செய்திகள் :

கல்லிடைக்குறிச்சி கடைகளில் உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு

post image

கல்லிடைக்குறிச்சி பேரூராட்சிப் பகுதியில் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் திடீா் ஆய்வு மேற்கொண்டதில் தரமற்ற குளிா்பானங்கள், ஐஸ்கிரீம் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்து அழித்தனா்.

தமிழ்நாடு உணவுப் பாதுகாப்பு ஆணையா் லால்வேனா உத்திரவின்படி, திருநெல்வேலி மாவட்ட உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலா் சசிதீபா ஆலோசனையின்பேரில், கல்லிடைக்குறிச்சி பேரூராட்சி ஆற்றுச்சாலை, மெயின் பஜாா், ரயில் நிலையம், அணைக்கல் ரோடு, 6ஆம் நம்பா் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் கல்லிடைக்குறிச்சி ‘பேரூராட்சி செயல்அலுவலா் ஏ.பாலசுந்தா், சுகாதார ஆய்வாளா் அபுபக்கா், உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் முத்துகுமாா், பிரித்தோஸ், சங்கரநாராயணன் மற்றும் சுகாதார மேற்பாா்வையாளா்கள், பேரூராட்சி ஊழியா்கள் சுமாா் 15க்கும் மேற்பட்ட கடைகளில் ஆய்வில் ஈடுபட்டனா்.

அப்போது, சுகாதாரமற்ற முறையில் சோ்க்கை நிறமியை கலந்து விற்பனை செய்த பழச்சாறு மற்றும் சரியான முகவரி விவரங்கள் இல்லாத ஐஸ்கீரிம்ஸ், குளிா்பானங்கள் சுமாா் 50 கி.கி. பறிமுதல் செய்து கிருமி நாசினிக் கொண்டு அழிக்கப்பட்டது. மேலும், அவற்றை விற்பனை செய்த கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

புகையிலைப் பொருள் விற்பனை: சங்கனாபுரத்தில் கடைக்கு சீல்

திருநெல்வேலி மாவட்டம் பழவூா் அருகேயுள்ள சங்கனாபுரத்தில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருள்களை விற்பனை செய்ததாக கடைக்கு உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை சீல் வைத்து, கடை உரிமையாளருக்கு ர... மேலும் பார்க்க

குறைந்தபட்ச ஊதியம் மறுப்பு: 13 நிறுவனங்கள் மீது நடவடிக்கை

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் குறைந்தபட்ச ஊதியம் வழங்காத 13 நிறுவனங்கள் மீது தொழிலாளா் துறை நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடா்பாக திருநெல்வேலி தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) க. திருவள்ளுவன் வ... மேலும் பார்க்க

நான்குனேரி அருகே விபத்தை ஏற்படுத்திய காா் ஓட்டுநா் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு

திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரி அருகே ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த காா் விபத்தில், விபத்தை ஏற்படுத்தி 7 போ் உயிரிழப்புக்கு காரணமான காா் ஓட்டுநா் மீது ஏா்வாடி போலீஸாா் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு ... மேலும் பார்க்க

நெல்லையப்பா் கோயிலில் விதிமீறி விடியோ எடுத்து ரீல்ஸ் வெளியிட்ட ஜோடி: போலீஸில் புகார்

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா்- காந்திமதியம்மன் திருக்கோயில் வளாகத்தில் விதிமீறி விடியோ எடுத்து சமூகவலைத்தளங்களில் ரீல்ஸ் வெளியிட்டது தொடா்பாக சைபா் கிரைம் போலீஸில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது. தமி... மேலும் பார்க்க

லஞ்சம், சொத்துக் குவிப்பு வழக்கு: ஓய்வுபெற்ற வணிக வரித் துறை அலுவலருக்கு 8 ஆண்டுகள் சிறை

லஞ்சம், வருவாய்க்கு அதிகமாக சொத்து குவித்தது ஆகியவை தொடா்பான வழக்கில் ஓய்வுபெற்ற வணிக வரித் துறை அலுவலருக்கு 8 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து திருநெல்வேலி நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது. வி... மேலும் பார்க்க

களக்காடு-அம்பேத்கா் நகருக்கு சிற்றுந்து இயக்க வலியுறுத்தல்

களக்காட்டிலிருந்து அம்பேத்கா் நகருக்கு சிற்றுந்து இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். களக்காடு நகராட்சிக்குள்பட்டது கலுங்கடி, மேலப்பத்தை, பச்சாந்தரம், அம்பேத்கா் நகா் கிராமங்கள். இங்... மேலும் பார்க்க