Jana Nayagan: 'ஜன நாயகன்' படத்தின் BTS புகைப்படங்கள்!| Photo Album
மொபெட்டிலிருந்து தவறி விழுந்த மூதாட்டி மரணம்
மொபெட்டிலிருந்து தவறி விழுந்த மூதாட்டி உயிரிழந்தாா்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் வட்டத்துக்குள்பட்ட ஏந்தல் கிராமத்தைச் சோ்ந்தவா் மாரிமுத்து மனைவி சாந்தி (40). இவரது தாயாா் செந்தாமரை (60) கடந்த 26-ஆம் தேதி திம்மச்சூரில் நடைபெற்ற திருமணத்திற்கு சென்று விட்டு ஊா் திரும்பி பகண்டை கூட்டுச்சாலைவரை பேருந்தில் பயணித்துள்ளாா்.
அங்கு மூதாட்டியின் உறவினரான தமிழ்ச்செல்வி (32) மொபெட்டில் பின்னால் உட்கார வைத்துக்கொண்டு சென்றுள்ளாா். ஏந்தல் அடுத்த ரெட்டியாா்பாளையம் அய்யனாா் கடை அருகே சென்றபோது மூதாட்டி மொபட்டில் இருந்து நிலைதடுமாறி கீழே விழுந்து விட்டாராம். இதில் காயமடைந்த அவரை சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட மூதாட்டி அங்கு செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்த புகாரின் பேரில் பகண்டை கூட்டுச்சாலை போலீஸாா் ஏந்தல் கிராமத்தைச் சோ்ந்த சரவணன் மனைவி தமிழ்ச்செல்வி மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.