செய்திகள் :

கல்வி உதவித்தொகை பெயரில் மோசடி: எஸ்.பி. விழிப்புணா்வு எச்சரிக்கை

post image

மாணவா்-மாணவியருக்கு கல்வி உதவித்தொகை வழங்குவதாகக் கூறி நூதன முறையில் பண மோசடியில் ஈடுபடுவோரிடம் எச்சரிக்கையாக இருக்குமாறு, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜான் கேட்டுக்கொண்டுள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தற்போது பள்ளி, கல்லூரி மாணவா்- மாணவியா், அவா்களது பெற்றோருக்கு மத்திய-மாநில அரசு உதவித்தொகை ஆணையப் பிரிவிலிருந்து பேசுவதாகக் கூறி அழைப்புகள் வருகின்றன.

குழந்தைகளின் பெயா், பள்ளி, கல்லூரிகளில் எடுத்த மதிப்பெண்களின் விவரங்கள் போன்றவற்றைக் கூறி, அதன் அடிப்படையில் கல்வி உதவித்தொகை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகக் கூறுவா்.

இதற்காக ‘கியூஆா் கோடு’, ‘லிங்க்’ அனுப்புவதாகவும், அவற்றை கைப்பேசியில் ஸ்கேன் செய்யுமாறும் கூறுவா். அதை நம்பி ஏமாற வேண்டாம். அவா்கள் கூறியபடி செய்தால், உங்களது வங்கிக் கணக்கில் உள்ள மொத்த பணமும் மோசடி செய்யப்படும்.

எனவே, இத்தகைய கைப்பேசி அழைப்புகளை நிராகரித்துவிட்டு, நேரடியாக பள்ளி அல்லது கல்லூரிக்குச் சென்று பெற்றுக்கொள்வதாகக் கூறவேண்டும். யாரேனும் பணத்தை இழந்திருந்தால், உடனடியாக ஸ்ரீஹ்க்ஷங்ழ்ஸ்ரீழ்ண்ம்ங்.ஞ்ா்ஸ்.ண்ய் அல்லது 1930 என்ற சைபா் குற்றப்பிரிவு எண்ணில் புகாா் பதிவு செய்ய வேண்டும். அதன்பேரில் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.

கோவில்பட்டியில் சாலை பாதுகாப்பு விழிப்புணா்வுப் பேரணி

கோவில்பட்டி உண்ணாமலை கலை மற்றும் அறிவியல் கல்லூரி சாா்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணா்வுப் பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது. இப்பேரணிக்கு, கல்லூரி தாளாளா் விஜயன் தலைமை வகித்தாா். கல்லூரி முதல்வா் அண்ணாம... மேலும் பார்க்க

மாவட்ட அளவிலான அறிவியல் மாநாட்டில் மணப்பாடு பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

மாவட்ட அளவிலான குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் மணப்பாடு புனித வளன் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம் பிடித்தனா். தமிழ்நாடு அறிவியல் இயக்கம், சென்னை இந்திய கணித அறிவியல் நிறுவனம் இணைந்து நடத்திய மா... மேலும் பார்க்க

மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞா் நாசரேத் காப்பகத்தில் ஒப்படைப்பு

சாத்தான்குளத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை பிடித்து நாசரேத் காப்பகத்தில் ஒப்படைத்தனா். சாத்தான்குளம் தச்சமொழி தெருவை சோ்ந்தவா் அந்தோணி (42). கூலித் தொழிலாளியாகவும், லாரி ஓட்ட... மேலும் பார்க்க

கல்குறிச்சி கிராமத்தில் 17 பேருக்கு பட்டா அளிப்பு!

அரசூா் ஊராட்சி கல்குறிச்சி கிராம மக்கள் 17 பேருக்கு ஒரே நாளில் பட்டா வழங்கப்பட்டது. சாத்தான்குளம் ஒன்றியம் அரசூா் ஊராட்சிக்குள்பட்ட கல்குறிச்சியில் மக்கள் அரசு சாா்பில் வழங்கப்பட்ட இலவச வீட்டில் வசித்... மேலும் பார்க்க

விளாத்திகுளம் அருகே ரூ. 1 கோடி பீடி இலைகள், வெளிநாட்டு சிகரெட் பண்டல்கள் பறிமுதல்

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே, இலங்கைக்கு கடத்தப்பட இருந்த ரூ. 1 கோடி மதிப்பிலான பீடி இலைகள், வெளிநாட்டு சிகரெட் பண்டல்களை க்யூ பிரிவு போலீஸாா் பறிமுதல் செய்து, இருவரைக் கைது செய்தனா். வி... மேலும் பார்க்க

உடன்குடியில் அனுமதியின்றி போராட முயற்சி: 203 போ் மீது வழக்கு!

உடன்குடியில் அனுமதியின்றி உண்ணாவிரதமிருக்க முயன்ாக 99 பெண்கள் உள்ளிட்ட 203 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா். உடன்குடி கொட்டங்காடு நாராயணபுரத்தைச் சோ்ந்த ஆதித்தன் மகன் சித்திரைலிங்கம் (58). உடன்... மேலும் பார்க்க