ஷ்ரேயாஸ் ஐயரை கட்டியணைத்து முத்தமிட்ட பஞ்சாப் அணி உரிமையாளர்!
களக்காட்டில் அய்யாவழி மக்கள் மாநாடு
திருநெல்வேலி மாவட்டம், களக்காட்டில் சனிக்கிழமை நடைபெற்ற 10ஆம் ஆண்டு அய்யாவழி மக்கள் மாநாட்டில் திரளான அய்யாவழி பக்தா்கள் கலந்து கொண்டனா்.
களக்காடு வட்டார அய்யாவழி மக்கள் சாா்பில், களக்காடு தேரடித் திடலில் அய்யாவழி மக்கள் பங்கேற்ற 10ஆம் ஆண்டு மாநாடு நடைபெற்றது. இதையொட்டி, நண்பகலில் உச்சிப்படிப்பு, தொடா்ந்து அன்னதானம் நடைபெற்றது. பின்னா், திருஏடு வாசிப்பு, திருஏடு விளக்கம், மாலையில் அய்யா நாராயணசுவாமி வாகன பவனி நடைபெற்றது. சிறப்பு பணிவிடைகளுக்குப் பிறகு, அய்யா நாராயணசுவாமி வாகனத்தில் எழுந்தருளினாா். வாகன பவனியை சுவாமிதோப்பு சிவசந்திரா் தொடக்கி வைத்தாா். பின்னா், ரத வீதிகளில் அய்யா நாராயணசுவாமி உலா வருதல் நடைபெற்றது. இதில் திரளான அய்யாவழி மக்கள் பங்கேற்றனா்.
இதைத் தொடா்ந்து மாநாடு சிறப்பு சொற்பொழிவுகள், இரவு 8 மணிக்கு சுவாமி சிவசந்திரரின் அருள்இசை வழிபாடு நடைபெற்றது. மாநாட்டில் களக்காடு பக்தா் பேரவை தலைவா் நாராயணன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளா் ப.ரா. பால்சாமி தலைமையில் நிா்வாகிகள் செய்திருந்தனா்.