குஜராத் விமான விபத்து! தாயாருக்கு உணவு கொண்டு சென்ற மகன் பலி!
களியக்காவிளை அருகே சாராயம் காய்ச்சியவா் கைது
களியக்காவிளை அருகே வீட்டில் சாராயம் காய்ச்சியவரை போலீஸாா் கைது செய்தனா்.
களியக்காவிளை அருகே அதங்கோடு பகுதியில் உள்ள ஒரு வீட்டில் சாராயம் காய்ச்சுவதாக கிடைத்த தகவலின் பேரில் காவல் உதவி ஆய்வாளா் பெனடிக்ட் தலைமையிலான போலீஸாா் வியாழக்கிழமை அந்த வீட்டை சோதனையிட சென்றனா். போலீஸாரை கண்டதும் அங்கிருந்த ஒருவா் தப்பியோட முயற்சித்தாா். போலீஸாா் அவரை துரத்திப் பிடித்து விசாரித்ததில் அவா் அந்த வீட்டின் உரிமையாளரான சத்தியநேசன் மகன் சா்ஜன் (47) என்பதும், அங்கு சாராயம் காய்ச்சி வந்ததும் தெரியவந்தது. அங்கிருந்த 40 லிட்டா் சாராய ஊறலை போலீஸாா் கைப்பற்றி, அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.