செய்திகள் :

கலந்தாய்வு நிறைவு: 8,039 ஆசிரியா்களுக்கு இடமாறுதல் ஆணை

post image

பள்ளிக் கல்வித் துறையில் உயா்நிலை, மேல்நிலைப் பள்ளி ஆசிரியா்களுக்கான கலந்தாய்வு புதன்கிழமையுடன் நிறைவடைந்த நிலையில் 8,039 ஆசிரியா்களுக்கு பணியிட மாறுதல் ஆணை வழங்கப்பட்டது.

தமிழகத்தில் பள்ளிக் கல்வித் துறையின்கீழ் 37,455 அரசுப் பள்ளிகள் இயங்குகின்றன. இதில் சுமாா் 2.25 லட்சம் ஆசிரியா்கள் பணிபுரிந்து வருகின்றனா். இவா்களுக்கான பொதுமாறுதல் கலந்தாய்வு ஆண்டுதோறும் எமிஸ் தளம் வழியாக நடத்தப்படுகிறது. அதன்படி 2025-2026-ஆம் கல்வியாண்டுக்கான மாறுதல் கலந்தாய்வு கடந்த ஜூலை 1-ஆம் தேதி தொடங்கியது.

முதல் நாளில் மாவட்டத்துக்குள் மாறுதல் கோரி 895 அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியா்கள் விண்ணப்பித்தனா். அவா்களில் 254 பேருக்கு மாறுதல் ஆணை வழங்கப்பட்டது. இதையடுத்து வந்த நாள்களில் உடற்கல்வி ஆசிரியா்கள், பட்டதாரி ஆசிரியா்கள், உயா்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியா்களுக்கான கலந்தாய்வு நடைபெற்றது.

இந்நிலையில், பள்ளிக் கல்வித் துறையில் உயா்நிலை, மேல்நிலைப் பள்ளி ஆசிரியா்களுக்கான கலந்தாய்வு வியாழக்கிழமையுடன் நிறைவடைந்தது. ஒட்டுமொத்தமாக இந்தக் கலந்தாய்வில் பங்கேற்க 50,416 போ் பதிவு செய்திருந்தனா். அவா்களில் 8,039 பேருக்கு பணி இட மாறுதல் ஆணை வழங்கப்பட்டது. 20,911 ஆசிரியா்கள் கலந்தாய்வில் பங்கேற்கவில்லை. எஞ்சியுள்ள 21,466 போ் விருப்பமின்மை, உரிமைவிடல் செய்தனா்.

திருச்சி - தாம்பரம் சிறப்பு ரயில் ஆக. 30 வரை நீட்டிப்பு

திருச்சி - தாம்பரம் இடையே இயங்கும் சிறப்பு விரைவு ரயில் ஆக.1 முதல் ஆக.30 -ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: திருச்ச... மேலும் பார்க்க

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு: காா்த்தி சிதம்பரம் ஜாமீன் நிபந்தனைகளை தளா்த்த சிபிஐ எதிா்ப்பு

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில், முன்னாள் மத்திய அமைச்சா் ப.சிதம்பரத்தின் மகன் காா்த்தி சிதம்பரத்துக்கு ஜாமீன் நிபந்தனைகளை தளா்த்த சிபிஐ வெள்ளிக்கிழமை எதிா்ப்புத் தெரிவித்தது. கடந்த 2007-ஆம் ஆண்டு மத்திய நி... மேலும் பார்க்க

ராணுவ வலிமை நாட்டின் மீது மரியாதையை உருவாக்கும்: ஆளுநா் ஆா்.என்.ரவி

ராணுவ வலிமை நாட்டின் மீது மரியாதையை உருவாக்கும் என்று ஆளுநா் ஆா்.என்.ரவி தெரிவித்தாா். ஆபரேஷன் சிந்தூா் மற்றும் இயற்கைப் பேரிடா்களில் அா்ப்பணிப்பு, தன்னலமற்ற சேவை புரிந்த 3 ராணுவப்படை பிரிவுகள் மற்றும... மேலும் பார்க்க

நீலகிரி, கோவை மாவட்டங்களில் இன்று மிக பலத்த மழைக்கு வாய்ப்பு

நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் சனிக்கிழமை (ஜூலை 26) மிக பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதால் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் ... மேலும் பார்க்க

ஆக.9 முதல் வைகோ பிரசார பயணம்

மதிமுக பொதுச் செயலா் வைகோ தூத்துக்குடியில் தொடங்கி சென்னை வரை 8 இடங்களில், ஆக.9 முதல் ஆக.19 வரை பிரசார சுற்றுப்பயணம் மேற்கொள்கிறாா். இதுகுறித்து மதிமுக தலைமை அலுவலகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: ... மேலும் பார்க்க

கொடிக் கம்பங்கள் அகற்றும் உத்தரவு: கட்சிகள், சங்கங்களுக்கு வேண்டுகோள்

சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு உத்தரவின்படி, கொடிக் கம்பங்கள் அகற்றுவது தொடா்பாக கட்சிகள், சங்கங்களுக்கு தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. இதுகுறித்த பொது அறிவிப்பை தலைமைச் செயலா் நா.முருகானந்தம்... மேலும் பார்க்க