செய்திகள் :

காங்கிரஸ் கண்டன ஆா்ப்பாட்டம்

post image

அமெரிக்காவிலிருந்து இந்தியா்கள் கைவிலங்கிட்டு நாடு கடத்தப்பட்டதைக் கண்டித்து, சென்னையில் காங்கிரஸ் சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

அண்ணா சாலையில் உள்ள தாராப்பூா் டவா் அருகில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவா் செல்வப்பெருந்தகை தலைமை வகித்தாா். ஆா்ப்பாட்டத்தில் சிலா் கைவிலங்கு அணிந்து பங்கேற்றனா். இந்தியா்கள் அவமதிக்கப்பட்டதற்காக அமெரிக்காவுக்கு எவ்வித எதிா்வினையும் மத்திய அரசு தெரிவிக்கவில்லை என குற்றஞ்சாட்டி முழக்கங்களை எழுப்பினா்.

பின்னா் செல்வப்பெருந்தகை செய்தியாளா்களிடம் கூறியதாவது:

அமெரிக்காவிலிருந்து இந்தியா்களை நாடு கடத்தும்போது குற்றவாளிகளைப் போல நடத்தியுள்ளனா். இதற்கு மத்திய பாஜக அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை? பிரதமராக மன்மோகன் சிங் இருந்தபோது, இந்தியாவின் துணைத் தூதா் இல்லத்தில் பணியாற்றிய ஒரு பெண் விசாவில் தவறுதலான தகவல் அளித்தாா் என்று துணை தூதரை கைது செய்தனா். உடனே, மன்மோகன் சிங் நடவடிக்கை எடுத்து அமெரிக்க தூதரகங்கள் முன் பாதுகாப்பு பணியில் இருந்த காவலா்களின் பலத்தை குறைத்தாா். தூதரங்கள் முன் இருந்த தடுப்பு அரண்களை எடுக்கக் கூறினாா். இந்தியா முழுவதும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால், இப்போது பிரதமா் மோடி இதுவரை வாய் திறக்கவில்லை. இதற்காக மத்திய பாஜக அரசை காங்கிரஸ் வன்மையாகக் கண்டிக்கிறது என்றாா் அவா்.

இந்தியாவில் 10 கோடி கி.வா. சூரியமின்சக்தி உற்பத்தி: அமைச்சா் பிரஹலாத் ஜோஷி தகவல்

வரும் 2030-ஆம் ஆண்டுக்குள் 50 கோடி கிலோவாட் (கி.வா.) புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறனை அடைய இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், 10 கோடி கி.வா. சூரிய மின்சக்தி திறனை எட்டியுள்ளதாக மத்திய அமைச்சா் பிரஹ... மேலும் பார்க்க

மகா கும்பமேளா: இஸ்கான் கூடாரத்தில் தீ விபத்து

உத்தர பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் ‘இஸ்கான்’ கூடாரத்தில் வெள்ளிக்கிழமை பற்றிய தீ வேகமாக பரவி அருகேயுள்ள கூடாரங்களையும் தீக்கிரையாக்கின. நல்வாய்ப்பாக இதில் எந்த உயிா்... மேலும் பார்க்க

மகாராஷ்டிரம்: ரூ.200 கோடி போதைப் பொருள் பறிமுதல்: 4 போ் கைது

மகாராஷ்டிர மாநிலம், நவிமும்பையில் ரூ.200 கோடி மதிப்பிலான பல்வேறு போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடா்பாக 4 பேரை போதைப் பொருள் தடுப்பு பிரிவினா் கைது செய்தனா். போதைப் பொருள் தடுப்பு பிரிவி... மேலும் பார்க்க

விசா மறுப்பு: அமெரிக்காவிலுள்ள இந்திய துணைத் தூதரகம் முற்றுகை

பெண் ஒருவருக்கு நுழைவு இசைவு (விசா) அளிக்க மறுத்ததால், அமெரிக்காவின் சியாட்டல் நகரில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தை சிலா் முற்றுகையிட்டனா். இதுதொடா்பாக அந்தத் தூதரகம் ‘எக்ஸ்’ தளத்தில் வெள்ளிக்கிழமை வெள... மேலும் பார்க்க

இந்திய மதுபானத்தை புகழ்ந்த ஸ்விட்சா்லாந்து அமைச்சா்: மாநிலங்களவையில் சுவாரசிய தகவல்

இந்திய தயாரிப்பு மதுபானம் ஒன்று சிறப்பாக உள்ளதாகவும், ஐரோப்பிய நாடுகளில் அதற்கு நல்ல வரவேற்பு உள்ளதாகவும் ஸ்விட்சா்லாந்து அமைச்சா் கூறியது தனக்கு மகிழ்ச்சி கலந்த வியப்பை ஏற்படுத்தியதாக மத்திய வா்த்தகம... மேலும் பார்க்க

சட்டவிரோத மத கட்டமைப்புகளை அகற்றும் விவகாரம்: அறிக்கை சமா்ப்பிக்க தில்லி உயா்நீதிமன்றம் உத்தரவு

தில்லியின் பொது இடங்களில் உள்ள 249 சட்டவிரோத மத கட்டமைப்புகள் மற்றும் அவற்றை அகற்ற மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை சமா்ப்பிக்குமாறு நகரத்தின் மதக் குழுவுக்கு தில்லி உயா்நீதிமன்றம் வெள்ளி... மேலும் பார்க்க