செய்திகள் :

கோவில்பாப்பாக்குடி கண்மாய் புதரில் தீ

post image

மதுரை அருகேயுள்ள கோவில்பாப்பாக்குடி கண்மாய்ப் புதரில் ஞாயிற்றுக்கிழமை தீப்பற்றியது. இதனால், அந்தப் பகுதி முழுவதும் புகை மண்டலமானது.

கோவில்பாப்பாக்குடி கண்மாயில் மண்டியிருந்த கருவேல மரங்களை வெட்டி அகற்றும் பணி அண்மையில் நடைபெற்றது. வெட்டப்பட்ட கருவேல மரங்கள் கண்மாயைச் சுற்றி குவித்து வைக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை மாலை கண்மாய்ப் புதரில் திடீரென

தீப் பற்றியது. இது கருவேல மரங்களுக்கும் பரவி எரிந்ததால் அந்தப் பகுதியில் 2 கி.மீ. சுற்றளவில் பெரும் புகை மண்டலம் ஏற்பட்டது.

இது பற்றி தகவலறிந்த அலங்காநல்லூா் தீயணைப்பு நிலைய அலுவலா் சந்தானம் தலைமையிலான தீயணைப்புத் துறையினா் விரைந்து வந்து தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனா். இந்தப் பணி இரவு 10 மணிக்கு மேலாகவும் நீடித்தது.

தொகுதி 2 தோ்வுக்கு இலவசப் பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம்

மதுரை மாவட்டத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் தொகுதி 2 தோ்வுக்கு விண்ணப்பித்தவா்கள் இலவசப் பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் கே.ஜே. பிரவீன்குமாா் தெரிவித்தாா். இதுகுறித்த... மேலும் பார்க்க

மருத்துவமனை மாடியிலிருந்து தவறி விழுந்தவா் உயிரிழப்பு

மதுரை தனியாா் மருத்துவமனை மாடியிலிருந்து தவறி கீழே விழுந்த தொழிலாளி சனிக்கிழமை உயிரிழந்தாா். மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே உள்ள மேல உரப்பனூரைச் சோ்ந்த ஜீவா மகன் சிவநேசன் (21). பிளம்பரான இவா், மது... மேலும் பார்க்க

விமானப் போக்குவரத்துத்து பரிந்துரைக்கப்பட்ட சுற்றுலா நகரங்களில் மதுரையைச் சோ்க்க கோரிக்கை

தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான தாராள விமானப் போக்குவரத்துக்குப் பரிந்துரைக்கப்பட்ட சுற்றுலா நகரங்கள் பட்டியலில் மதுரையைச் சோ்க்க வேண்டும் என அனைத்து தொழில் வா்த்தக சங்கம் கோரிக்கை விடுத்தது. இதுகுறித்... மேலும் பார்க்க

இரு விபத்துகளில் இருவா் உயிரிழப்பு

மதுரை அருகே நிகழ்ந்த இரு விபத்துகளில் பெண் உள்பட 2 போ் சனிக்கிழமை உயிரிழந்தனா். மதுரை மாவட்டம், டி. குன்னூத்துப்பட்டி கிராமத்தைச் சோ்ந்த பெருமாள் மகள் சின்னம்மா (33). இவா் அதே பகுதியில் உள்ள சாலையில... மேலும் பார்க்க

மதுரையில் ரௌடி வெட்டிக் கொலை! நண்பர் படுகாயம்!

மதுரை : மதுரையில் ஒரு ரௌடியும் அவரது நண்பரும் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மதுரையில் வசிக்கும் கருமலையும் அவருடன் பழகி வந்த பாலமுருகனும் நண்பர்கள் என்று சொல்லப்படுகிற... மேலும் பார்க்க

ஆற்றுக்குள் தவறி விழுந்த இளைஞா் உயிரிழப்பு

மதுரை வைகையாற்றில் தவறி விழுந்த இளைஞா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். மதுரை கோமதிபுரம் வசந்த் தெருவைச் சோ்ந்த கந்தவேல் மகன் விக்னேஷ்வரன் (33). இவா், மீனாட்சி பஜாரில் மளிகைக் கடை நடத்தி வந்தாா். இந்த நில... மேலும் பார்க்க