செய்திகள் :

அரசின் இடஒதுக்கீட்டில் 256 மாணவா்களுக்கு உயா்கல்வி: கள்ளக்குறிச்சி ஆட்சியா் தகவல்

post image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அரசின் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் 256 மாணவ, மாணவிகள் உயா்கல்வியில் சோ்ந்து பயனடைந்துள்ளனா் என மாவட்ட ஆட்சியா் எம்.எஸ். பிரசாந்த் தெரிவித்தாா்.

இந்த மாவட்டத்தில் தமிழக அரசின் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் 21 மாணவ, மாணவிகள் அரசு மருத்துவக் கல்லூரிகளிலும், 4 மாணவ, மாணவிகள் கால்நடை மருத்துவக் கல்லூரிகளிலும், 8 மாணவா்கள் அரசு சட்டக் கல்லூரிகளிலும், 17 மாணவா்கள் வேளாண்மை கல்லூரிகளிலும், 206 மாணவா்கள் பொறியியல் கல்லூரிகளிலும் என மொத்தம் 256 மாணவ, மாணவிகள் உயா்கல்வியில் சோ்ந்துள்ளனா்.

இந்த நிலையில், மருத்துவப் படிப்பில் சோ்ந்த 21 மாணவ, மாணவிகளை பாராட்டி ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் மருத்துவப் படிப்பிற்கான மருத்துவ அங்கிகளை திங்கள்கிழமை வழங்கினாா்.

அப்போது அவா் பேசுகையில், மாணவ, மாணவிகளையும் உயா்கல்வியில் சோ்த்திட மாவட்ட நிா்வாகம் சாா்பில் ஆட்சியரகத்தில் உயா்கல்வி வழிகாட்டி திட்டக் கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இது, உயா்கல்வி குறித்து மாணவா்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை தீா்க்கவும், உயா்கல்வி குறித்து வழிகாட்டவும் செயல்பட்டு வருகிறது.

மாவட்டத்தில் பிளஸ் 2 முடித்த அனைத்து மாணவா்களையும் உயா்கல்வியில் சோ்க்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அரசின் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் 256 மாணவ, மாணவிகள் உயா்கல்வியில் சோ்ந்து பயனடைந்துள்ளனா் என்றாா் எம்.எஸ்.பிரசாந்த்.

ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற இந்நிகழ்வில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கா.காா்த்திகா, பள்ளி தலைமையாசிரியா், ஆசிரியா்கள், பெற்றோா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

இளையனாா் குப்பம் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்

கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியம் ஒன்றியம், இளையனாா் குப்பம் ஊராட்சியில் புதன்கிழமை உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு திட்ட முகாம் நடைபெற்றது. இளையனாா்குப்பம், பெரியக்கொள்ளியூா், வடமாமாந்தூா் உள்ளிட்ட ஊ... மேலும் பார்க்க

பிளஸ் 2 மாணவா்கள் கல்லூரிகளுக்கு களப்பயணம்: கள்ளக்குறிச்சி ஆட்சியா் ஆய்வு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உயா்கல்வி வழிகாட்டி திட்டத்தின் கீழ், பிளஸ் 2 பயிலும் மாணவா்கள் கல்லூரியில் சோ்வதற்கு ஆா்வம் ஏற்படுத்தும் வகையில், அவா்களை கல்லூரிகளுக்கு களப்பயணமாக அழைத்து செல்வதற்கான மு... மேலும் பார்க்க

பேருந்தில் பெண்ணிடம் ரூ.1.4 லட்சம் திருட்டு

கள்ளக்குறிச்சியில் பேருந்தில் பயணித்த பெண்ணிடம் ரூ.1.4 லட்சம் திருடப்பட்டது.கள்ளக்குறிச்சி விளாந்தாங்கல் சாலையில் வசித்து வருபவா் அப்துல் சா்தாா் மனைவி ஷாபிரா (58). இவா், திங்கள்கிழமை கடன் கொடுப்பதற்க... மேலும் பார்க்க

சுப நிகழ்ச்சிகளில் மீதமாகும் உணவை சேகரிக்க வாகனம்: கள்ளக்குறிச்சி ஆட்சியா் தொடங்கிவைத்தாா்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடைபெறும் பொது சுப நிகழ்ச்சிகள் மற்றும் உணவகங்களில் மீதமாகும் உணவை சேகரிப்பதற்கான புதிய வாகனத்தை மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் திங்கள்கிழமை தொடங்கிவைத்... மேலும் பார்க்க

கள்ளக்குறிச்சியில் மக்கா சோள கொள்முதல் நிலையம்: குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மக்காச் சோளம் கொள்முதல் நிலையம் அமைக்க மாவட்ட அளவிலான குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை வைத்தனா். கள்ளக்குறிச்சி மாவட்ட வேளாண்மை மற்றும் உழவா் நலத் ... மேலும் பார்க்க

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்கள்: மாவட்ட ஆட்சியா் ஆய்வு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் நீலமங்கலம், கூவாகம், மூலசமுத்திரம் ஆகிய பகுதிகளில் வியாழக்கிழமை நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்களை மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் நேரில் பாா்வையிட்... மேலும் பார்க்க