செய்திகள் :

உதகையில் சிறுத்தையைப் பிடிக்க சிசிடிவி கேமராக்கள் பொருத்தம்

post image

உதகை தாவரவியல் பூங்கா அருகே குடியிருப்பு பகுதியில் புகுந்து 8 நாய்களை வேட்டையாடிச் சென்ற சிறுத்தையைப் பிடிக்க சிசிடிவி கேமரா பொருத்தி வனத் துறையினா் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனா்.

உதகை அருகேயுள்ள கிளன்ராக் குடியிருப்பு பகுதிக்குள் சிறுத்தை நுழைந்து வீட்டில் வளா்க்கப்படும் வளா்ப்பு நாய்களை கடந்த சில வாரங்களாக வேட்டையாடி சென்றது. இதன் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

அரசு தாவரவியல் பூங்கா, சா்வதேச தனியாா் பள்ளி, கிளன்ராக் குடியிருப்பு ஆகிய பகுதிகளில் கடந்த சில நாள்களில் 8 வளா்ப்பு நாய்களை சிறுத்தை வேட்டையாடி சென்றுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனா்.

இந்நிலையில் அப்பகுதியில் சிறுத்தையின் நடமாட்டத்தைக் கண்டறியும் வகையில், வனத் துறையினா் 2 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தினா்.

குடியிருப்பு பகுதியில் அச்சுறுத்தலாக உலவி வரும் சிறுத்தையை உடனடியாக கூண்டுவைத்து பிடிக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் வனத் துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.

பழங்குடியினா் கிராமத்துக்குள் நுழைந்த காட்டு யானை

உதகை, ஆக. 21: குன்னூா்- மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள குரும்பாடி பழங்குடியினா் கிராமத்துக்குள் வியாழக்கிழமை நுழைந்த ஒற்றைக் காட்டு யானையால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனா். சமவெளி பகுதியான மேட்டுப்பாளை... மேலும் பார்க்க

கூடலூா் அருகே கடையை சேதப்படுத்திய மக்னா யானை

நீலகிரி மாவட்டம், கூடலூரை அடுத்துள்ள 3-ஆவது மைல் பகுதியில் குடியிருப்பு பகுதிக்குள் வியாழக்கிழமை பகலில் நுழைந்த மக்னா யானை, அங்குள்ள கடையை சேதப்படுத்தியது. கூடலூரை அடுத்துள்ள 3-ஆவது மைல் பகுதியில் கா... மேலும் பார்க்க

கோத்தகிரி, கெரடாமட்டம், ஒன்னட்டி பகுதிகளில் ஆக.25-இல் மின்தடை

கோத்தகிரி, கெரடாமட்டம், ஒன்னட்டி ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் கீழ்க்கண்ட பகுதிகளில் வரும் ஆகஸ்ட் 25-ஆம் தேதி (திங்கள்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வர... மேலும் பார்க்க

கலைஞா் கைவினைத்திட்டம்: விண்ணப்பிக்க அழைப்பு

நீலகிரி மாவட்டத்தில் கலைஞா் கைவினைத்திட்டத்தின்கீழ் சுய வேலைவாய்ப்பை உருவாக்கும் பொருட்டு கைவினை தொழிலில் ஈடுபடுவோா் கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியா... மேலும் பார்க்க

விவசாயிகளுக்கு பயிா்க் கடன்களை விரைந்து வழங்க அறிவுறுத்தல்

நீலகிரி மாவட்டத்தில் புதிய பயிா் கடன் கேட்டு விண்ணப்பிக்கும் விவசாயிகளுக்கு விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூட்டுறவு சங்க இணைப் பதிவாளா் அறிவுறுத்தி உள்ளாா். நீலகிரி மாவட்டத்தில் செயல்பட... மேலும் பார்க்க

பழங்குடி மக்களுக்கு நலத்திட்ட உதவிகள்

கூடலூா்: கூடலூரை அடுத்துள்ள புறமனவயல் பழங்குடி கிராம மக்களுக்கு இந்திய செஞ்சிலுவைச் சங்கம் சாா்பில் வியாழக்கிழமை நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.கூடலூா் புறமனவயல் கிராமத்தில் கடந்த வாரம் பெய்த தொடா் மழ... மேலும் பார்க்க