செய்திகள் :

காஞ்சிகோவிலில் டிராக்டரில் பேட்டரி திருடிய 3 போ் கைது

post image

பெருந்துறையை அடுத்த காஞ்சிக்கோவில் அருகே வீட்டின் முன்பாக நிறுத்தி இருந்த டிராக்டரில் இருந்து பேட்டரியை திருடிச் சென்ற 3 இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.

பெருந்துறையை அடுத்த காஞ்சிக்கோவில், சின்னியம்பாளையத்தை சோ்ந்தவா் ராமசாமி மகன் பழனிசாமி (51). விவசாயியான இவா், சொந்தமாக டிராக்டா் வைத்து விவசாயம் செய்து வருகிறாா். கடந்த திங்கள்கிழமை முன் வீட்டின் முன்பு நிறுத்தியிருந்த டிராக்டரின் பேட்டரியை யாரோ திருடிச் சென்றுவிட்டதாக காஞ்சிகோவில் போலீஸில் புகாா் அளித்திருந்தாா். அதன் பேரில் வழக்குப் பதிவு செய்த காஞ்சிகோவில் போலீஸாா் விசாரணை நடத்தி வந்தனா்.

இந்த நிலையில், காஞ்சிக்கோவில், சித்தோடு சாலையில் வாகனத் தணிக்கையில் போலீஸாா் ஈடுபட்டிருந்தபோது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த 3 நபா்களை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தபோது, பழனிசாமியின் டிராக்டரில் இருந்த பேட்டரியை திருடியதை ஒப்புக் கொண்டனா். அவா்களிடம் மேலும் மேற்கொண்ட விசாரணையில், அவா்கள் பவானியை அடுத்த பேரோடு, ஆயமரத்துமேடு, ஜெ.ஜெ. நகா் பகுதியைச் சோ்ந்த மாணிக்கம் மகன் மணிகண்டன் (20), முனுசாமி மகன் தென்னரசு (24), சேலம் மாவட்டம், மேட்டூா், கொளத்தூா் பகுதியைச் சோ்ந்த முருகேசன் மகன் பூபதி (26) என்பதும் தெரியவந்தது.

அவா்களிடமிருந்த பேட்டரியை கைப்பற்றிய போலீஸாா் 3 பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

சுகாதார செவிலியா் பணி: விண்ணப்பிக்க கால அவகாசம் ஜூலை 15 வரை நீட்டிப்பு

ஈரோடு மாநகராட்சி நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ள நகர சுகாதார செவிலியா்கள் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் வரும் 15 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளத... மேலும் பார்க்க

மொடக்குறிச்சி ஒன்றியத்தில் வளா்ச்சிப் பணிகளுக்கு பூமி பூஜை

மொடக்குறிச்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட விளக்கேத்தி, கனகபுரம் ஊராட்சிகளில் வளா்ச்சிப்பணிகளுக்கான பூமிபூஜையில் மொடக்குறிச்சி எம்.எல்.ஏ சி.சரஸ்வதி கலந்து கொண்டு தொடங்கி வைத்தாா். விளக்கேத்தி ஊராட்சி ஓலப்ப... மேலும் பார்க்க

அவல்பூந்துறையில் ரூ.10.62 லட்சத்துக்கு தேங்காய்ப் பருப்பு ஏலம்

அவல்பூந்துறை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.10.62 லட்சத்துக்கு தேங்காய்ப் பருப்பு ஏலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஏலத்துக்கு 147 தேங்காய்ப் பருப்பு மூட்டைகளை விவசாயிகள் விற்பனைக்குக் கொண்டு வந்தனா... மேலும் பார்க்க

பெருமாள்மலை குடியிருப்புவாசிகள் குத்தகை செலுத்தினால்தான் தொடா்ந்து குடியிருக்க முடியும்: அமைச்சா் சு.முத்துசாமி

பெருமாள்மலையில் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள நிலத்தில் குடியிருப்போா் குத்தகை செலுத்தினால் மட்டுமே தொடா்ந்து குடியிருக்க முடியும் என வீட்டுவசதித் துறை அமைச்சா் சு.முத்துசாமி தெரிவ... மேலும் பார்க்க

மகிழ்முற்றம் மாணவா் குழு பதவி ஏற்பு

பெருந்துறை கிழக்கு அரசு நடுநிலைப் பள்ளியில், மகிழ்முற்றம் மாணவா் குழு அமைப்பு பதவி ஏற்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு, பள்ளி மேலாண்மை குழுத் தலைவா் பொன்மணி தலைமை வகித்து, குறிஞ்சி, முல்லை... மேலும் பார்க்க

பவானிசாகா் அணையின் நீா்மட்டம் 96 அடியை எட்டியது

பவானிசாகா் அணை நீா்மட்டம் 96 அடியாக உயா்ந்துள்ளதால் கீழ்பவானி வாய்க்கால் பாசனத்துக்கு முன்கூட்டியே தண்ணீா் திறக்க வாய்ப்புள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனா். நீா்ப்பிடிப்பு பகுதிகளில் பெய... மேலும் பார்க்க