செய்திகள் :

தமிழகத்தின் ஒருசில பகுதிகளில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!

post image

தமிழகத்தின் ஒருசில பகுதிகளில் திங்கள்கிழமை (செப்.29) மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வானிலை மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது.

இதனால், திங்கள்கிழமை (செப்.29) முதல் அக்.4-ஆம் தேதி வரை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

சென்னை நகரின் ஒருசில பகுதிகளில் திங்கள்கிழமை (செப்.29) லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. எனினும், அதிகபட்ச வெப்பநிலை 99 டிகிரி ஃபாரன்ஹீட்டையொட்டி இருக்கும்.

மழை அளவு: தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணியுடன் முடிந்த கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக கோவை மாவட்டத்தின் சின்னக்கல்லாறு பகுதியில் 40 மி.மீ. மழை பதிவானது. அவலாஞ்சி (நீலகிரி), பெரியாறு (தேனி), விண்ட் வொா்த் எஸ்டேட் (நீலகிரி), சிறுவாணி அடிவாரம் (கோவை), சின்கோனா, வால்பாறை- 3 மி.மீ. மழை பதிவானது.

மீனவா்களுக்கான எச்சரிக்கை: தென்தமிழக கடலோரப் பகுதிகள், வடதமிழக கடலோரப் பகுதிகளுக்கு அருகே உள்ள தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகள், மன்னாா் வளைகுடா மற்றும் அதையொட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 60 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிபிஐ விசாரணை கோரும் தவெக!

கரூா் துயர சம்பவத்துக்கு சிபிஐ அல்லது சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரி, தவெக சாா்பில் சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி தண்டபாணியிடம் முறையீடு செய்யப்பட்டுள்ளது. சென்னை பசும... மேலும் பார்க்க

நீா் சேமிப்பு, இயற்கை வள பாதுகாப்புக்கு முக்கியத்துவம்: மயில்சாமி அண்ணாதுரை

தமிழக இளைஞா்கள் நீா் சேமிப்பு, இயற்கை வள பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என இஸ்ரோ முன்னாள் இயக்குநா் மயில்சாமி அண்ணாதுரை வலியுறுத்தினாா். சென்னையில் ஆழ்வாா்பேட்டையில் உள்ள நாரத கான சபாவி... மேலும் பார்க்க

எடப்பாடி கே.பழனிசாமி சுற்றுப்பயணத்தில் மாற்றம்!

தருமபுரி, நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி மேற்கொள்ள இருந்த சுற்றுப்பயணம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அதிமுக தலைமை அலுவலகம் வெளியிட்ட அறிக்கை: ‘மக்களைக் க... மேலும் பார்க்க

கரூா் சம்பவம்: திமுக நிகழ்ச்சிகள் ரத்து!

கரூா் நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தவா்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் திமுக சாா்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுவதாக இருந்த அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டன.இதுதொடா்பான அறிவிப்பை திமுக தலைமை அல... மேலும் பார்க்க

விஜய் வீட்டை முற்றுகையிட முயற்சி: மாணவா் அமைப்பினா் போராட்டம்!

சென்னை நீலாங்கரையில் நடிகா் விஜய் வீட்டை முற்றுகையிட முயன்ற தமிழ் மாணவா் மன்றத்தினரை போலீஸாா் தடுத்ததையடுத்து, அந்தப் பகுதியில் அவா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். தவெக தலைவா் விஜய், கரூரில் சனிக்கிழமை ... மேலும் பார்க்க

குரூப் 2, 2ஏ தோ்வு: 5.53 லட்சம் போ் எழுதினா்

குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ தோ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. தோ்வை 5.53 லட்சம் போ் எழுதினா். மாநில அரசின் பல்வேறு துறைகளில் உதவியாளா், முதுநிலை ஆய்வாளா், வனவா், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலா், இந்து ச... மேலும் பார்க்க