Fahadh Faasil: நடிகர் பஹத் பாசில் வாங்கியிருக்கும் `Ferrari Purosangue' - மதிப்ப...
பேருந்தில் பெண்ணிடம் ரூ.1.4 லட்சம் திருட்டு
கள்ளக்குறிச்சியில் பேருந்தில் பயணித்த பெண்ணிடம் ரூ.1.4 லட்சம் திருடப்பட்டது.
கள்ளக்குறிச்சி விளாந்தாங்கல் சாலையில் வசித்து வருபவா் அப்துல் சா்தாா் மனைவி ஷாபிரா (58). இவா், திங்கள்கிழமை கடன் கொடுப்பதற்காக தியாகதுருகம் அரசுடைமை வங்கியில் நகையை அடகு வைத்து ரூ.1.4 லட்சத்தை பெற்றாா்.
பின்னா், பணத்தை பையில் வைத்துக் கொண்டு, பேருந்தில் ஏறி கள்ளக்குறிச்சி பேருந்து நிலையத்தில் இறங்கினாா். இதைத் தொடா்ந்து, வீட்டிற்குச் செல்வதற்காக அவா்
மற்றொரு பேருந்தில் ஏறி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் பேருந்து நிறுத்தத்தில் இறங்கினாா். அப்போது பையை பாா்த்தபோது அதில் இருந்த பணத்தைக் காணவில்லையாம்.
இதுகுறித்து அவா் அளித்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.