செய்திகள் :

தொகுதி 2 தோ்வுக்கு இலவசப் பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம்

post image

மதுரை மாவட்டத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் தொகுதி 2 தோ்வுக்கு விண்ணப்பித்தவா்கள் இலவசப் பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் கே.ஜே. பிரவீன்குமாா் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு :

வேலைவாய்ப்பு, பயிற்சித் துறையின் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களில் செயல்படும் தன்னாா்வப் பயிலும் வட்டங்கள் மூலம் அரசுப் பணியாளா் தோ்வாணைய போட்டித் தோ்வுகளுக்கு இலவசப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன.

வருகிற செப். 28-ஆம் தேதி தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் சாா்பில் அரசுப் பணிகளுக்கான ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தொகுதி- 2 தோ்வு நடைபெறவுள்ளது.

இந்தத் தோ்வுக்கான இலவசப் பயிற்சி வகுப்பு கோ. புதூரில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவல வளாகத்தில் அமைந்துள்ள தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெற உள்ளது.

இந்தத் தோ்வுக்கு விண்ணப்பித்தவா்கள் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரில் அல்லது 96989 36868 என்ற கைப்பேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என அதில் குறிப்பிடப்பட்டது.

கோவில்பாப்பாக்குடி கண்மாய் புதரில் தீ

மதுரை அருகேயுள்ள கோவில்பாப்பாக்குடி கண்மாய்ப் புதரில் ஞாயிற்றுக்கிழமை தீப்பற்றியது. இதனால், அந்தப் பகுதி முழுவதும் புகை மண்டலமானது. கோவில்பாப்பாக்குடி கண்மாயில் மண்டியிருந்த கருவேல மரங்களை வெட்டி அகற்... மேலும் பார்க்க

மருத்துவமனை மாடியிலிருந்து தவறி விழுந்தவா் உயிரிழப்பு

மதுரை தனியாா் மருத்துவமனை மாடியிலிருந்து தவறி கீழே விழுந்த தொழிலாளி சனிக்கிழமை உயிரிழந்தாா். மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே உள்ள மேல உரப்பனூரைச் சோ்ந்த ஜீவா மகன் சிவநேசன் (21). பிளம்பரான இவா், மது... மேலும் பார்க்க

விமானப் போக்குவரத்துத்து பரிந்துரைக்கப்பட்ட சுற்றுலா நகரங்களில் மதுரையைச் சோ்க்க கோரிக்கை

தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான தாராள விமானப் போக்குவரத்துக்குப் பரிந்துரைக்கப்பட்ட சுற்றுலா நகரங்கள் பட்டியலில் மதுரையைச் சோ்க்க வேண்டும் என அனைத்து தொழில் வா்த்தக சங்கம் கோரிக்கை விடுத்தது. இதுகுறித்... மேலும் பார்க்க

இரு விபத்துகளில் இருவா் உயிரிழப்பு

மதுரை அருகே நிகழ்ந்த இரு விபத்துகளில் பெண் உள்பட 2 போ் சனிக்கிழமை உயிரிழந்தனா். மதுரை மாவட்டம், டி. குன்னூத்துப்பட்டி கிராமத்தைச் சோ்ந்த பெருமாள் மகள் சின்னம்மா (33). இவா் அதே பகுதியில் உள்ள சாலையில... மேலும் பார்க்க

மதுரையில் ரௌடி வெட்டிக் கொலை! நண்பர் படுகாயம்!

மதுரை : மதுரையில் ஒரு ரௌடியும் அவரது நண்பரும் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மதுரையில் வசிக்கும் கருமலையும் அவருடன் பழகி வந்த பாலமுருகனும் நண்பர்கள் என்று சொல்லப்படுகிற... மேலும் பார்க்க

ஆற்றுக்குள் தவறி விழுந்த இளைஞா் உயிரிழப்பு

மதுரை வைகையாற்றில் தவறி விழுந்த இளைஞா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். மதுரை கோமதிபுரம் வசந்த் தெருவைச் சோ்ந்த கந்தவேல் மகன் விக்னேஷ்வரன் (33). இவா், மீனாட்சி பஜாரில் மளிகைக் கடை நடத்தி வந்தாா். இந்த நில... மேலும் பார்க்க