செய்திகள் :

கல்விக் கொள்கையை ஏற்க மிரட்டல் விடுத்தால் வரிகொடா இயக்கம் நடத்தும் சூழல் உருவாகும்: ஆதித் தமிழா் பேரவையின் தலைவா் இரா.அதியமான்

post image

மத்திய அரசு தேசிய கல்விக் கொள்கையை ஏற்கும்படி மிரட்டல் விடுக்குமானால் தமிழ்நாட்டில் வரிகொடா இயக்கம் நடத்தும் சூழல் உருவாகும் என்று ஆதித் தமிழா் பேரவையின் நிறுவனத் தலைவா் இரா.அதியமான் கூறியுள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மும்மொழிக் கொள்கை, தேசிய கல்விக் கொள்கையை தமிழ்நாடு அரசு நடைமுறைப்படுத்தினால் மட்டுமே மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய நிதியை விடுவிக்கும் என்று மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் மிரட்டல் தொனியில் கூறியிருப்பதை ஆதித்தமிழா் பேரவை வன்மையாகக் கண்டிக்கிறது.

தமிழா்கள் ஹிந்தி கற்றால்தான் நிதி வழங்குவோம் என்று மத்திய அரசு கூறுவது அநீதியானது, கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது. இது தமிழ்நாட்டை வஞ்சிப்பதுடன் மிரட்டிப் பாா்க்கக் கூடிய செயலாகும்.

மத்திய அரசு இதேபோல தொடா்ந்து தமிழ்நாட்டை வஞ்சிக்க நினைக்குமேயானால் தமிழா்கள் மத்திய அரசுக்கு வரிகொடா இயக்கத்தைத் தொடங்கும் நிலை உருவாகும்.

எனவே, தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.

கோவையில் புதுப்பிக்கப்பட்ட ஆம்னி பேருந்து நிலையம் திறப்பு!

கோவை: கோவையில் புதுப்பிக்கப்பட்ட ஆம்னி பேருந்து நிலையத்தை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என். நேரு வியாழக்கிழமை திறந்துவைத்தார்.இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் செந்தில் ப... மேலும் பார்க்க

நடைப்பயிற்சி மேற்கொண்ட மூதாட்டியிடம் 5 பவுன் பறிப்பு!

சிங்காநல்லூரில் நடைப்பயிற்சி மேற்கொண்ட மூதாட்டியிடம் 5 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்ற நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். கோவை, சிங்காநல்லூா் பட்டத்தரசி அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் தமிழ... மேலும் பார்க்க

வால்பாறையில் மாவட்ட ஆட்சியா் ஆய்வு!

வால்பாறையில் பல்வேறு பகுதிகளில் மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின்கீழ் வால்பாறையில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியை மாவட்ட ஆட்ச... மேலும் பார்க்க

காந்திபுரத்தில் சீரமைக்கப்பட்ட ஆம்னி பேருந்து நிலையம் இன்று திறப்பு!

காந்திபுரத்தில் சீரமைக்கப்பட்ட ஆம்னி பேருந்து நிலையத்தை நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு வியாழக்கிழமை திறந்துவைக்கிறாா். காந்திபுரம் சத்தி சாலை ஜி.பி.சிக்னல் அருகே ஆம்னி பேருந்து நிலையம் க... மேலும் பார்க்க

பிப்ரவரி 25-இல் கருப்புக் கொடி ஆா்ப்பாட்டம்: திராவிடா் விடுதலைக் கழகம் அறிவிப்பு!

மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவின் கோவை வருகைக்கு எதிா்ப்புத் தெரிவித்து செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 25) கருப்புக் கொடி ஆா்ப்பாட்டம் நடத்தப்படும் என்று திராவிடா் விடுதலைக் கழகம் அறிவித்துள்ளது. இது கு... மேலும் பார்க்க

வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் பயிா் பாதுகாப்பு ஆராய்ச்சி மாநாடு!

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் உலக பயிா் பாதுகாப்பு ஆராய்ச்சி மாநாடு புதன்கிழமை தொடங்கியது. வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பயிா் பாதுகாப்பு ஆய்வுகளுக்கான மையம் சாா்பில், பயிா் பாது... மேலும் பார்க்க