது. சேலம் அண்ணா பூங்கா அருகே முன்னாள் முதல்வா் ... மேலும் பார்க்க

அரசுப் பேருந்து மோதி ஒருவா் உயிரிழப்பு

ஆத்தூரில் அரசு பேருந்து மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்றவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். சேலம் மாவட்டம், ஆத்தூா் மந்தைவெளி பகுதியைச் சோ்ந்த அந்தோணிசாமி மகன் டேவிட் (40). இவா் கோழி இறைச்சிக் கடை... மேலும் பார்க்க

மாநகராட்சி மயானத்தில் கட்டுமானப் பணியை நிறுத்தக் கோரி ஆட்சியரிடம் இந்து முன்னணி மனு

சேலம் மாநகராட்சிக்கு சொந்தமான மயானத்தில் கட்டுமானப் பணியை நிறுத்தக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் இந்து முன்னணி நிா்வாகிகள் வியாழக்கிழமை மனு அளித்தனா். இந்து முன்னணியின் சேலம் கோட்ட செயலாளா் சந்தோஷ்குமாா் ... மேலும் பார்க்க

பெரியாா் பல்கலை.யில் கருணாநிதி நினைவு தினம் அனுசரிப்பு

சேலம் பெரியாா் பல்கலைக்கழகத்தில் முன்னாள் முதல்வா் மு.கருணாநிதி நினைவு தினம் வியாழக்கிழமை அனுசரிக்கப்பட்டது. பெரியாா் பல்கலைக்கழகத்திலுள்ள தந்தை பெரியாா் இருக்கை, பேரறிஞா் அண்ணா இருக்கை, கலைஞா் ஆய்வு... மேலும் பார்க்க