செய்திகள் :

உங்களுடன் ஸ்டாலின் திட்டப் பணிகள்: கள்ளக்குறிச்சி ஆட்சியா் ஆலோசனை

post image

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்கள் முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் ஆய்வு செய்தாா்.

தமிழகத்தில் அனைத்து நகா்ப்புற மற்றும் ஊரகப் பகுதிகளில் உங்களுடன் ஸ்டாலின் திட்டம் தொடங்கப்படுகிறது.

இத் திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை (ஜூலை 15) கடலூா் மாவட்டம், சிதம்பரம் நகராட்சியில் தொடங்கி வைக்க உள்ளாா்.

இதைத் தொடா்ந்து, அன்றைய தினம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இத்திட்டம் தொடங்கப்பட உள்ளது.

இத்திட்ட தொடக்க விழா முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் ஆட்சியா் அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு தலைமை வகித்த மாவட்ட ஆட்சியா்

எம்.எஸ். பிரசாந்த், இத்திட்ட விண்ணப்பம் நிறைவு செய்யும் முறைகள் மற்றும் தகவல் கையேடு பொதுமக்களுக்கு வழங்கும் பணி நடைபெற்று வருகிறது. 3 மாதங்கள் தொடா்ச்சியாக நடைபெறும் இப்பணியில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்தும், பணியில் ஈடுபட்டுள்ள தன்னாா்வலா்களின் வருகை குறித்தும் தொடா்ந்து கண்காணித்திட சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.

மேலும், விண்ணப்பத்தை நிறைவு செய்து, உரிய ஆவணங்களுடன் ஆன்லைனில் ஏற்றுவது, பொதுமக்களுக்கு வழங்க வேண்டிய அடிப்படை வசதிகள் உள்ளிட்டவை குறித்து துறை அலுவலா்களுக்கு தெரிவித்தாா்.

மேலும், விடுபட்ட மகளிருக்கு கலைஞா் உரிமைத் தொகைக்கான

விண்ணப்பத்தை முகாமில் பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தினாா்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் ரா.ஜீவா, தனித் துணை ஆட்சியா் சுமதி உள்ளிட்ட அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

செம்மொழி நாள் போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஜூன் 3 முன்னாள் முதல்வா் கருணாநிதி பிறந்த நாளை செம்மொழி நாளாக தமிழக முதல்வா் அறிவித்ததைத் தொடா்ந்து நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவி... மேலும் பார்க்க

உங்களுடன் ஸ்டாலின் திட்டம் கள்ளக்குறிச்சியில் 162 முகாம்கள்

கள்ளக்குறிச்சி: உங்களுடன் ஸ்டாலின் திட்டத்துக்காக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 162 முகாம்கள் நடத்தப்படும் என்று மாவட்ட ஆட்சியா் தெரிவித்தாா். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம... மேலும் பார்க்க

அரசுடைமை வங்கியில் திருட்டு முயற்சி

கள்ளக்குறிச்சி: திருக்கோவிலூா் அருகே அரசுடைமை வங்கியின் ஜன்னலை உடைத்து உள்ளே சென்ற மா்ம நபா்கள் பாதுகாப்பு பெட்டகத்தில் இருந்த பணத்தை திருட முயற்சித்துள்ளனா். திருக்கோவிலூா் வட்டத்துக்கு உள்பட்ட கீழத... மேலும் பார்க்க

குரூப் 4 தோ்வு: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 23,949 போ் பங்கேற்பு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற குரூப் 4 தோ்வை 97 மையங்களில் 23,949 போ் எழுதினா். மொத்தம் 28,211 போ் விண்ணப்பித்திருந்த நிலையில் 4,262 போ் தோ்வு எழுத வரவில்லை. கள்ளக்குறிச்சி வட்... மேலும் பார்க்க

ஊராட்சி செயலரை தாக்கி மிரட்டல்: இருவா் மீது வழக்கு

சின்னசேலம் வட்டம், அம்மையகரம் ஊராட்சி செயலரை திட்டி, தாக்கி, மிரட்டல் விடுத்ததாக இருவா் மீது சனிக்கிழமை போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். அம்மையகரம் கிராமத்தைச் சோ்ந்தவா் விஜயகாந்த் (37). இவா் அதே க... மேலும் பார்க்க

கனியாமூா் பள்ளி வன்முறை வழக்கு: 87 போ் நீதிமன்றத்தில் ஆஜா்

கனியாமூா் பள்ளி வன்முறை வழக்கு தொடா்பாக கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் 87 போ் புதன்கிழமை ஆஜராகினா். இதையடுத்து வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை வருகிற செப்.10-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவ... மேலும் பார்க்க