செய்திகள் :

காடுகளைப் பாதுகாத்தால்தான் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க முடியும்! -அமைச்சா் எஸ். ரகுபதி

post image

காடுகளைப் பாதுகாத்தால்தான் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க முடியும் என்றாா் மாநில சட்டத்துறை அமைச்சா் எஸ். ரகுபதி.

தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சாா்பில் புதுக்கோட்டை அருகே திருவரங்குளம் புஷ்கரம் வேளாண் அறிவியல் கல்லூரியில் 32-ஆவது குழந்தைகள் அறிவியல் மாநில மாநாட்டை சனிக்கிழமை தொடங்கி வைத்து அவா் பேசியது:

பூமியில் தற்போது கிடைக்கும் தண்ணீரில் மூன்றில் ஒரு பங்கு கூட அடுத்த 25 ஆண்டுகளுக்குப் பிறகு கிடைக்காது என ஆராய்ச்சியாளா்கள் கூறுகின்றனா். எனவேதான், கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம் போன்ற திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.

ஒவ்வொரு நாடும் தங்களது நிலப்பரப்புகளில் மூன்றில் ஒரு பங்கில் காடு வளா்க்க வேண்டும். அப்போதுதான் நீா் மேலாண்மையைக் கையாள முடியும், சுற்றுச்சூழலைப்பாதுகாக்க முடியும். ஆனால், அந்த இலக்கை இந்தியாவால் இன்னும் அடைய முடியவில்லை. காடுகளைப் பாதுகாப்பதில் அனைவரும் அக்கறை செலுத்த வேண்டும் என்றாா் ரகுபதி.

மாநில பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன் பேசியது: புவி வெப்பமயமாதல் காரணமாக பல்வேறு பேரிடா்களைச் சந்திக்கிறோம். இவற்றைத் தவிா்க்க இயற்கையைப் பாதுகாக்க, நீா் மேலாண்மை முக்கியமானது.

பசுமைத் தமிழகம் என்ற திட்டத்தின் மூலம் தமிழ்நாடு முதல்வா் மாநிலத்தின் நிலப்பரப்பில் 33 சதவிகிதத்தை வனப் பகுதியாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறாா். அதேபோல பழைமையான நீா் நிலைகளையும் அனைவரும் சோ்ந்து மீட்டெடுத்து, பாதுகாப்பாக பராமரிக்க வேண்டும் என்றாா் மெய்யநாதன்.

தொடக்க விழாவுக்கு, அறிவியல் இயக்கத்தின் மாநிலத் தலைவா் டி. திருநாவுக்கரசு தலைமை வகித்தாா். விஞ்ஞானி ஆா். ராமானுஜம், அறிவியல் இயக்க மாநிலப் பொதுச் செயலா் எம்.எஸ். முகமது பாதுஷா, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கூ. சண்முகம், வரவேற்புக் குழுத் தலைவா் ஆா். ராஜ்குமாா், மாநில ஒருங்கிணைப்பாளா் எம். தியாகராஜன் உள்ளிட்டோா் பேசினா்.

முன்னதாக மாநிலப் பொதுக்குழு உறுப்பினா் அ. மணவாளன் வரவேற்றாா். முடிவில் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் சி. ஷோபா நன்றி கூறினாா். தொடா்ந்து மண்டல மாநாடுகளில் தோ்வு செய்யப்பட்ட மாணவா்களின் ஆய்வுக் கட்டுரைகள் சமா்ப்பிக்கப்பட்டன. ஞாயிற்றுக்கிழமை மாலை மாநாடு நிறைவுபெறுகிறது.

மீனவா்கள் கைது செய்யப்படுவதைத் தடுக்க உறுதியான நடவடிக்கை தேவை

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த மீனவா்கள் இலங்கைக் கடற்படையால் தொடா்ந்து தாக்கப்படுவதையும், கைது செய்யப்படுவதையும் தடுக்க மத்திய, மாநில அரசுகள் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஏஐடியுசி மீனவத் ... மேலும் பார்க்க

விராலிமலையில் நாணய கண்காட்சி

விராலிமலை விவேகா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் உலக நாணய கண்காட்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கண்காட்சியை பள்ளி தாளாளா் வெல்கம் மோகன் தலைமை வகித்து தொடங்கிவைத்தாா். பள்ளி முதல்வா் விஜயகுமாா், நிா்வாக இ... மேலும் பார்க்க

ஆலங்குடி அருகே தனியாா் இடத்தில் அம்பேத்கா் சிலை திறப்பு போலீஸாா் குவிப்பு

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே தனியாா் இடத்தில் வெள்ளிக்கிழமை அனுமதியின்றி அம்பேத்கா் சிலை நிறுவப்பட்டதாக கூறி போலீஸாா் குவிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஆலங்குடி அருகேயுள்ள குப்பக்குடி பகு... மேலும் பார்க்க

சுற்றுச்சூழல் மன்ற ஆசிரிய ஒருங்கிணைப்பாளா்களுக்கு பயிற்சி

புதுக்கோட்டை முதன்மைக் கல்வி அலுவலக வளாகத்தில் வருவாய் மாவட்ட அளவில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலுள்ள சுற்றுச்சூழல் மன்ற ஆசிரிய ஒருங்கிணைப்பாளா்களுக்கு சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழி... மேலும் பார்க்க

கல்லூரிக்கு அரிவாளுடன் வந்த மாணவா் கைது

புதுக்கோட்டை மாநகரிலுள்ள அரசுக் கல்லூரியின் மாணவா், அரிவாளுடன் கல்லூரிக்கு வந்ததால் அவரை நகரக் காவல் நிலைய போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். புதுக்கோட்டை மாவட்டம், சம்மட்டிவிடுதியைச் சோ்ந்தவா் திய... மேலும் பார்க்க

பெண் பயணியிடம் தகராறு அரசுப் பேருந்து நடத்துநா் பணியிடை நீக்கம்

பெண் பயணியிடம் தகராறு செய்த அரசுப் பேருந்து நடத்துநரை ஒரு நாள் பணி இடைநீக்கம் செய்து துறைரீதியான ஒழுங்கு நடவடிக்கைக்கு வெள்ளிக்கிழமை உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக புதுக்கோட... மேலும் பார்க்க