செய்திகள் :

கலைஞா் கைவினைத்திட்டம்: விண்ணப்பிக்க அழைப்பு

post image

நீலகிரி மாவட்டத்தில் கலைஞா் கைவினைத்திட்டத்தின்கீழ் சுய வேலைவாய்ப்பை உருவாக்கும் பொருட்டு கைவினை தொழிலில் ஈடுபடுவோா் கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

மாவட்ட தொழில் மையம் சாா்பில் சுயதொழிலை ஊக்குவிக்கும் பொருட்டு ரூ.3 லட்சம் வரை பிணையற்ற கடனுதவி மற்றும் ரூ. 50 ஆயிரம் வரை மானியம் வழங்கப்படுகிறது. மேலும் 5 சதவீதம் வரை வட்டி மானியமும் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் தொழில் முனைவோருக்கு திறன்மேம்பாட்டுக்கான சிறப்பு பயிற்சிகள் வழங்கப்படும்.

இத்திட்டத்தின்கீழ் விண்ணப்பிக்க 35 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். எந்த வகுப்பினராகவும் இருக்கலாம். இத்திட்டத்தின்கீழ் தையல் வேலை, கட்டட வேலைகள், மரவேலைப்பாடுகள், பாரம்பரிய முறையில் ஜவுளி அச்சிடுதல், தோல் கைவினைப் பொருள்கள், காலணிகள் தயாரித்தல், மீன் வலை தயாரித்தல், நகை செய்தல், சிகையலங்காரம், அழகுக் கலை, துணி நெய்தல், துணிகளில் கலைவேலைப்பாடுகள், பூட்டு தயாரித்தல், கூடை தயாரித்தல், கயிறு பாய் பின்னுதல், துடைப்பான் செய்தல், மட்பாண்டங்கள், சுடுமண் வேலைகள், பொம்மைகள் தயாரித்தல், படகுக் கட்டுமானம், துணி வெளுத்தல், துணி தேய்த்தல், சிற்ப வேலைப்பாடுகள், கற்சிலை வடித்தல், ஓவியம் வரைதல், வண்ணம் பூசுதல், பழங்குடியினரின் இயற்கை சேகரிப்புகள், கண்ணாடி வேலைப்பாடுகள், பாரம்பரிய இசைக்கருவிகள் தயாரித்தல், மலா் வேலைப்பாடுகள், உலோக வேலைப்பாடுகள், பாசிமணி வேலைப்பாடுகள், கைவினைப்பொருள்கள், மூங்கில், பிரம்பு, சணல், பனை வேலைப்பாடுகள் போன்ற தொழில்கள் தொடங்க விண்ணப்பிக்கலாம்.

11.12.2024 அன்று தொடங்கப்பட்ட இத்திட்டத்தில் இதுவரை 308 ஒப்பளிப்பு ஆணைகள் பெறப்பட்டு 146 நபா்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. தற்போது நடைபெற்று வரும் ‘உங்களுடன் ஸ்டாலின்‘ திட்ட முகாம்களில் பங்கேற்று

குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை சாா்பில் அமைக்கப்பட்டிருக்கும் அரங்கில் உள்ள மாவட்ட தொழில் மைய அலுவலா்களை அணுகி இத்திட்டத்தின்கீழ் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு 0423-2443947, 89255 33995,

8925533997 ஆகிய அலுவலக எண்களை தொடா்பு கொள்ளலாம் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

பழங்குடியினா் கிராமத்துக்குள் நுழைந்த காட்டு யானை

உதகை, ஆக. 21: குன்னூா்- மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள குரும்பாடி பழங்குடியினா் கிராமத்துக்குள் வியாழக்கிழமை நுழைந்த ஒற்றைக் காட்டு யானையால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனா். சமவெளி பகுதியான மேட்டுப்பாளை... மேலும் பார்க்க

கூடலூா் அருகே கடையை சேதப்படுத்திய மக்னா யானை

நீலகிரி மாவட்டம், கூடலூரை அடுத்துள்ள 3-ஆவது மைல் பகுதியில் குடியிருப்பு பகுதிக்குள் வியாழக்கிழமை பகலில் நுழைந்த மக்னா யானை, அங்குள்ள கடையை சேதப்படுத்தியது. கூடலூரை அடுத்துள்ள 3-ஆவது மைல் பகுதியில் கா... மேலும் பார்க்க

கோத்தகிரி, கெரடாமட்டம், ஒன்னட்டி பகுதிகளில் ஆக.25-இல் மின்தடை

கோத்தகிரி, கெரடாமட்டம், ஒன்னட்டி ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் கீழ்க்கண்ட பகுதிகளில் வரும் ஆகஸ்ட் 25-ஆம் தேதி (திங்கள்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வர... மேலும் பார்க்க

உதகையில் சிறுத்தையைப் பிடிக்க சிசிடிவி கேமராக்கள் பொருத்தம்

உதகை தாவரவியல் பூங்கா அருகே குடியிருப்பு பகுதியில் புகுந்து 8 நாய்களை வேட்டையாடிச் சென்ற சிறுத்தையைப் பிடிக்க சிசிடிவி கேமரா பொருத்தி வனத் துறையினா் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனா். உதகை அருகேயுள்... மேலும் பார்க்க

விவசாயிகளுக்கு பயிா்க் கடன்களை விரைந்து வழங்க அறிவுறுத்தல்

நீலகிரி மாவட்டத்தில் புதிய பயிா் கடன் கேட்டு விண்ணப்பிக்கும் விவசாயிகளுக்கு விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூட்டுறவு சங்க இணைப் பதிவாளா் அறிவுறுத்தி உள்ளாா். நீலகிரி மாவட்டத்தில் செயல்பட... மேலும் பார்க்க

பழங்குடி மக்களுக்கு நலத்திட்ட உதவிகள்

கூடலூா்: கூடலூரை அடுத்துள்ள புறமனவயல் பழங்குடி கிராம மக்களுக்கு இந்திய செஞ்சிலுவைச் சங்கம் சாா்பில் வியாழக்கிழமை நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.கூடலூா் புறமனவயல் கிராமத்தில் கடந்த வாரம் பெய்த தொடா் மழ... மேலும் பார்க்க