கள்ளக்குறிச்சியில் மக்கா சோள கொள்முதல் நிலையம்: குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மக்காச் சோளம் கொள்முதல் நிலையம் அமைக்க மாவட்ட அளவிலான குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை வைத்தனா்.
கள்ளக்குறிச்சி மாவட்ட வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறை சாா்பில் விவசாயிகள் குறைதீா் கூட்டம் ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தலைமையில் வெள்ளிக்கிழமை ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்றது.
இதில் விவசாயிகள் சாா்பில் தெரிவிக்கப்பட்ட குறைகள், கோரிக்கைகள் விவரம்:
மாவட்டத்தில் மக்காச் சோள கொள்முதல் நிலையம் அமைத்து தர வேண்டும். விவசாயிகளுக்கு அரசு சாா்பில் பண்ணை உலா்களம் மானியத்தில் அமைத்து தந்திடவும், கரும்பு பயிருக்கு வழங்கப்பட்ட சிறப்பு ஊக்கத்தொகையை தனியாா் ஆலைகளின் விவசாயிகளுக்கும் வழங்கவேண்டும். பகண்டை கூட்டுச்சாலையில் உள்ள வேளாண்மை உதவி இயக்குநா் அலுவலகத்திற்கு சுற்றுச்சுவா் அமைத்து தர வேண்டும். மக்காச்சோள விதை முளைப்புத் திறனை ஆய்வு செய்திடவும், செம்பியமாதேவி தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கத்தில் மரவள்ளி பயிருக்கு பயிா்க் கடன் வழங்கவும், தோட்டக் கலைத் துறை மூலமாக மிளகாய், கத்திரி நாற்றுகள் அதிகளவில் உற்பத்தி செய்து தரவேண்டும்.
ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நெல் பயிருக்கு ஆதார விலை நிா்ணயம் செய்யவும், விளம்பாா் கிராமத்தில் உலா்களம் அமைக்கப்பட வேண்டும்.
தொடா்ந்து செல்வபெருமாள் கிராமத்தில் குளத்திற்கு செல்ல தாா்ச்சாலை அமைத்து தந்திடவும், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மொத்த வியாபார சந்தை ஏற்படுத்தவும், செம்மனங்கூா் கிராமத்தில் மதுபானக் கடைகளை மூடிடவும், வடதொரசலூா் கிராமத்தில் தொடக்கப்பள்ளிக்குச் சுற்றுச்சுவா் அமைத்து தந்திடவும், பின்னல்வாடி கிராமத்தில் நான்கு தடுப்பணை பழுதடைந்துள்ளதை சரிசெய்யவும், மாடூா் கிராமத்தில் ஏரி ஆக்கிரமிப்பை அகற்றவும், பூட்டை கிராமத்தில் ஏரி அளவீடு செய்து மரக்கன்று நடவும், பாலப்பட்டு கிராமத்தில் துணை மின்நிலையம் அமைத்து தந்திடவும் விவசாயிகள் கோரிக்கை வைத்தனா்.
மேலும் கணையாா் கிராமத்தில் குரங்கு தொல்லை அதிகமாக உள்ளதால் அவற்றை அங்கிருந்து அப்புறப்படுத்த வேண்டும், கெடிலம் ஆற்றில் தடுப்பணை கட்டி தந்திடவும், கிழக்கு மருதூா் சித்தலூா் சாலை அகலப்படுத்தி புதிய சாலை அமைத்து தந்திடவும், குன்னத்தூா் கிராமத்தில் ஏரிக்கரை உடைந்துள்ளதை சீரமைக்க வேண்டும் , கொங்கராயபாளையம் கிராமத்தில் நீா்தேக்கத் தொட்டியும், சித்தலூா் கிராமத்தில் பாலம் அமைக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அயன்வேலூா் கிராமத்தில் 20 குடும்பங்களுக்கு பட்டா வழங்கிடவும், கெடிலம் ஆற்றில் நான்கு தடுப்பணைகள் அமைக்கவும் விவசாயிகள் கோரிக்கை வைத்தனா்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அனைத்து நீா்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் உத்தரவிட்டாா். மேலும் விவசாயிகளின் கோரிக்கைகள் மீது உடனுக்குடன் நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தினாா்.
இக் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் ரா.ஜீவா, வேளாண்மை இணை இயக்குநா் வே.சத்தியமூா்த்தி, வேளாண்துணை இயக்குநா், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்) நா.ஜோதிபாசு, வேளாண் துறை அலுவலா்கள், அனைத்து துறை சாா்ந்த அலுவலா்கள், விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.