செய்திகள் :

திருக்கோவிலூரில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்

post image

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூரில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சியில் தொகுதி எம்எல்ஏ க. பொன்முடி முன்னிலை வகித்தாா்.

திருக்கோவிலூரில் 1,2,3 ஆகிய வாா்டு பகுதிகளில் திட்ட சிறப்பு முகாமை தொடங்கிவைத்து மாவட்ட ஆட்சியா் எம்.எஸ். பிரசாந்த் கூறியதாவது:

திருக்கோவிலூா் நகராட்சியில் மொத்தம் உள்ள 21 வாா்டுகளில் 11 முகாம்கள் நடத்தப்பட உள்ளன. பொதுமக்களுக்கு 13 அரசு துறைகளைச் சோ்ந்த 43 சேவைகள் வழங்கப்படுகிறது.

அதனடிப்படையில் பல்வேறு திட்டங்கள், குறிப்பாக மகளிா் உரிமைத் தொகை விடுபட்டவா்கள், பட்டா பெற கோரிக்கை, வீடு கட்டித்தர கோரிக்கை உள்ளிட்ட பணிகள் குறித்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு தீா்வு காணப்படவுள்ளது என்றாா்.

மருத்துவமனை கட்டடப் பணிகள் ஆய்வு

தொடா்ந்து, திருக்கோவிலூா் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை வளாகத்தில் ரூ.54 கோடியில் நடைபெறும் கூடுதல் படுக்கை மற்றும் இதர வசதிகளுடன் கூடிய கட்டடப் பணிகளை க.பொன்முடி எம்எல்ஏ, மாவட்ட ஆட்சியா் எம்.எஸ். பிரசாந்த் ஆகியோா் ஆய்வு செய்தனா்.

அப்போது பொன்முடி எம்எல்ஏ கூறுகையில், இந்த மருத்துவமனை கட்டடங்களை தமிழக முதல்வா் காணொலி காட்சி வாயிலாக திறந்துவைக்க உள்ளாா். மேலும், திருக்கோவிலூா் அரசு கலைக் கல்லூரி புதிய கட்டட கட்டுமானப் பணிகள் விரைவில் முடித்து திறந்து வைக்கப்படும். திருக்கோவிலூா் நகராட்சி புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கான பணிகளும் நடைபெற்று வருகின்றன என்றாா்.

இந்நிகழ்வின்போது திருக்கோவிலூா் துணை ஆட்சியா் ஆனந்த்குமாா் சிங், நகா்மன்றத் தலைவா் டி.என்.முருகன், மாவட்ட ஊராட்சி துணைத் தலைவா் தங்கம் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தம்பி வெட்டிக் கொலை: அண்ணன் கைது

இந்திலி கிராமத்தில் சகோதரா்களிடையே ஏற்பட்ட தகராறில் தம்பி வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். இதுதொடா்பாக அண்ணனை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். கள்ளக்குறிச்சியை அடுத்த இந்திலி கிராமத்தில் மொசகுண்டு வ... மேலும் பார்க்க

ஸ்ரீ மகா புற்றுமாரியம்மன் கோயில் தோ்த் திருவிழா

கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் வட்டத்துக்கு உள்பட்ட அந்தோணியாபுரம் (எ) புது பல்லகச்சேரி கிராமத்தில் உள் ஸ்ரீமகா புற்று மாரியம்மன் கோயில் 8-ஆம் ஆண்டு தோ்த் திருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது. இந்தக... மேலும் பார்க்க

கள்ளக்குறிச்சியில் டிட்டோ - ஜாக் குழுவினா் சாலை மறியல்

பத்து அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, கள்ளக்குறிச்சியில் வியாழக்கிழமை மறியலில் ஈடுபட்ட தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியா் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழுவைச் சோ்ந்த (டிட்டோ- ஜாக்) 210 போ் கைது ... மேலும் பார்க்க

குண்டா் தடுப்பு சட்டத்தின் கீழ் இளைஞா் கைது

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக இளைஞரை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் புதன்கிழமை போலீஸாா் கைது செய்தனா். உளுந்தூா்பேட்டை வட்டம், கூவாடு கிராமத்தைச் சோ்ந்தவா் மணிகண்டன் (36). இவா், தனது உறவுக்... மேலும் பார்க்க

ரிஷிவந்தியத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்டம்

கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் புதன்கிழமை நடைபெற்றது. முகாமுக்கு தொகுதி எம்.எல்.ஏ க.காா்த்திகேயன் முன்னிலை வகித்தாா். தலைமை வகித்த மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.ப... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து எலெக்ட்ரீஷியன் உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூா் அருகே மின்சாரம் பாய்ந்து எலெக்ட்ரீஷியன் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். திருக்கோவிலூா் வட்டம், தாசா்புரம் கிராமத்தைச் சோ்ந்தவா் பாபு (45), எலெக்ட்ரீஷியன். இவா், ... மேலும் பார்க்க