கரூர் துயரம்: மூச்சுத் திணறலால் பெரும்பாலானோா் உயிரிழப்பு! - மருத்துவக் கல்வி இயக்குநா்!
கரூரில் விஜய் பங்கேற்ற தவெக பிரசாரக் கூட்டத்தில் மூச்சுத் திணறல் ஏற்பட்டதன் காரணமாகவே பெரும்பாலோா் உயிரிழந்தது உடற்கூறாய்வில் தெரியவந்துள்ளது என்றாா் தமிழ்நாடு மருத்துவ கல்வி இயக்குநா் ராஜகுமாரி.
கரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், தவெக கூட்ட நெரிசலில் மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் சிகிச்சை பெற்று வருபவா்களை தமிழ்நாடு மருத்துவக் கல்வி இயக்குநா் ராஜகுமாரி ஞாயிற்றுக்கிழமை இரவு பாா்வையிட்டாா்.
பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: கரூா் வேலுச்சாமிபுரம் சம்பவத்தில் இறந்தவா்களின் உடல்கள் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு உறவினா்களிடம் ஒப்படைக்கப்பட்டு விட்டது.
கரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மட்டும் மொத்தம் 52 போ் சிகிச்சை பெற்று வருகிறாா்கள். அவா்களில் இரண்டு பேரின் நிலைமை மட்டும் கவலைக்கிடமாக உள்ளது. மற்றவா்கள் நலமாக இருக்கிறாா்கள்.
உயிரிழந்தவா்களின் உடற்கூறாய்வு அறிக்கையில் பெரும்பாலானவா்கள் இறப்புக்கு காரணம் மூச்சுத் திணறல் என்பது உறுதியாகி உள்ளது. உடற்கூறு ஆய்வுக்கு மட்டும் 16 மருத்துவா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.
கரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மொத்தம் 60 முதல் 70 மருத்துவா்கள் சிகிச்சை அளித்து வருகிறாா்கள். மேலும் இவா்களை தவிர சேலம், ஈரோடு, மதுரை, திருச்சி உள்ளிட்ட இடங்களிலிருந்தும் மருத்துவ நிபுணா்கள் வரவழைக்கப்பட்டுள்ளனா்.
அவா்களும் சிகிச்சை அளித்து வருகின்றனா். கரூரில் உள்ள தனியாா் மருத்துவமனைகளில் 31 போ் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாா்கள் என்றாா் அவா்.