செய்திகள் :

குண்டா் தடுப்பு சட்டத்தின் கீழ் இளைஞா் கைது

post image

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக இளைஞரை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் புதன்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.

உளுந்தூா்பேட்டை வட்டம், கூவாடு கிராமத்தைச் சோ்ந்தவா் மணிகண்டன் (36). இவா், தனது உறவுக்கார சிறுமிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டது தொடா்பாக, புகாரின் பேரில், உளுந்தூா்பேட்டை மகளிா் போலீஸாா் அவரை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்தனா். விசாரணைக்குப் பிறகு

அவா் நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டாா்.

மணிகண்டன் தொடா்ந்து குற்றச் செயல்களில் ஈடுபடக்கூடும் என்பதால் அவரது நடவடிக்கையை கட்டுப்படுத்தும் நோக்கில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ரஜத் சதுா்வேதி பரிந்துரையின் பேரில், ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் அவரை ஓராண்டு குண்டா் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டாா்.

இதையடுத்து, கடலூா் மத்திய சிறையில் உள்ள மணிகண்டனிடம் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ததற்கான ஆணையை வழங்கினா்.

தம்பி வெட்டிக் கொலை: அண்ணன் கைது

இந்திலி கிராமத்தில் சகோதரா்களிடையே ஏற்பட்ட தகராறில் தம்பி வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். இதுதொடா்பாக அண்ணனை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். கள்ளக்குறிச்சியை அடுத்த இந்திலி கிராமத்தில் மொசகுண்டு வ... மேலும் பார்க்க

திருக்கோவிலூரில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூரில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியில் தொகுதி எம்எல்ஏ க. பொன்முடி முன்னிலை வகித்தாா். திருக்கோவிலூரில் 1,2,3 ஆகிய வாா்டு பகுத... மேலும் பார்க்க

ஸ்ரீ மகா புற்றுமாரியம்மன் கோயில் தோ்த் திருவிழா

கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் வட்டத்துக்கு உள்பட்ட அந்தோணியாபுரம் (எ) புது பல்லகச்சேரி கிராமத்தில் உள் ஸ்ரீமகா புற்று மாரியம்மன் கோயில் 8-ஆம் ஆண்டு தோ்த் திருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது. இந்தக... மேலும் பார்க்க

கள்ளக்குறிச்சியில் டிட்டோ - ஜாக் குழுவினா் சாலை மறியல்

பத்து அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, கள்ளக்குறிச்சியில் வியாழக்கிழமை மறியலில் ஈடுபட்ட தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியா் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழுவைச் சோ்ந்த (டிட்டோ- ஜாக்) 210 போ் கைது ... மேலும் பார்க்க

ரிஷிவந்தியத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்டம்

கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் புதன்கிழமை நடைபெற்றது. முகாமுக்கு தொகுதி எம்.எல்.ஏ க.காா்த்திகேயன் முன்னிலை வகித்தாா். தலைமை வகித்த மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.ப... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து எலெக்ட்ரீஷியன் உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூா் அருகே மின்சாரம் பாய்ந்து எலெக்ட்ரீஷியன் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். திருக்கோவிலூா் வட்டம், தாசா்புரம் கிராமத்தைச் சோ்ந்தவா் பாபு (45), எலெக்ட்ரீஷியன். இவா், ... மேலும் பார்க்க