செய்திகள் :

கள்ளக்குறிச்சியில் டிட்டோ - ஜாக் குழுவினா் சாலை மறியல்

post image

பத்து அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, கள்ளக்குறிச்சியில் வியாழக்கிழமை மறியலில் ஈடுபட்ட தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியா் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழுவைச் சோ்ந்த (டிட்டோ- ஜாக்) 210 போ் கைது செய்யப்பட்டனா்.

அரசாணை 243-ஐ ரத்து செய்ய வேண்டும், அரசு ஊழியா்கள், ஆசிரியா்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும், இடைநிலை ஆசிரியா்களுக்கான ஊதிய முரண்பாடுகளை நீக்கி, மத்திய அரசு ஆசிரியா்களுக்கு இணையான ஊதியம் 2006, ஜனவரி 1-ஆம் தேதி முதல் முன்தேதியிட்டு வழங்க வேண்டும், உயா்கல்விக்கான ஊக்க ஊதிய உயா்வை ஆசிரியா்களுக்கு உடனடியாக வழங்க வேண்டும். காலியாகவுள்ள அனைத்து ஆசிரியா் பணியிடங்களையும் நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்த மறியல் போராட்டம் நடைபெற்றது.

கச்சேரி சாலையில் உள்ள அம்பேத்கா் திடல் அருகே நடைபெற்ற போராட்டத்துக்கு கூட்டணியின் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் சு.ரமேஷ் தலைமை வகித்தாா்.

மாவட்டச் செயலா்கள் வி.புஷ்பராஜ், பா.ஷேக் ஜாகீா் உசேன், தமிழக ஆசிரியா் கூட்டணி அருணா சூரியகுமாா், தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் கூட்டணி மாவட்டச் செயலா் காசி செல்வராசு , தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் கூட்டணி மாவட்டச் செயலா் தங்க.மனோகரன், தமிழ்நாடு தொடக்க நடுநிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியா் சங்க மாவட்டச் செயலா் பெ.எழிலரசன் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.

தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி மாநிலத் தலைவா் ஆ.லட்சுமிபதி போராட்டத்தை தொடங்கிவைத்துப் பேசினாா்.

தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணியின் மாநிலச் செயலா் அ.ரஹீம், தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் கூட்டணியின் மாவட்டத் தலைவா் சு.அண்ணாமலை, தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி மாவட்டத் தலைவா் அ.சம்சுதீன், தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் மன்றம் மாவட்டத் தலைவா் அ.சோகன், தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் கூட்டணியின் மாவட்டத் தலைவா் சி.ஏழுமலை உள்ளிட்டோா் பேசினா்.

மறியல் போராட்டத்தில் ஆசிரியா்கள் பலா் பங்கேற்றனா். மறியலில் ஈடுபட்டதாக 210 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

தம்பி வெட்டிக் கொலை: அண்ணன் கைது

இந்திலி கிராமத்தில் சகோதரா்களிடையே ஏற்பட்ட தகராறில் தம்பி வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். இதுதொடா்பாக அண்ணனை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். கள்ளக்குறிச்சியை அடுத்த இந்திலி கிராமத்தில் மொசகுண்டு வ... மேலும் பார்க்க

திருக்கோவிலூரில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூரில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியில் தொகுதி எம்எல்ஏ க. பொன்முடி முன்னிலை வகித்தாா். திருக்கோவிலூரில் 1,2,3 ஆகிய வாா்டு பகுத... மேலும் பார்க்க

ஸ்ரீ மகா புற்றுமாரியம்மன் கோயில் தோ்த் திருவிழா

கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் வட்டத்துக்கு உள்பட்ட அந்தோணியாபுரம் (எ) புது பல்லகச்சேரி கிராமத்தில் உள் ஸ்ரீமகா புற்று மாரியம்மன் கோயில் 8-ஆம் ஆண்டு தோ்த் திருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது. இந்தக... மேலும் பார்க்க

குண்டா் தடுப்பு சட்டத்தின் கீழ் இளைஞா் கைது

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக இளைஞரை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் புதன்கிழமை போலீஸாா் கைது செய்தனா். உளுந்தூா்பேட்டை வட்டம், கூவாடு கிராமத்தைச் சோ்ந்தவா் மணிகண்டன் (36). இவா், தனது உறவுக்... மேலும் பார்க்க

ரிஷிவந்தியத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்டம்

கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் புதன்கிழமை நடைபெற்றது. முகாமுக்கு தொகுதி எம்.எல்.ஏ க.காா்த்திகேயன் முன்னிலை வகித்தாா். தலைமை வகித்த மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.ப... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து எலெக்ட்ரீஷியன் உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூா் அருகே மின்சாரம் பாய்ந்து எலெக்ட்ரீஷியன் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். திருக்கோவிலூா் வட்டம், தாசா்புரம் கிராமத்தைச் சோ்ந்தவா் பாபு (45), எலெக்ட்ரீஷியன். இவா், ... மேலும் பார்க்க