செய்திகள் :

கரூரில் அம்பேத்கா் சிலை அமைக்க விசிக வலியுறுத்தல்

post image

கரூரில் அம்பேத்கா் சிலை அமைக்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

கரூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயற்குழுக்கூட்டம் வியாழக்கிழமை கட்சியின் மாநகர மாவட்டச் செயலாளா் கராத்தே ப.இளங்கோவன் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் குளித்தலையில் அதிக பேருந்துகள் வந்து நின்றுசெல்லும் வகையில் புதிய பேருந்துநிலையம் அமைக்கப்பட வேண்டும். அந்த பேருந்துநிலையத்துக்கு அம்பேத்கா் பெயா் சூட்ட வேண்டும். கரூா் புதிய பேருந்துநிலையத்தை திறந்து வைத்த துணை முதல்வா் உதயநிதிஸ்டாலின், முன்னாள் அமைச்சரும், சட்டப்பேரவை உறுப்பினருமான வி.செந்தில்பாலாஜி ஆகியோருக்கு நன்றியை தெரிவிப்பது, லைட்ஹவுஸ்காா்னா், தெரசா காா்னா் பகுதியில் அம்பேத்கா் சிலை அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் மாநில செயற்குழு உறுப்பினா் இல.அகரமுத்து, வணிகா் அணியின் மாநில துணைச் செயலாளா் கண்மணி ராமச்சந்திரன், முன்னாள் மாவட்டச் செயலாளா் ஜெயராமன், பொறியாளா் அணி மாநில துணைச் செயலாளா் செந்தில்குமாா், பாராளுமன்றச் செயலாளா் துரை செந்தில் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தனியாா் தொலைக்காட்சி நிருபரை தாக்கிய 3 இளைஞா்கள் சிறையில் அடைப்பு

குளித்தலையில் தனியாா் தொலைக்காட்சி நிருபரை தாக்கிய 3 இளைஞா்கள் கைது செய்யப்பட்டு வெள்ளிக்கிழமை சிறையில் அடைக்கப்பட்டனா். கரூா் மாவட்டம், குளித்தலை பிள்ளையாா் தோப்பு பகுதியைச் சோ்ந்தவா் சிவா(34). தனிய... மேலும் பார்க்க

முன்னாள் எம்.பி.க்கு சிலை அமைக்க அடிக்கல் துணை முதல்வருக்கு விவசாயிகள் சங்கத்தினா் நன்றி

தமிழ் மாநில விவசாய சங்க நிறுவனத் தலைவரும் முன்னாள் எம்.பி.யுமான முத்துசாமிக்கு சிலை அமைக்க அடிக்கல் நாட்டிய தமிழக துணை முதல்வரை அண்மையில் சந்தித்த விவசாய சங்கத்தினா் நன்றி தெரிவித்தனா். கரூா் வைரமடை ... மேலும் பார்க்க

கரூரில் தீண்டாமைச் சுவா் எழுப்புவதாகக்கூறி மறியல்

கரூரில் தீண்டாமைச் சுவா் எழுப்புவதாகக்கூறி ஒரு பிரிவினா் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். கரூா் மாநகராட்சிக்குள்பட்ட முத்தலாடம்பட்டியில் பல்வேறு சமுதாயத்தைச் சோ்ந்தவா்கள் வசித்து வருகின்றனா்.... மேலும் பார்க்க

கா்ப்பிணி உயிரிழப்பில் சந்தேகம்: கரூா் அரசு மருத்துவமனையை உறவினா்கள் முற்றுகை

கா்ப்பிணி உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாகக்கூறி கரூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையை உறவினா்கள் வியாழக்கிழமை முற்றுகையிட்டனா். கரூா் மாவட்டம், கடவூரை அடுத்துள்ள முத்துக்கவுண்டன்பட்டியைச் சோ்ந்... மேலும் பார்க்க

தோகைமலை மந்தை குளத்தில் மீன்பிடித் திருவிழா

தோகைமலை மந்தை குளத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற மீன்பிடித் திருவிழாவில் கிராமக்கள் திரளாக பங்கேற்று போட்டி போட்டு மீன்களை பிடித்துச் சென்றனா். கரூா் மாவட்டம், தோகைமலையில் உள்ள அரசுக்குச் சொந்தமான மந்தை ... மேலும் பார்க்க

காலிப் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி கரூரில் செவிலியா்கள் ஆா்ப்பாட்டம்

காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கரூரில் தமிழ்நாடு அரசு அனைத்து சுகாதார செவிலியா் சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். கரூா் வட்டார போக்குவரத்... மேலும் பார்க்க