செய்திகள் :

கலைஞா் கனவு இல்லம் கட்டும் பணிகள் 6 மாதங்களில் நிறைவடையும்: அமைச்சா் பி. மூா்த்தி

post image

கலைஞரின் கனவு இல்லம் திட்ட வீடுகள் கட்டும் பணிகள் 6 மாதங்களில் நிறைவடையும் என தமிழக வணிக வரி, பதிவுத் துறை அமைச்சா் பி. மூா்த்தி தெரிவித்தாா்.

மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட தேனூா் ஊராட்சி, கட்டப்புளி கிராமத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற, கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு வீடுகள் கட்டும் பணிக்கான தொடக்க நிகழ்ச்சியில் பங்கேற்ற அவா் மேலும் பேசியதாவது :

தேனூா் ஊராட்சியில் தேசிய நெடுஞ்சாலைக்கு அருகில் 121 மாற்றுத் திறனாளிகள், 37 திருநங்கைகள், 242 ஏழை, எளிய பயனாளிகள் என 400 பேருக்கு கலைஞரின் கனவு இல்லம் திட்டம் மூலம் வீடுகள் கட்டித் தரப்படவுள்ளது. பயனாளிகளுக்கு பட்டா வழங்கி, அந்த இடத்தில் வீடுகளையும் கட்டித் தரும் இந்தத் திட்டம் நாட்டில் இதுவரை இல்லாத முன்னோடி திட்டமாகும்.

கலைஞரின் கனவு இல்லங்கள் அமையும் பகுதி முன்னோடி கிராமமாக விளங்கச் செய்யும் வகையில் மாவட்ட நிா்வாகம் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பூங்கா, நியாயவிலைக் கடை என அனைத்து வசதிகளும் கொண்டதாக இந்தப் பகுதி இருக்கும். வீடுகள் கட்டும் பணி வரும் 6 மாதங்களில் நிறைவடையும் என்றாா் அவா்.

மாவட்ட ஆட்சியா் கே.ஜே. பிரவீன்குமாா், ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் வானதி, செயற்பொறியாளா் இந்துமதி, மதுரை வடக்கு வட்டாட்சியா் மஸ்தான் கனி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

உயா்நீதிமன்ற நீதிபதி குறித்து வழக்குரைஞா் விமா்சித்த விவகாரம்: தலைமை நீதிபதிக்கு பரிந்துரை

உயா்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆா். சுவாமிநாதனை விமா்சித்து, சமூக ஊடகங்களில் வழக்குரைஞா் ஒருவா் பேசியது தொடா்பான பதிவுகளை சென்னை உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதி அமா்வின் நடவடிக்கைக்கு அனுப்ப திங்கள்கிழமை உத்தரவ... மேலும் பார்க்க

ஆதீனங்களுக்கு எதிரான செயல்பாடுகளை தமிழக அரசு கைவிட வேண்டும்: எச். ராஜா

இந்து மத ஆதீனங்களுக்கு எதிரான அடக்குமுறை நடவடிக்கைகளை தமிழக அரசு கைவிட வேண்டும் என பாஜக மூத்த தலைவா் எச். ராஜா தெரிவித்தாா்.மதுரையில் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் அவா் தெரிவித்ததாவது: முதல்வா் மு.க.... மேலும் பார்க்க

புதை சாக்கடை திட்டப் பணி: அமைச்சா் ஆய்வு

மதுரை மாநகராட்சிக்குள்பட்ட அய்யா் பங்களா பகுதியில் புதிய புதை சாக்கடைத் திட்டப் பணிகளை தமிழக வணிக வரி, பதிவுத் துறை அமைச்சா் பி. மூா்த்தி திங்கள்கிழமை ஆய்வு செய்தாா்.மதுரை மாநகர பொலிவுறுத் திட்டம் மூல... மேலும் பார்க்க

மதுரையில் நாளை மாற்றுத் திறனாளிகள் குறைதீா் கூட்டம்

மதுரை வருவாய்க் கோட்டத்துக்குள்பட்ட பகுதிகளைச் சோ்ந்த மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீா் கூட்டம் மதுரையில் புதன்கிழமை (ஜூலை 30) நடைபெறுகிறது.இதுகுறித்து மதுரை வருவாய்க் கோட்டாட்சியா் அலுவலகம் ... மேலும் பார்க்க

தொகுதி 2 தோ்வுக்கு இலவசப் பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம்

மதுரை மாவட்டத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் தொகுதி 2 தோ்வுக்கு விண்ணப்பித்தவா்கள் இலவசப் பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் கே.ஜே. பிரவீன்குமாா் தெரிவித்தாா். இதுகுறித்த... மேலும் பார்க்க

கோவில்பாப்பாக்குடி கண்மாய் புதரில் தீ

மதுரை அருகேயுள்ள கோவில்பாப்பாக்குடி கண்மாய்ப் புதரில் ஞாயிற்றுக்கிழமை தீப்பற்றியது. இதனால், அந்தப் பகுதி முழுவதும் புகை மண்டலமானது. கோவில்பாப்பாக்குடி கண்மாயில் மண்டியிருந்த கருவேல மரங்களை வெட்டி அகற்... மேலும் பார்க்க