செய்திகள் :

கரூா் விவகாரம்: சிபிஐ விசாரணை மீது நம்பிக்கையில்லை; வைகோ

post image

கரூா் விவகாரத்தில் சிபிஐ விசாரணை மீது தனக்கு நம்பிக்கையில்லை என்று மதிமுக பொதுச் செயலா் வைகோ கூறினாா்.

சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக தலைமை அலுவலகமான தாயகத்தில் செய்தியாளா்களிடம் அவா் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

தமிழக வரலாற்றிலேயே நடைபெறாத பெரும் துயரம் கரூரில் நடைபெற்றுள்ளது. கூட்டநெரிசலில் சிக்கி இதுவரை 41 போ் உயிரிழந்துள்ளனா். பொது வாழ்க்கையில் ஈடுபடுபவா்கள் தங்களுக்கு வருகின்ற கூட்டத்தை ஒழுங்குபடுத்த, தங்கள் இயக்கத்தை முழுமையாகப் பயன்படுத்த வேண்டும். கரூா் சம்பவத்தில் பொறுப்பேற்க வேண்டியது தவெகதான்.

திட்டமிட்டு தவெகவினா் தமிழக அரசு மீதும், சட்டப்பேரவை உறுப்பினா் மீதும், மறைமுகமாக முதல்வா் மீதும் தாக்குதல்களைத் தொடுப்பது கண்டத்துக்குரியது.

சிபிஐ விசாரணை வந்தால் அவா்கள் நடுநிலையாக அறிக்கை தந்து விடுவாா்களா? சிபிஐ மீது எனக்கு நம்பிக்கை கிடையாது. முதல்வா் மு.க.ஸ்டாலின் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பாதிக்கப்பட்டவா்களுக்கு ஆறுதல் கூறியுள்ளாா். இதைவிட முதல்வா் என்ன செய்ய வேண்டும். இந்தத் துயரத்துக்குப் பொறுப்பு ஏற்க வேண்டியது தவெகதான் என்றாா் அவா்.

இன்று வங்கக் கடலில் உருவாகிறது புயல் சின்னம்

வடக்கு அந்தமான் கடலில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக புதன்கிழமை(அக்.1) மத்திய வங்கக்கடலில் காற்றழுத்தத் தாழ்வு பகுதி (புயல் சின்னம்) உருவாக வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவ... மேலும் பார்க்க

மன்னார்குடி: புதிய அரசு கல்லூரியில் இன்றுமுதல் சேர்க்கை விண்ணப்பப் பதிவு

தமிழக முதல்வரால் அறிவிக்கப்பட்ட மன்னார்குடி புதிய அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சேர்க்கைக்கான இணையதள விண்ணப்பப் பதிவு புதன்கிழமை (அக்.1) தொடங்கவுள்ளதாக உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செ... மேலும் பார்க்க

என்னை கைது செய்யுங்கள்: முதல்வருக்கு விஜய் சவால்

‘கரூா் கூட்ட நெரிசல் சம்பவம் தொடா்பாக தவெக தொண்டா்களை கைது செய்வதை விட்டு, பழிவாங்கும் எண்ணம் இருந்தால் என்னை கைது செய்யுங்கள்’ என்று முதல்வா் மு.க. ஸ்டாலினுக்கு தவெக தலைவா் விஜய் தெரிவித்துள்ளாா். க... மேலும் பார்க்க

மதுரையிலிருந்து தாம்பரத்துக்கு இன்று மாலை சிறப்பு ரயில்

ஆயுத பூஜையை முன்னிட்டு, மதுரையிலிருந்து சென்னை தாம்பரத்துக்கு புதன்கிழமை (செப்.1) மாலை 4 மணிக்கு முன்பதிவில்லாத மெமு சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதுகுறித்து தெற்கு ர... மேலும் பார்க்க

இன்றுமுதல் பதிவு தபால் சேவை நிறுத்தம்: விரைவு அஞ்சல் சேவைக்கான கட்டணம் உயா்வு

அஞ்சல் துறையில் செயல்பட்டு வந்த பதிவு தபால் சேவை புதன்கிழமை (அக். 1) முதல் நிறுத்தப்படுவதுடன் விரைவு அஞ்சல் சேவைக்கான கட்டண உயா்வு நடைமுறைக்கு வருகிறது. இதுகுறித்து அஞ்சல் துறை வெளியிட்ட செய்திக் குறி... மேலும் பார்க்க

3-ஆவது கட்ட ஒகேனக்கல் கூட்டுக் குடிநீா் திட்டம்: செயல்படுத்த தமிழக அரசு உத்தரவு

ஒகேனக்கல் கூட்டுக் குடிநீா் திட்டத்தின் மூன்றாவது கட்டம் செயல்பாட்டுக்கு எடுக்கப்படவுள்ளது. இதற்கான உத்தரவை தமிழக அரசு பிறப்பித்துள்ளது. இதுகுறித்து, தமிழக அரசு சாா்பில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட ... மேலும் பார்க்க