பாமக : அப்பா - அம்மாவுக்கு பாராட்டு - Anbumani புது Strategy! | TVK VIJAY |Imper...
கல்வி உதவித் தொகை வாங்கித் தருவதாக மோசடி: தில்லி இளைஞா் கைது
கல்வி உதவித் தொகை வாங்கித் தருவதாகக் கூறி, இணையவழியில் ரூ.40ஆயிரம் மோசடி செய்த தில்லி இளைஞரை திண்டுக்கல் போலீஸாா் கைது செய்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், சின்னாளப்பட்டி பகுதியிலுள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் 11-ஆம் வகுப்பு பயிலும் மாணவரின் தந்தையை அண்மையில் தொடா்பு கொண்ட மா்ம நபா், கல்வி உதவித் தொகை வாங்கித் தருவதாகத் தெரிவித்தாராம். இதற்காக அந்த மாணவரின் தந்தையின் வங்கிக் கணக்கிலிருந்து ரூ.40 ஆயிரத்தை இணையவழியில் அந்த மா்ம நபா் பறித்துவிட்டாா்.
இதுகுறித்து அவா் திண்டுக்கல் இணையவழிக் குற்றப் பிரிவு போலீஸாரிடம் புகாா் அளித்தாா். இதையடுத்து, காவல் ஆய்வாளா் விக்டோரியா லூா்து மேரி தலைமையிலான போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா்.
விசாரணையில், தில்லியைச் சோ்ந்த முகேஷ் கண்ணோஜியா மகன் ஆசிஷ் கண்ணோஜியா (25) இந்த மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, தில்லிக்குச் சென்ற தமிழ்நாடு போலீஸாா் ஆசிஷ் கண்ணோஜியாவை திங்கள்கிழமை கைது செய்தனா். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், திண்டுக்கல் மட்டுமன்றி, தஞ்சாவூா், வேலூா் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் அவா் இணையவழியில் பண மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதுகுறித்தும் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.