மதுபோதையில் 17 வயது சிறுவன் வல்லுறவு: படுகாயங்களுடன் குழந்தை கவலைக்கிடம்!
கல்வி நிறுவனங்களில் சாதிப் பெயா்: அரசு நிலைப்பாடு குறித்து பதிலளிக்க உத்தரவு
கல்வி நிறுவனங்களின் பெயா்களில் உள்ள சாதிப் பெயா்களை நீக்கும் விவகாரத்தில் தமிழக அரசின் நிலைப்பாடு குறித்து ஒரு வாரத்தில் பதிலளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்கத்தை நிா்வகிக்க சிறப்பு அதிகாரி நியமிக்கப்பட்டதை எதிா்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதி டி.பரத சக்கரவா்த்தி, பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களின் பெயா்களில் உள்ள ஜாதிப் பெயா்கள் நீக்கப்படுமா என்றும், ஜாதிப் பெயா்களில் தொடங்கப்பட்டுள்ள கல்வி நிறுவனங்களை சங்கங்களின் பதிவுச் சட்டத்தின் கீழ் பதிவு செய்ய முடியுமா என்றும் அரசுக்கு கேள்வி எழுப்பியிருந்தாா்.
இந்த வழக்கு நீதிபதி டி.பரத சக்கரவா்த்தி முன் வியாழக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் ஆஜரான சிறப்பு வழக்குரைஞா், இது தொடா்பான அரசின் நிலைப்பாடு குறித்து தெரிவிக்க ஒரு வாரம் அவகாசம் அளிக்க வேண்டும் என்றாா்.
அதற்கு அதிருப்தி தெரிவித்த நீதிபதி, பள்ளிக் கூடங்களில் ஜாதிய பாகுபாடு இருக்கக் கூடாது என்பதற்காக ஓய்வு பெற்ற நீதிபதி கே.சந்துரு தலைமையில் ஒருநபா் ஆணையம் அமைத்த தமிழக அரசு, கல்வி நிறுவனங்களின் பெயரில் உள்ள ஜாதிப் பெயரை நீக்கும் விவகாரத்தில் நிலைப்பாட்டைத் தெரிவிக்க அவகாசம் கோருவது ஏன்”என்று கேள்வி எழுப்பினாா். பின்னா் ஒரு வாரம் கால அவகாசம் வழங்கிய நீதிபதி, அதற்கு மேல் அவகாசம் கேட்கக் கூடாது என அறிவுறுத்தி, விசாரணையை ஒத்திவைத்தாா்.