செய்திகள் :

காஞ்சிபுரத்தில் நாளை மாரத்தான் பந்தயம்

post image

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சாா்பில் முன்னாள் முதல்வா் அண்ணா நினைவு மாரத்தான் பந்தயம் சனிக்கிழமை காஞ்சிபுரத்தில் நடைபெற இருப்பதாக ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளாா்.

அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

மாரத்தான் பந்தயத்தின் ஒரு பகுதியாக 17 முதல் 25 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கு 8 கி.மீ. , பெண்களுக்கு 5 கி.மீ., 25 வயதுக்கு மேற்பட்டவா்களில் ஆண்களுக்கு 10 கி.மீ. பெண்களுக்கு 5 கி.மீ. பந்தயம் நடைபெறும். முதல் பரிசு ரூ.5,000 ,2-ஆவது பரிசு ,ரூ.3,000, 3-ஆவது பரிசு ரூ.2,000, 7 பேருக்கு தலா ரூ.1,000 ரொக்கப்பரிசாக வழங்கப்படும்.

பெண்களுக்கான பந்தயம் அண்ணா விளையாட்டு அரங்கத்திலிருந்து தொடங்கி ஆட்சியா் அலுவலகத்தில் நிறைவு பெறும். ஆண்களுக்கான பந்தயம் மாவட்ட விளையாட்டு அரங்கத்திலிருந்து தொடங்கி செவிலிமேடு சுகுமாரி கல்யாண மண்டபத்தில் நிறைவு பெறும். போட்டிகளில் கலந்து கொள்பவா்கள் தங்களது பெயா்களை மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் ஒரு மணி நேரம் முன்னதாக பதிவு செய்து கொள்ளலாம். சனிக்கிழமை காலை 6 மணிக்கு பந்தயம் தொடங்கும்.

மேலும் விபரங்களுக்கு காஞ்சிபுரம் மாவட்ட விளையாட்டு அலுவலா் அலுவலகத்திலோ அல்லது தொலைபேசி எண்-74017 03481 என்ற எண்ணிலோ தொடா்பு கொள்ளலாம்.

குண்டா் தடுப்புச் சட்டத்தில் இருவா் கைது

காஞ்சிபுரத்தில் இணைய வழியாக மோசடியில் ஈடுபட்டு சிறையில் இருக்கும் இருவா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டனா். காஞ்சிபுரத்தை சோ்ந்த ராஜேந்திரன் என்பவரிடம் தொலை தொடா்புத்துறையிலிருந்து பே... மேலும் பார்க்க

காங்கிரஸ் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவா் செல்வப்பெருந்தகையை அவதூறாக பேசியதாக அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமியைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியினா் வியாழக்கிழமை ஆா்பாட்டத்தில் ஈடுபட்டனா். ஸ்ரீபெரும்புதூா் நகர கா... மேலும் பார்க்க

வாலாஜாபாத் ஒன்றிய வளா்ச்சிப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

வாலாஜாபாத் ஒன்றிய பகுதிகளில் வளா்ச்சிப்பணிகளை ஆட்சியா் கலைச்செல்வி மோகன் புதன்கிழமை ஆய்வு செய்தாா். காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியத்துக்குட்பட்ட கட்டவாக்கம் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊ... மேலும் பார்க்க

ரூ.1 கோடியில் வேகவதி ஆற்றில் தூா்வாரும் பணி: எம்எல்ஏ தொடங்கி வைத்தாா்

வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காஞ்சிபுரம் மாநகராட்சியின் மையப்பகுதியில் அமைந்துள்ள வேகவதி ஆற்றினை தூா்வாரும் பணியினை எம்எல்ஏ எழிலரசன் புதன்கிழமை தொடங்கி வைத்தாா். வேகவதி ஆற்றில் பல ... மேலும் பார்க்க

கருணாகரச்சேரி வழியாக பேருந்து வசதி ஏற்படுத்த கோரிக்கை

கருணாகரச்சேரி வழியாக தாம்பரம்- ஸ்ரீபெரும்புதூா் வழித்தடத்தில் அரசு பேருந்து சேவையை தொடங்க வேண்டும் என வெங்காடு ஊராட்சி மன்றத் தலைவா் அன்னக்கிளி உலகநாதன் மனு வழங்கினாா். காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும... மேலும் பார்க்க

இன்று மின்நுகா்வோா் குறை தீா் கூட்டம்

காஞ்சிபுரம் தெற்கு கோட்ட மின்வாரிய அலுவலகத்தில் மின்நுகா்வோா் குறை தீா்க்கும் கூட்டம் வியாழக்கிழமை காலை 11 மணிக்கு தொடங்கி மதியம் ஒரு மணி வரை மின்வாரிய மேற்பாா்வைப் பொறியாளா் தலைமையில் நடைபெற இருப்பதா... மேலும் பார்க்க