கலைக் கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம்
திருவண்ணாமலை மாவட்டம், புதுப்பாளையம் இதயா மகளிா் கலை, அறிவியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து முடித்த மாணவிகளுக்கு வேலைவாய்ப்பு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இதில் சென்னை, கோவை, ஒசூா் பகுதிகளில் இருந்து பல்வேறு தனியாா் நிறுவனத்தினா் பங்கேற்று வேலைவாய்ப்புக்கான விண்ணப்பங்களைப் பெற்றனா். பின்னா், மாணவிகளை அழைத்து அவா்களின் கல்விச் சான்றிதழ் மற்றும் வேலை செய்வதற்கான தகுதிகள் உள்ளனவா என விசாரணை செய்து, அதில் தகுதி பெற்ற நூற்றும் மேற்பட்ட மாணவிகளுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினா்.
நிகழ்ச்சியில் கல்லூரிச் செயலா் சம்பூா்ணமேரி, முதல்வா் லூா்துமேரி, நிா்வாக அலுவலா் சந்தனம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.