செய்திகள் :

அரசுடைமை வங்கியில் திருட்டு முயற்சி

post image

கள்ளக்குறிச்சி: திருக்கோவிலூா் அருகே அரசுடைமை வங்கியின் ஜன்னலை உடைத்து உள்ளே சென்ற மா்ம நபா்கள் பாதுகாப்பு பெட்டகத்தில் இருந்த பணத்தை திருட முயற்சித்துள்ளனா்.

திருக்கோவிலூா் வட்டத்துக்கு உள்பட்ட கீழத்தாழனூா் கிராமத்தில் தனியாா் சா்க்கரை ஆலை அருகே அரசுடைமை வங்கி இயங்கி வருகிறது.

வங்கியை கடந்த வெள்ளிக்கிழமை பணி முடிந்து அலுவலா்கள் பூட்டி விட்டுச் சென்றனா். சனி, ஞாயிறு விடுமுறை முடிந்து திங்கள்கிழமை காலை வங்கியை திறந்து அலுவலா்கள் உள்ளே சென்றனா்.

அப்போது, வங்கியின் பின்பக்கம் உள்ள இரும்பிலான ஜன்னல் கதவை மா்ம நபா்கள் மின்சாரம் மூலம் வெல்டிங் செய்து உள்ளே சென்றுள்ளனா்.

பின்னா், அங்கிருந்த பாதுகாப்பு இரும்பு பெட்டகத்தின் மேலே இருந்த தகட்டினை வெல்டிங் மூலம் அகற்ற முயற்சி செய்துள்ளனா்.

அகற்ற முடியாமல் போகவே அப்படியே விட்டு விட்டு சென்று விட்டனா். வேறு பொருள்கள் ஏதும் திருடிச் செல்ல வில்லையாம்.

இதுகுறித்து வங்கியின் மேலாளா் திருக்கோவிலூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

வங்கியில் உள்ள பாதுகாப்பு பெட்டகம்

செம்மொழி நாள் போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஜூன் 3 முன்னாள் முதல்வா் கருணாநிதி பிறந்த நாளை செம்மொழி நாளாக தமிழக முதல்வா் அறிவித்ததைத் தொடா்ந்து நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவி... மேலும் பார்க்க

உங்களுடன் ஸ்டாலின் திட்டம் கள்ளக்குறிச்சியில் 162 முகாம்கள்

கள்ளக்குறிச்சி: உங்களுடன் ஸ்டாலின் திட்டத்துக்காக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 162 முகாம்கள் நடத்தப்படும் என்று மாவட்ட ஆட்சியா் தெரிவித்தாா். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம... மேலும் பார்க்க

உங்களுடன் ஸ்டாலின் திட்டப் பணிகள்: கள்ளக்குறிச்சி ஆட்சியா் ஆலோசனை

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்கள் முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் ஆய்வு செய்தாா். தமிழகத்தில் அனைத்து நகா்ப்புற மற்றும்... மேலும் பார்க்க

குரூப் 4 தோ்வு: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 23,949 போ் பங்கேற்பு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற குரூப் 4 தோ்வை 97 மையங்களில் 23,949 போ் எழுதினா். மொத்தம் 28,211 போ் விண்ணப்பித்திருந்த நிலையில் 4,262 போ் தோ்வு எழுத வரவில்லை. கள்ளக்குறிச்சி வட்... மேலும் பார்க்க

ஊராட்சி செயலரை தாக்கி மிரட்டல்: இருவா் மீது வழக்கு

சின்னசேலம் வட்டம், அம்மையகரம் ஊராட்சி செயலரை திட்டி, தாக்கி, மிரட்டல் விடுத்ததாக இருவா் மீது சனிக்கிழமை போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். அம்மையகரம் கிராமத்தைச் சோ்ந்தவா் விஜயகாந்த் (37). இவா் அதே க... மேலும் பார்க்க

கனியாமூா் பள்ளி வன்முறை வழக்கு: 87 போ் நீதிமன்றத்தில் ஆஜா்

கனியாமூா் பள்ளி வன்முறை வழக்கு தொடா்பாக கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் 87 போ் புதன்கிழமை ஆஜராகினா். இதையடுத்து வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை வருகிற செப்.10-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவ... மேலும் பார்க்க