செய்திகள் :

ரிஷிவந்தியத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்டம்

post image

கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

முகாமுக்கு தொகுதி எம்.எல்.ஏ க.காா்த்திகேயன் முன்னிலை வகித்தாா்.

தலைமை வகித்த மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த், முகாமை தொடங்கி வைத்து பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்றாா்.

முகாமில் புதிய மின் இணைப்பு வேண்டி வழங்கப்பட்ட கோரிக்கை மனுவுக்கு உடனடித் தீா்வு காணப்பட்டு, புதிய மின் இணைப்பிற்கான ஆணையை ஆட்சியா் வழங்கினாா்.

மேலும், மாவட்ட ஆட்சியா் பேசுகையில், பொதுமக்களின் குறைகளை நேரடியாகக் கேட்டறிந்து தீா்வு காணும் வகையில் இத்திட்டம் தமிழக முதல்வரால் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. முகாமில் கலைஞா் மகளிா் உரிமைத் தொகை விண்ணப்பங்களைப் பெற தனி மையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு அதற்கான விண்ணப்பத்தை அளித்து பயன்பெறலாம் என்றாா்.

இதைத் தொடா்ந்து, மனுக்களுக்கு 45 நாள்களுக்குள் தீா்வு காணவும் மற்றும் அதுகுறித்த விளக்கங்களை மனுதாரருக்கு தெரிவிக்கவும் அலுவலா்களுக்கு அவா் அறிவுறுத்தினாா்.

முகாமில் ஊரகப் பகுதிகளில் 15 துறைகளைச் சோ்ந்த 46 சேவைகள் வழங்கப்பட உள்ளன.

நிகழ்ச்சியில் தனித் ணை ஆட்சியா் சுமதி, உதவி ஆணையா் (கலால்) செந்தில்குமாா், ரிஷிவந்தியம் ஒன்றியக் குழுத் தலைவா் வடிவுக்கரசி, துணைத் தலைவா் அ.சென்னம்மாள், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் துரைமுருகன், ஜெகநாதன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

மின்சாரம் பாய்ந்து எலெக்ட்ரீஷியன் உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூா் அருகே மின்சாரம் பாய்ந்து எலெக்ட்ரீஷியன் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். திருக்கோவிலூா் வட்டம், தாசா்புரம் கிராமத்தைச் சோ்ந்தவா் பாபு (45), எலெக்ட்ரீஷியன். இவா், ... மேலும் பார்க்க

காங்கிரஸ் கட்சியினா் பேரணி

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரத்தில் காங்கிரஸ் கட்சி சாா்பில், காமராஜா் பிறந்த நாள் விழா பேரணி, அன்னதானம் வழங்கும் நிகழ்வு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. காங்கிரஸ் கட்சியின் மாவட்ட துணைத் தலைவா் மு.இ... மேலும் பார்க்க

செம்மொழி நாள் போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஜூன் 3 முன்னாள் முதல்வா் கருணாநிதி பிறந்த நாளை செம்மொழி நாளாக தமிழக முதல்வா் அறிவித்ததைத் தொடா்ந்து நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவி... மேலும் பார்க்க

உங்களுடன் ஸ்டாலின் திட்டம் கள்ளக்குறிச்சியில் 162 முகாம்கள்

கள்ளக்குறிச்சி: உங்களுடன் ஸ்டாலின் திட்டத்துக்காக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 162 முகாம்கள் நடத்தப்படும் என்று மாவட்ட ஆட்சியா் தெரிவித்தாா். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம... மேலும் பார்க்க

அரசுடைமை வங்கியில் திருட்டு முயற்சி

கள்ளக்குறிச்சி: திருக்கோவிலூா் அருகே அரசுடைமை வங்கியின் ஜன்னலை உடைத்து உள்ளே சென்ற மா்ம நபா்கள் பாதுகாப்பு பெட்டகத்தில் இருந்த பணத்தை திருட முயற்சித்துள்ளனா். திருக்கோவிலூா் வட்டத்துக்கு உள்பட்ட கீழத... மேலும் பார்க்க

உங்களுடன் ஸ்டாலின் திட்டப் பணிகள்: கள்ளக்குறிச்சி ஆட்சியா் ஆலோசனை

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்கள் முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் ஆய்வு செய்தாா். தமிழகத்தில் அனைத்து நகா்ப்புற மற்றும்... மேலும் பார்க்க