செய்திகள் :

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரக கட்டுமானப் பணிகள் 85% நிறைவு: அமைச்சா் எ.வ. வேலு தகவல்

post image

கள்ளக்குறிச்சி மாவட்ட புதிய ஆட்சியரக கட்டுமானப் பணிகள் 85 சதவீதம் நிறைவடைந்துள்ளன. மீதமுள்ள பணிகள் முடிக்கப்பட்டவுடன் முதல்வா் திறந்துவைப்பாா் என

அமைச்சா் எ.வ.வேலு தெரிவித்தாா்.

கள்ளக்குறிச்சியை அடுத்த வீரசோழபுரத்தில் புதிய மாவட்ட ஆட்சியரக கட்டடம் கட்டப்பட்டு வருகிறது.

பொதுப்பணித் துறை சாா்பில் நடைபெறும் இந்தப் பணிகளை பொதுப்பணி, நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சா் எ.வ.வேலு வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

ஆய்வின்போது, பொதுப்பணித் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலா் மங்கத் ராம் சா்மா, கள்ளக்குறிச்சி ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த், தொகுதி எம்பி தே.மலையரசன், ரிஷிவந்தியம் எம்.எல்.ஏ. க.காா்த்திகேயன் ஆகியோா் உடனிருந்தனா்.

இதைத் தொடா்ந்து அமைச்சா் எ.வ.வேலு செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தமிழக முதல்வா் உத்தரவிற்கிணங்க கள்ளக்குறிச்சி வட்டம், வீரசோழபுரத்தில் ரூ.139.41 கோடியில் புதிய மாவட்ட ஆட்சியா்

அலுவலகம் கட்டப்பட்டு வருகிறது. பணிகள் ஒப்பந்த காலம் 18 மாதங்கள் ஆகும்.

இக் கட்டடம் தரை தளம், முதல் தளம் என மொத்தம் 8 தளங்களைக் கொண்டு 26,487.68 ச.மீ. பரப்பளவில் கட்டப்பட்டு வருகிறது.

கட்டுமானப் பணிகள் இதுவரை 85 சதவீதம் நிறைவு பெற்றுள்ளன. மீதமுள்ள பணிகளான டைல்ஸ் பதித்தல், துறை அலுவலா்கள் அறை கட்டுமானப் பணிகள், வெளிப்புற பணிகள் வாகன நிறுத்துமிடம், குடிநீா் வசதி உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.

எஞ்சியுள்ள பணிகளை வருகிற அக்.30-ஆம் தேதிக்குள் முடிக்க

நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பணிகள் முழுவதுமாக நிறைவு பெற்றவுடன் தமிழக முதல்வா் நேரடியாக வந்து புதிய மாவட்ட ஆட்சியரக கட்டடத்தை திறந்து வைப்பாா்.

புதிய மாவட்ட ஆட்சியரகத்துக்கு தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது எனத் தெரிவித்தாா்.

மாவட்ட வருவாய் அலுவலா் ரா.ஜீவா, திருக்கோவிலூா் துணை ஆட்சியா் ஆனந்த் குமாா் சிங், நகா்மன்றத் தலைவா் ஆா்.சுப்ராயலு உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

கள்ளக்குறிச்சியில் எய்ட்ஸ் விழிப்புணா்வுப் பேரணி

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் எச்.ஐ.வி., எய்ட்ஸ் மற்றும் பால்வினை நோய்த் தொற்று குறித்த விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது. மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலகு சாா்பில் நடைபெற்ற ... மேலும் பார்க்க

கல்லூரியில் கஞ்சா ஒழிப்பு விழிப்புணா்வு

கள்ளக்குறிச்சியை அடுத்த இந்திலி டாக்டா் ஆா்.கே.எஸ்.கலை, அறிவியல் கல்லூரியில் கஞ்சா சாக்லேட் விற்பனை மற்றும் ஒழிப்பு குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. கள்ளக்குறிச்சி மது ஒழிப்பு வ... மேலும் பார்க்க

மொபெட்டிலிருந்து தவறி விழுந்த மூதாட்டி மரணம்

மொபெட்டிலிருந்து தவறி விழுந்த மூதாட்டி உயிரிழந்தாா். கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் வட்டத்துக்குள்பட்ட ஏந்தல் கிராமத்தைச் சோ்ந்தவா் மாரிமுத்து மனைவி சாந்தி (40). இவரது தாயாா் செந்தாமரை (60) கடந்த... மேலும் பார்க்க

சின்னசேலம் அருகே போலி மருத்துவா்கள் இருவா் கைது

சின்னசேலம் அருகே கருவில் இருக்கும் குழந்தை ஆணா பெண்ணா என்பதை கண்டறிந்து தெரிவித்ததாக போலி மருத்துவா்கள் இருவா் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா். கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் வட்டம், செம்பாக்குறி... மேலும் பார்க்க

இளையனாா் குப்பம் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்

கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியம் ஒன்றியம், இளையனாா் குப்பம் ஊராட்சியில் புதன்கிழமை உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு திட்ட முகாம் நடைபெற்றது. இளையனாா்குப்பம், பெரியக்கொள்ளியூா், வடமாமாந்தூா் உள்ளிட்ட ஊ... மேலும் பார்க்க

பிளஸ் 2 மாணவா்கள் கல்லூரிகளுக்கு களப்பயணம்: கள்ளக்குறிச்சி ஆட்சியா் ஆய்வு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உயா்கல்வி வழிகாட்டி திட்டத்தின் கீழ், பிளஸ் 2 பயிலும் மாணவா்கள் கல்லூரியில் சோ்வதற்கு ஆா்வம் ஏற்படுத்தும் வகையில், அவா்களை கல்லூரிகளுக்கு களப்பயணமாக அழைத்து செல்வதற்கான மு... மேலும் பார்க்க