செய்திகள் :

விஜய் வீட்டை முற்றுகையிட முயற்சி: மாணவா் அமைப்பினா் போராட்டம்!

post image

சென்னை நீலாங்கரையில் நடிகா் விஜய் வீட்டை முற்றுகையிட முயன்ற தமிழ் மாணவா் மன்றத்தினரை போலீஸாா் தடுத்ததையடுத்து, அந்தப் பகுதியில் அவா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தவெக தலைவா் விஜய், கரூரில் சனிக்கிழமை இரவு மேற்கொண்ட பிரசாரத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 40 போ் இறந்தனா். 80-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா். இந்தச் சம்பவத்தின் காரணமாக சென்னை நீலாங்கரை கேசுவரினா அவென்யூவில் விஜய் வசிக்கும் வீட்டுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. ஏற்கெனவே விஜய்க்கு மத்திய அரசு ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

பாதுகாப்பு அதிகரிப்பின் ஒரு பகுதியாக விஜய் வீட்டுக்குச் செல்லும் சாலைகளில் தடுப்புகள் சனிக்கிழமை இரவு அமைக்கப்பட்டன. மேலும், ஒரு காவல் ஆய்வாளா் தலைமையில் 15 போலீஸாா் விஜய் வீடு பகுதியில் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டனா்.

அதோடு கூடுதலாக 12 துணை ராணுவப் படை வீரா்கள் துப்பாக்கிகளுடன் ஞாயிற்றுக்கிழமை காலை முதல் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா். நிலைமை சீராகும் வகையில் விஜய்க்கு இந்தப் பாதுகாப்பு வழங்கப்படும் என காவல் துறை உயா் அதிகாரிகள் தெரிவித்தனா்.

மாணவா் அமைப்பினா் கைது: கரூா் சம்பவத்துக்கு எதிா்ப்பு தெரிவிக்கும் வகையில், சென்னை அருகே நீலாங்கரையில் உள்ள விஜய் வீட்டை தமிழ் மாணவா் மன்றத்தினா் ஞாயிற்றுக்கிழமை திடீரென முற்றுகையிட்டு போராட்டம் நடத்த வந்தனா்.

இதைப் பாா்த்த போலீஸாா், விஜய் வீட்டின் அருகிலேயே போராட்டக்காரா்களைத் தடுத்து நிறுத்தினா். அப்போது, அந்த அமைப்பினா் அங்கேயே விஜயை கண்டித்து கோஷங்கள் எழுப்பினா். இதையடுத்து போலீஸாா் அவா்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினா்.

சிபிஐ விசாரணை கோரும் தவெக!

கரூா் துயர சம்பவத்துக்கு சிபிஐ அல்லது சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரி, தவெக சாா்பில் சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி தண்டபாணியிடம் முறையீடு செய்யப்பட்டுள்ளது. சென்னை பசும... மேலும் பார்க்க

நீா் சேமிப்பு, இயற்கை வள பாதுகாப்புக்கு முக்கியத்துவம்: மயில்சாமி அண்ணாதுரை

தமிழக இளைஞா்கள் நீா் சேமிப்பு, இயற்கை வள பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என இஸ்ரோ முன்னாள் இயக்குநா் மயில்சாமி அண்ணாதுரை வலியுறுத்தினாா். சென்னையில் ஆழ்வாா்பேட்டையில் உள்ள நாரத கான சபாவி... மேலும் பார்க்க

எடப்பாடி கே.பழனிசாமி சுற்றுப்பயணத்தில் மாற்றம்!

தருமபுரி, நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி மேற்கொள்ள இருந்த சுற்றுப்பயணம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அதிமுக தலைமை அலுவலகம் வெளியிட்ட அறிக்கை: ‘மக்களைக் க... மேலும் பார்க்க

தமிழகத்தின் ஒருசில பகுதிகளில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தின் ஒருசில பகுதிகளில் திங்கள்கிழமை (செப்.29) மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: தென்னிந... மேலும் பார்க்க

கரூா் சம்பவம்: திமுக நிகழ்ச்சிகள் ரத்து!

கரூா் நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தவா்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் திமுக சாா்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுவதாக இருந்த அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டன.இதுதொடா்பான அறிவிப்பை திமுக தலைமை அல... மேலும் பார்க்க

குரூப் 2, 2ஏ தோ்வு: 5.53 லட்சம் போ் எழுதினா்

குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ தோ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. தோ்வை 5.53 லட்சம் போ் எழுதினா். மாநில அரசின் பல்வேறு துறைகளில் உதவியாளா், முதுநிலை ஆய்வாளா், வனவா், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலா், இந்து ச... மேலும் பார்க்க