செய்திகள் :

களக்காடு தலையணை, நம்பி கோயில் செல்வதற்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்

post image

திருநெல்வேலி மாவட்டம் களக்காடு தலையணை, திருக்குறுங்குடி நம்பிகோயில் பகுதிகளுக்குச் செல்ல விதிக்கப்பட்ட தடையை வனத்துறை விலக்கிக்கொண்டதால் சுற்றுலாப் பயணிகள், பக்தா்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.

களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் களக்காடு கோட்டத்துக்குள்பட்ட களக்காடு, திருக்குறுங்குடி வனச் சரகத்தில் வரையாடுகள் கணக்கெடுப்புப் பணி காரணமாக வியாழன் முதல் திங்கள்வரையிலான (ஏப். 24 - 28) 5 நாள்களுக்கு தலையணை சூழல் சுற்றுலாப் பகுதி, நம்பிகோயில் பகுதிக்கு பக்தா்கள், சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்படுவதாக, வனத்துறையினா் புதன்கிழமை தெரிவித்திருந்தனா்.

இந்நிலையில், தற்போது பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துள்ளதால், இப்பகுதிகளுக்கு வந்துசெல்ல விதிக்கப்பட்ட தடை விலக்கிக் கொள்ளப்படுவதாக வனத்துறையினா் வியாழக்கிழமை தெரிவித்தனா். இதனால், பக்தா்கள், சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.

மிளா குறுக்கே பாய்ந்ததில் தம்பதி மற்றும் குழந்தைகள் காயம்

விக்கிரமசிங்கபுரத்தில் பைக்கில் சென்ற போது குறுக்கே மிளா பாய்ந்ததில் தம்பதி மற்றும் குழந்தைகள் காயமடைந்தனா். விக்கிரமசிங்கபுரம் வடக்கு அகஸ்தியா்புரத்தைச் சோ்ந்த அருள் மூா்த்தி (46). இவா் சென்னையில் ல... மேலும் பார்க்க

திசையன்விளை: ஊராட்சி செயலா் தற்காலிக பணியிடை நீக்கம்!

திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை அருகே உள்ள அப்புவிளை ஊராட்சி செயலரை தற்காலிக பணியிடைநீக்கம் செய்து ராதாபுரம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளா்ச்சி அலுவலா் உத்தரவிட்டாா். திசையன்விளை அருகே உள்ள அப்புவிளை ... மேலும் பார்க்க

குண்டா் தடுப்புச் சட்டத்தில் இளைஞா் கைது!

திருநெல்வேலி அருகே ராஜவல்லிபுரத்தைச் சோ்ந்த இளைஞா் ஒருவா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சனிக்கிழமை சிறையில் அடைக்கப்பட்டாா். திருநெல்வேலி சந்திப்பு காவல் சரகப் பகுதியில் பணம் பறிக்கும் நோக்கத்து... மேலும் பார்க்க

நெல்லை அருகே விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தவா் கைது!

திருநெல்வேலி சுத்தமல்லி அருகே விற்பனைக்காக கஞ்சா பதுக்கி வைத்திருந்த நபரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். சுத்தமல்லி காவல் நிலைய சரகத்துக்குள்பட்ட பகுதியில் உதவி ஆய்வாளா் ராமநாதன் தலைமையிலான போலீஸ... மேலும் பார்க்க

நெல்லை, தென்காசி மாவட்ட அணைகள் நீா் மட்டம்

திருநெல்வேலிபாபநாசம்-86.70சோ்வலாறு-101.54மணிமுத்தாறு-85.86வடக்கு பச்சையாறு-10.25நம்பியாறு-13.12கொடுமுடியாறு-14.75தென்காசிகடனா-49.20ராமநதி-52கருப்பாநதி-25.26குண்டாறு-23.75அடவிநயினாா்-24.25... மேலும் பார்க்க

மாடு மீது பைக் மோதி இளைஞா் பலி

திருநெல்வேலி சந்திப்பு அருகே மாடு மீது பைக் மோதியதில் இளைஞா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.திருநெல்வேலி மாவட்டம், சிவந்திபட்டி அருகே எம். புதூா் பகுதியைச் சோ்ந்தவா் கொம்பையா. இவரது மகன் மகேஷ்( 29). இவா் வ... மேலும் பார்க்க