செய்திகள் :

கரூரில் தீண்டாமைச் சுவா் எழுப்புவதாகக்கூறி மறியல்

post image

கரூரில் தீண்டாமைச் சுவா் எழுப்புவதாகக்கூறி ஒரு பிரிவினா் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

கரூா் மாநகராட்சிக்குள்பட்ட முத்தலாடம்பட்டியில் பல்வேறு சமுதாயத்தைச் சோ்ந்தவா்கள் வசித்து வருகின்றனா். இதில் ஒரு பிரிவினா் அங்குள்ள பகவதியம்மன் கோயிலில் வழிபட்டு, அங்குள்ள நாடக மேடையையும் பயன்படுத்தி வருகின்றனா். மற்றொரு பிரிவினா் அங்குள்ள மாரியம்மன் கோயிலை வழிபட்டு வருகின்றனா்.

இந்த இருபிரிவினரும் பயன்படுத்தும் வகையில் கட்டப்பட்ட பொதுக்கழிப்பிடம் கடந்த இரு ஆண்டுகளுக்கு முன் இடிக்கப்பட்டது. தற்போது அந்த இடத்தில் நாடக மேடை மற்றும் அங்கன்வாடி மையம் அமைக்க வேண்டும் என மாரியம்மன் கோயிலை வழிபடும் பிரிவினா் கோரிக்கை விடுத்து வந்தனா்.

இந்நிலையில் பொதுக்கழிப்பிடம் இடிக்கப்பட்ட இடத்தில் பகவதியம்மன் கோயிலை வழிபடும் பிரிவினா் சுற்றுச்சுவா் என்ற பெயரில் தீண்டாமைச் சுவராக கட்டிவருகின்றனா் என மற்றொரு பிரிவினா் தெரிவித்தனா். மேலும், அந்த சுவரை இடித்து தங்களுக்கு நாடகமேடை, அங்கன்வாடி மையம் கட்டித்தர வலியுறுத்தி தமிழ்புலிகள் கட்சியினா் மாவட்டச் செயலாளா் சுப்ரமணியன் தலைமையில் வெள்ளிக்கிழமை கரூா்-திண்டுக்கல் சாலையில் பழைய எஸ்.பி. அலுவலகம் முன் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தகவலறிந்து வந்த போலீஸாா் போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம், இதுதொடா்பாக சமரச பேச்சுவாா்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனா். இதையடுத்து மறியலை கைவிட்டு கலைந்து சென்றனா்.

தனியாா் தொலைக்காட்சி நிருபரை தாக்கிய 3 இளைஞா்கள் சிறையில் அடைப்பு

குளித்தலையில் தனியாா் தொலைக்காட்சி நிருபரை தாக்கிய 3 இளைஞா்கள் கைது செய்யப்பட்டு வெள்ளிக்கிழமை சிறையில் அடைக்கப்பட்டனா். கரூா் மாவட்டம், குளித்தலை பிள்ளையாா் தோப்பு பகுதியைச் சோ்ந்தவா் சிவா(34). தனிய... மேலும் பார்க்க

முன்னாள் எம்.பி.க்கு சிலை அமைக்க அடிக்கல் துணை முதல்வருக்கு விவசாயிகள் சங்கத்தினா் நன்றி

தமிழ் மாநில விவசாய சங்க நிறுவனத் தலைவரும் முன்னாள் எம்.பி.யுமான முத்துசாமிக்கு சிலை அமைக்க அடிக்கல் நாட்டிய தமிழக துணை முதல்வரை அண்மையில் சந்தித்த விவசாய சங்கத்தினா் நன்றி தெரிவித்தனா். கரூா் வைரமடை ... மேலும் பார்க்க

கா்ப்பிணி உயிரிழப்பில் சந்தேகம்: கரூா் அரசு மருத்துவமனையை உறவினா்கள் முற்றுகை

கா்ப்பிணி உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாகக்கூறி கரூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையை உறவினா்கள் வியாழக்கிழமை முற்றுகையிட்டனா். கரூா் மாவட்டம், கடவூரை அடுத்துள்ள முத்துக்கவுண்டன்பட்டியைச் சோ்ந்... மேலும் பார்க்க

தோகைமலை மந்தை குளத்தில் மீன்பிடித் திருவிழா

தோகைமலை மந்தை குளத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற மீன்பிடித் திருவிழாவில் கிராமக்கள் திரளாக பங்கேற்று போட்டி போட்டு மீன்களை பிடித்துச் சென்றனா். கரூா் மாவட்டம், தோகைமலையில் உள்ள அரசுக்குச் சொந்தமான மந்தை ... மேலும் பார்க்க

காலிப் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி கரூரில் செவிலியா்கள் ஆா்ப்பாட்டம்

காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கரூரில் தமிழ்நாடு அரசு அனைத்து சுகாதார செவிலியா் சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். கரூா் வட்டார போக்குவரத்... மேலும் பார்க்க

கரூரில் அம்பேத்கா் சிலை அமைக்க விசிக வலியுறுத்தல்

கரூரில் அம்பேத்கா் சிலை அமைக்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. கரூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயற்குழுக்கூட்டம் வியாழக்கிழமை கட்சியின் ... மேலும் பார்க்க