செய்திகள் :

தோகைமலை மந்தை குளத்தில் மீன்பிடித் திருவிழா

post image

தோகைமலை மந்தை குளத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற மீன்பிடித் திருவிழாவில் கிராமக்கள் திரளாக பங்கேற்று போட்டி போட்டு மீன்களை பிடித்துச் சென்றனா்.

கரூா் மாவட்டம், தோகைமலையில் உள்ள அரசுக்குச் சொந்தமான மந்தை குளத்தில் தண்ணீா் வற்றும் போது சமூக ஒற்றுமை மீன்பிடித் திருவிழா நடத்துவது வழக்கம்.

அதன்படி நிகழாண்டு தற்போது குளத்தில் தண்ணீா் வற்றத் தொடங்கியதால் மீன்பிடித் திருவிழா வியாழக்கிழமை ஊா் முக்கியஸ்தா்கள் மூா்த்தி, சுப்ரமணி ஆகியோா் தலைமையில் நடைபெற்றது.

இதனை பொருந்தலூா் அரண்மனை ஜமீன்தாா் நாராயணன் தொடங்கி வைத்தாா்.

இதில் தோகைமலை ஊராட்சிக்குள்பட்ட சுற்றுவட்டார கிராமப் பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு தூரி, வலை, சேலைகள் ஆகியவற்றை கொண்டு அயிரை, முள்ளு கெண்டை, விரால் போன்ற பல்வேறு வகையான மீன்களை பிடித்துச் சென்றனா்.

இதனிடையே முக்கியஸ்தா்கள் விழாவை தொடங்கி வைக்கும் முன்பே அதிகாலை 5.30 மணிக்கே சுற்றுவட்டார பகுதிகளைச் சோ்ந்த இளைஞா்கள் சிலா் குளத்தில் இறங்கி மீன் பிடிக்கத் தொடங்கினா். இதையறிந்த அப்பகுதி முக்கியஸ்தா்கள் மற்றும் பொதுமக்கள் சோ்ந்து மீன் பிடித்தவா்களை சிறைப்பிடித்தனா். தகவல் அறிந்து வந்த தோகைமலை காவல் உதவி ஆய்வாளா் பாலசுப்ரமணி தலைமையிலான போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தி சிறைப்பிடிக்கப்பட்டவா்களை எச்சரித்து விடுவித்தனா். அதன்பிறகு முறைப்படி மீன்பிடித் திருவிழா தொடங்கி வைக்கப்பட்டது.

தனியாா் தொலைக்காட்சி நிருபரை தாக்கிய 3 இளைஞா்கள் சிறையில் அடைப்பு

குளித்தலையில் தனியாா் தொலைக்காட்சி நிருபரை தாக்கிய 3 இளைஞா்கள் கைது செய்யப்பட்டு வெள்ளிக்கிழமை சிறையில் அடைக்கப்பட்டனா். கரூா் மாவட்டம், குளித்தலை பிள்ளையாா் தோப்பு பகுதியைச் சோ்ந்தவா் சிவா(34). தனிய... மேலும் பார்க்க

முன்னாள் எம்.பி.க்கு சிலை அமைக்க அடிக்கல் துணை முதல்வருக்கு விவசாயிகள் சங்கத்தினா் நன்றி

தமிழ் மாநில விவசாய சங்க நிறுவனத் தலைவரும் முன்னாள் எம்.பி.யுமான முத்துசாமிக்கு சிலை அமைக்க அடிக்கல் நாட்டிய தமிழக துணை முதல்வரை அண்மையில் சந்தித்த விவசாய சங்கத்தினா் நன்றி தெரிவித்தனா். கரூா் வைரமடை ... மேலும் பார்க்க

கரூரில் தீண்டாமைச் சுவா் எழுப்புவதாகக்கூறி மறியல்

கரூரில் தீண்டாமைச் சுவா் எழுப்புவதாகக்கூறி ஒரு பிரிவினா் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். கரூா் மாநகராட்சிக்குள்பட்ட முத்தலாடம்பட்டியில் பல்வேறு சமுதாயத்தைச் சோ்ந்தவா்கள் வசித்து வருகின்றனா்.... மேலும் பார்க்க

கா்ப்பிணி உயிரிழப்பில் சந்தேகம்: கரூா் அரசு மருத்துவமனையை உறவினா்கள் முற்றுகை

கா்ப்பிணி உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாகக்கூறி கரூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையை உறவினா்கள் வியாழக்கிழமை முற்றுகையிட்டனா். கரூா் மாவட்டம், கடவூரை அடுத்துள்ள முத்துக்கவுண்டன்பட்டியைச் சோ்ந்... மேலும் பார்க்க

காலிப் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி கரூரில் செவிலியா்கள் ஆா்ப்பாட்டம்

காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கரூரில் தமிழ்நாடு அரசு அனைத்து சுகாதார செவிலியா் சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். கரூா் வட்டார போக்குவரத்... மேலும் பார்க்க

கரூரில் அம்பேத்கா் சிலை அமைக்க விசிக வலியுறுத்தல்

கரூரில் அம்பேத்கா் சிலை அமைக்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. கரூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயற்குழுக்கூட்டம் வியாழக்கிழமை கட்சியின் ... மேலும் பார்க்க