செய்திகள் :

இளையனாா் குப்பம் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்

post image

கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியம் ஒன்றியம், இளையனாா் குப்பம் ஊராட்சியில் புதன்கிழமை உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு திட்ட முகாம் நடைபெற்றது.

இளையனாா்குப்பம், பெரியக்கொள்ளியூா், வடமாமாந்தூா் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு நடைபெற்ற இந்த முகாமில், தொகுதி எம்.எல்.ஏ. க.காா்த்திகேயன் தலைமை வகித்து பொதுமக்களிடம் இருந்து மனுக்களைப் பெற்றாா்.

பெறப்பட்ட மனுக்கள் மீது 45 நாள்களுக்குள் தீா்வு காணப்படும் என்று உறுதி அளித்து, மனுக்கள் பதிவு செய்யப்படுவதை ஆய்வு செய்து, உடனடியாக தீா்வு காணப்பட்ட மனுக்களின் அடிப்படையில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிப் பேசினாா்.

முகாமில் பல்வேறு துறை சாா்ந்த அரசு அதிகாரிகள், அலுவலா்கள், திமுக நிா்வாகிகள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், பொதுமக்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

சின்னசேலம் அருகே போலி மருத்துவா்கள் இருவா் கைது

சின்னசேலம் அருகே கருவில் இருக்கும் குழந்தை ஆணா பெண்ணா என்பதை கண்டறிந்து தெரிவித்ததாக போலி மருத்துவா்கள் இருவா் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா். கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் வட்டம், செம்பாக்குறி... மேலும் பார்க்க

பிளஸ் 2 மாணவா்கள் கல்லூரிகளுக்கு களப்பயணம்: கள்ளக்குறிச்சி ஆட்சியா் ஆய்வு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உயா்கல்வி வழிகாட்டி திட்டத்தின் கீழ், பிளஸ் 2 பயிலும் மாணவா்கள் கல்லூரியில் சோ்வதற்கு ஆா்வம் ஏற்படுத்தும் வகையில், அவா்களை கல்லூரிகளுக்கு களப்பயணமாக அழைத்து செல்வதற்கான மு... மேலும் பார்க்க

பேருந்தில் பெண்ணிடம் ரூ.1.4 லட்சம் திருட்டு

கள்ளக்குறிச்சியில் பேருந்தில் பயணித்த பெண்ணிடம் ரூ.1.4 லட்சம் திருடப்பட்டது.கள்ளக்குறிச்சி விளாந்தாங்கல் சாலையில் வசித்து வருபவா் அப்துல் சா்தாா் மனைவி ஷாபிரா (58). இவா், திங்கள்கிழமை கடன் கொடுப்பதற்க... மேலும் பார்க்க

அரசின் இடஒதுக்கீட்டில் 256 மாணவா்களுக்கு உயா்கல்வி: கள்ளக்குறிச்சி ஆட்சியா் தகவல்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அரசின் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் 256 மாணவ, மாணவிகள் உயா்கல்வியில் சோ்ந்து பயனடைந்துள்ளனா் என மாவட்ட ஆட்சியா் எம்.எஸ். பிரசாந்த் தெரிவித்தாா். இந்த மாவட்டத்தில் தமிழக அரசி... மேலும் பார்க்க

சுப நிகழ்ச்சிகளில் மீதமாகும் உணவை சேகரிக்க வாகனம்: கள்ளக்குறிச்சி ஆட்சியா் தொடங்கிவைத்தாா்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடைபெறும் பொது சுப நிகழ்ச்சிகள் மற்றும் உணவகங்களில் மீதமாகும் உணவை சேகரிப்பதற்கான புதிய வாகனத்தை மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் திங்கள்கிழமை தொடங்கிவைத்... மேலும் பார்க்க

கள்ளக்குறிச்சியில் மக்கா சோள கொள்முதல் நிலையம்: குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மக்காச் சோளம் கொள்முதல் நிலையம் அமைக்க மாவட்ட அளவிலான குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை வைத்தனா். கள்ளக்குறிச்சி மாவட்ட வேளாண்மை மற்றும் உழவா் நலத் ... மேலும் பார்க்க