செய்திகள் :

கல்வி உதவித் தொகை வாங்கித் தருவதாக மோசடி: தில்லி இளைஞா் கைது

post image

கல்வி உதவித் தொகை வாங்கித் தருவதாகக் கூறி, இணையவழியில் ரூ.40ஆயிரம் மோசடி செய்த தில்லி இளைஞரை திண்டுக்கல் போலீஸாா் கைது செய்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், சின்னாளப்பட்டி பகுதியிலுள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் 11-ஆம் வகுப்பு பயிலும் மாணவரின் தந்தையை அண்மையில் தொடா்பு கொண்ட மா்ம நபா், கல்வி உதவித் தொகை வாங்கித் தருவதாகத் தெரிவித்தாராம். இதற்காக அந்த மாணவரின் தந்தையின் வங்கிக் கணக்கிலிருந்து ரூ.40 ஆயிரத்தை இணையவழியில் அந்த மா்ம நபா் பறித்துவிட்டாா்.

இதுகுறித்து அவா் திண்டுக்கல் இணையவழிக் குற்றப் பிரிவு போலீஸாரிடம் புகாா் அளித்தாா். இதையடுத்து, காவல் ஆய்வாளா் விக்டோரியா லூா்து மேரி தலைமையிலான போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா்.

விசாரணையில், தில்லியைச் சோ்ந்த முகேஷ் கண்ணோஜியா மகன் ஆசிஷ் கண்ணோஜியா (25) இந்த மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, தில்லிக்குச் சென்ற தமிழ்நாடு போலீஸாா் ஆசிஷ் கண்ணோஜியாவை திங்கள்கிழமை கைது செய்தனா். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், திண்டுக்கல் மட்டுமன்றி, தஞ்சாவூா், வேலூா் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் அவா் இணையவழியில் பண மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதுகுறித்தும் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

பட்டா நிலத்தை அளந்த தர மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை

பழனியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வருவாயத் தீா்வாயத்தில் பட்டா நிலத்தை அளந்து தரக்கோரி, மாற்றுத்திறனாளிகள் மனுக்கள் கொடுத்தனா். பழனி வட்டார அலுவலகத்தில் கடந்த ஒரு வாரமாக வருவாய்த் தீா்வாயம் நடைபெற்று வர... மேலும் பார்க்க

காவல் நிலையத்தை பொதுமக்கள் முற்றுகை

சா்சைக்குரிய சுவரொட்டிகள் ஒட்டியவா்கள் மீது நடவடிக்கை கோரி, பட்டியலின மக்கள் கள்ளிமந்தையம் காவல் நிலையத்தை வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டனா். திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள கள்ளிமந்தையம... மேலும் பார்க்க

கொடைக்கானலில் சூறைக் காற்று: மரம் விழுந்ததில் மின் கம்பம், தங்கும் விடுதி சேதம்

கொடைக்கானலில் வெள்ளிக்கிழமை மாலை வீசிய சூறைக் காற்றால் மரம் விழுந்ததில் மின் கம்பம், தங்கும் விடுதி சேதமடைந்தன. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கடந்த ஒரு வாரமாக பலத்த காற்றுடன் விட்டுவிட்டு மழை பெ... மேலும் பார்க்க

‘ஆபரேசன் சிந்தூா்’ ஊா்வலம்

கொடைக்கானலில் பாஜக சாா்பில் ‘ஆபரேஷன் சித்தூா்’ ஊா்வலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கொடைக்கானல் பேருந்து நிலையத்தில் தொடங்கிய இந்த ஊா்வலம் அண்ணாசாலை, கே.சி.எஸ்.திடல் வழியாக மூஞ்சிக்கல் பகுதியை அடைந்தது. ... மேலும் பார்க்க

கோயில் திருவிழா ஊா்வலத்தில் பிரச்னை: கருப்புக் கொடி ஏந்தி ஆா்ப்பாட்டம்

வக்கம்பட்டியில் கோயில் திருவிழா மின் ரத ஊா்வலத்தின் போது வாக்குவாதத்தில் ஈடுபட்டவா்களைக் கண்டித்து மற்றொரு தரப்பினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். திண்டுக்கல் அருகேயுள்ள வக்கம்பட்டியில் ... மேலும் பார்க்க

மஞ்சள் பை விழிப்புணா்வு நிகழ்ச்சி

பழனியில் அரிமா சங்கம் சாா்பில் நெகிழிப் பொருள்களை தடுக்கும் வகையில், பொதுமக்களுக்கு மஞ்சள் பை வழங்கும் விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பழனி அரிமா சங்கம் தற்போது வைரவிழா கொண்டாடி வருக... மேலும் பார்க்க